India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர், மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குறைந்த கட்டணத்தில் சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் கோடைக்கால நீச்சல் வகுப்பு கடந்த 30ஆம் தேதி துவங்கியது. இந்த நீச்சல் பயிற்சி வகுப்பு இன்று நிறைவு பெற்றது. இந்த நீச்சல் பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பயிற்சி மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையிலிருந்து காரைக்காலுக்கு நேற்று இரவு அரசு பஸ் புறப்பட்டது.கடலூர் ரெட்டிசாவடி அருகில் வந்த போது பஸ் தறிகெட்டு ஓடி சாலையில்உள்ள தடுப்பு கட்டையில் மோதியது.அந்த சமயத்தில் பின்னால் வந்த ஆம்னி பஸ் ஒன்று அரசு பஸ் மீது மோதியது.இதில் 2 பஸ்களிலும் பயணித்த 25 பேர் படுகாயமடைந்தனர்.அவர்கள் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் விசாரித்தனர்.
குறிஞ்சிப்பாடி துணை மின்நிலையத்தில் நாளை(மே 13) மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை குறிஞ்சிப்பாடி விழப்பள்ளம், பஜார், எல்லைக்கல் பகுதி, கடலூர் மெயின் ரோடு, வளையல் கார மேட்டுக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிஞ்சிப்பாடி துணை மின்நிலையத்தில் நாளை(மே 13) மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை குறிஞ்சிப்பாடி விழப்பள்ளம், பஜார், எல்லைக்கல் பகுதி, கடலூர் மெயின் ரோடு, வளையல் கார மேட்டுக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்ணாடம் அடுத்து அரியராவியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது.திருவிழா கடந்த 3ஆம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி காலை அம்மனுக்கு அபிஷேகம் இரவு அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.பால்குடம் ஊர்வலம்,ஊரணி பொங்கல்,கன்னிமார்கள் தவம் அழித்த நிகழ்ச்சி,கழுகு மரம் ஏறுதல் உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்று கடலூர் 34 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 34, புவனகிரி 34 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 34 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 35, விருத்தாசலம் 35 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 35 டிகிரி செல்சியஸ், பண்ருட்டி 35 டிகிரி செல்சியஸ், குறிஞ்சிப்பாடி 35 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (11/05/24) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார், சிதம்பரம் காவல் ஆய்வாளர் சுஜாத்தா, விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் சுதாகர் மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் தங்கவேல் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில் இன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை போக்குவரத்து துறை, காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும்
பள்ளிக்கல்வித்துறை மூலம் கூட்டு தணிக்கை செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர்
டாக்டர்.அ.அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து பள்ளி வாகனங்களை ஆய்வு
செய்தார்.
கடலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 440 பள்ளிகளில் இருந்து 16,908 மாணவர்கள் 15,661 மாணவிகள் என மொத்தம் 32,569 பேர் தேர்வு எழுதினர். இதில் 30,169 பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தில் பாடவாரியாக தமிழில் 2 பேர், ஆங்கிலத்தில் 18 பேர், கணிதத்தில் 926 பேர், அறிவியலில் 267 பேர், சமூக அறிவியலில் 140 பேர் என மொத்தம் 1,353 மாணவ, மாணவிகள் 100/100 மதிப்பெண் பெற்றனர்.
கடலூர் மாவட்டத்தில் வெப்பநிலை நேற்று மீண்டும் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று கடலூர் 36 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 36 டிகிரி செல்சியஸ், புவனகிரி 36 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 36 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 37, விருத்தாசலம் 37 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 37 டிகிரி செல்சியஸ், பண்ருட்டி 37 டிகிரி செல்சியஸ், குறிஞ்சிப்பாடி 37 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.