India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய மருத்துவ சங்கம் மற்றும் கடலூர் சிறகுகள் குழு இணைந்து நடத்தும் மாபெரும் ரத்ததான முகாம், வரும் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 1 மணி வரை, கடலூர் அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கியில் நடைபெறுகிறது. இந்த ரத்ததான முகாமில் தன்னார்வலர்கள் மற்றும் சமூக சேவகர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு ரத்ததானம் வழங்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
கடலூர் முதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (29/05/2024) எள் வரத்து 2.20 மூட்டை, நெல் (சின்னப் பொன்னி) வரத்து 14.50 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் கடலூர் முதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு இன்று விற்பனைக்கு வரவில்லை.
கடலூர், வேப்பூர், சிறுபாக்கம் அருகே இன்று இரும்பு கம்பிகள் லோடு ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி சென்ற லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பத்தில் மோதியதால் மின்கம்பிகள் அறுந்து லாரி மீது விழுந்ததில் தீப்பொறி பட்டு தீ பிடித்தது. லாரி முழுவதும் தீ பரவியது.இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் வந்து தீயை அனைத்தனர். இச்சம்பவம் குறித்து போலிசார் விசாரிக்கின்றனர்.
கடலூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பூ வராஹ சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் விஷ்ணுவின் அவதாரமான வராஹா (பன்றி) ரூபத்தை முதன்மையாக கொண்டு இருக்கும் கோயிலாகும். விஜயநகரப் பேரரசின் ஆட்சியாளரான தஞ்சாவூர் நாயக்க மன்னர் அச்சுதப்ப நாயக்கரால் இக்கோயில் கட்டப்பட்டது. ஏழு நிலை ராஜகோபுரம் உடைய இக்கோயிலைச் சுற்றிலும் ஒரு கருங்கல் சுவர், அனைத்து சன்னதிகளையும் கோயில் குளங்களையும் சூழ்ந்துள்ளது.
லயன்ஸ் கிளப் கடலூர் கோல்டன் சிட்டி சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி மஞ்சகுப்பத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ ஐயப்பன் மற்றும் லயன்ஸ் கிளப் தலைவர் மாநகராட்சி கவுன்சிலர் பிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் டாக்டர் பிரவீன் ஐயப்பன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் 7 மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையாக ரூ.105,000 வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் கடும் வெயில் காரணமாக காய்கறி வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகள் விலை தாறுமாறாக உயர்ந்து உள்ளது. அந்த வகையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ. 35 லிருந்து 58, முள்ளங்கி ரூ. 22 லிருந்து 30ஆகவும் மேலும் கடந்த வாரம் கிலோ ரூ. 20 ரூபாய்க்கு விற்கப்பட்ட சுரைக்காய் தற்போது 45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் கடலூர் பொதுமக்கள் காய்கறி வாங்க முடியாமல் திணறி வருகின்றனர்.
கடலூர் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை காவல்துறை உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். வியாபாரிகள் தங்களுடைய பொருட்களை அகற்றும்போது அதிகாரிகள் குறுக்கிட்டதால் அதிகாரிகளுடன் திடிரென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். போலிசார் குறுக்கிட்டு மேலும் பிரச்சினைகள் ஏற்படாதவாறு தடுத்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர்.
கடலூர் தேவனாம்பட்டினம் அரசு கலைக் கல்லூரியில் 2024 – 25 ஆம் கல்வி ஆண்டிற்கான முதல் கட்ட அனைத்து வகுப்பினருக்கான பொது கலந்தாய்வு வரும் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை, மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் நடக்கிறது. இதில் கலந்துகொள்ள வரும் மாணவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அசல் கல்வி சான்றிதழ் உள்ளிட்டவைகளை எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீண்டும் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் நேற்று (மே 28) கடலூர் 38 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 39 டிகிரி செல்சியஸ், புவனகிரி 39 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 39 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 39 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 39 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 39 டிகிரி செல்சியஸ், மற்றும் பண்ருட்டியில் 39 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது
கடலூர் முதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று எள் வரத்து 0.43 மூட்டை, நெல் (91) வரத்து 3.16 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் கடலூர் முதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு இன்று விற்பனைக்கு வரவில்லை.
Sorry, no posts matched your criteria.