Cuddalore

News May 11, 2024

கடலூர் வீராணம் ஏரி சிறப்பம்சம்!

image

கடலூர் மாவட்டத்தின் வீராணம் ஏரி, நாட்டர்மங்கலம் என்னும் ஊரின் அருகில் அமைந்துள்ளது. சென்னைக்கு நீர் வழங்கும் நீர்த்தேக்கங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஏரி கி.மு 907-955 முதலாம் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. அக்காலத்தில் சாதாரணமான கருவிகளைக் கொண்டு மனிதனால் 14 கிமீ அளவில் உருவாக்கப்பட்ட செயற்கை ஏரியாகும். இந்த ஏரி வடவார் ஆற்றின் வழியே கொள்ளிடம் ஆற்றிலிருந்து இருந்து தண்ணீர் பெறுகிறது.

News May 11, 2024

கடலூர்: கார் கவிழ்ந்து 3 பேர் பலி

image

கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகே சாலையோரம் இருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் இந்துமதி(36), நந்தனா (13), ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயமடைந்த ஓட்டுநர் பிரவீன்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடார்பாக போலீசார் இன்று விசாரிக்கின்றனர்.

News May 11, 2024

ஜூலை 2இல் துணைத் தேர்வு?

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

News May 10, 2024

கடலூர் ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (10/05/24) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் குருமூர்த்தி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் கல்பனா, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா, நெய்வேலி காவல் ஆய்வாளர் வீரசேகரன் மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 10, 2024

கடலூர் சேர்ந்த 3 மாணவிகள் சாதனை

image

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் 10ம் வகுப்பு தேர்வில் 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.கடலூர் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் பள்ளி மாணவி சங்கீதா 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தார்.அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘காலை 5 மணிக்கு எழுந்து படிப்பேன்.மாதத் தேர்வையும் பொதுத் தேர்வாக எண்ணிப் படித்தேன் என கூறினார்.

News May 10, 2024

கடலூர் 11ஆவது இடம்!

image

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 91.51% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 89.19 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 93.73 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்று கடலூர் மாவட்டம் 11 ஆம் இடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

10th RESULT: கடலூரில் 92.63% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகியுள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 92.63% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 90.08 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 95.39% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 10, 2024

சிதம்பரம் அரசு கல்லூரியில் விண்ணப்பங்கள் வரவேற்பு

image

சிதம்பரம் திமுக கலைக் கல்லூரியில் இளம் நிலை முதலாம் ஆண்டு பட்ட ப் பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை வரும் இருபதாம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் அர்ஜுனன் தெரிவித்துள்ளார். விண்ணப்பம் செய்ய கல்லூரியின் குறியீடு எண்: 1081013, என்றும், மேற்கண்ட உதவிகளுக்கு, 04144-295369 இந்த நண்பரின் தொடர்பு கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 10, 2024

திட்டக்குடி அருகே வெடித்து சிதறியது

image

கடலூர், திட்டக்குடி அருகே மர்ம பொருள் வெடித்ததில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த செல்வராஜ் என்பவரின் கை விரல்கள் துண்டானது. வெள்ளையாக பந்து போல் இருந்த மர்ம பொருளை எடுத்து கையால் அழுத்தியபோது, வெடித்து சிதறியது. அதில், மார்பு, முகப்பகுதியில் ஏற்பட்ட காயத்துடன் செல்வராஜ் கடலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இச்சம்பவம் குறித்து போலீசார் இன்று விசாரித்து வருகின்றனர்.

News May 10, 2024

கடலூர் அருகே வாலிபர் கைது!

image

சிதம்பரத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவலின் அடிப்படையில் சிதம்பரம் நகர உதவி ஆய்வாளர் பரணிதரன் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டார். சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே ஒருவர் சந்தேகம் படியாக நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரிக்கையில்  விஷ்ணுபுரம் சக்திவேல் கஞ்சா விற்பனை ஈடுபட்டது தெரிய வந்தது. அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!