Cuddalore

News May 19, 2024

கடலூரில் போலீசார் தீவிர வாகன சோதனை

image

கடலூரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் தினசரி இரவு போலீசார் சுழற்சி முறையில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூர் அண்ணா பாலம் அருகிலும், ஆல்பேட்டை சோதனை சாவடியிலும் போலீசார் இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குடியிருப்பு பகுதியிலும் இருசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

News May 19, 2024

திட்டக்குடி: குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீர்

image

திட்டக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட பெண்ணாடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை முதல் மாலை வரை வானம் மேக மூட்டமாக இருந்தது. இந்த நிலையில் மாலை 4 மணி அளவில் இடி மின்னலுடன் பலத்த மழை வெளுத்து வாங்கியது. சுமார் 30 நிமிடம் பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதில் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

News May 19, 2024

திட்டக்குடி: ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி

image

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்த வடக்கனூர் சேர்ந்தவர் மொட்டையன் மனைவி சிவமாலை (69). இவர் நேற்று திட்டக்குடி அருகே தொழுதூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்ததில் படுகாயம் அடைந்த சிவமாலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News May 19, 2024

கடலூரில் 1 மணி வரை மழை

image

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு இலங்கை கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக கடலூர் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புயுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

News May 19, 2024

கடலூரில் மீண்டும் அதிகரித்த வெப்பநிலை

image

கடலூரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. இந்த நிலையில் நேற்று கடலூரில் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் கடலூரில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

News May 19, 2024

கடலூரில் மிதமான மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, இன்று காலை 10 மணி வரை கடலூர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

News May 18, 2024

கடலூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (18/05/24) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் இராதிகா , சிதம்பரம் காவல் ஆய்வாளர் விநாயகம், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் அய்யனார், நெய்வேலி காவல் ஆய்வாளர் சந்திரன் மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் எழில்தாசன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 18, 2024

கடலூர் அருகே விபத்து; உடல் சிதறி பலி

image

பண்ருட்டி ஆர்.எஸ்.மணி நகரை சேர்ந்தவர் சம்சுதீன் மகன் காதர் பாட்ஷா(35). டீ மாஸ்டரான காதர் பாட்ஷா இன்று காலை பண்ருட்டி ரயில் நிலையில் அருகில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, அவ்வழியாக வந்த ரெயில் மோதியது. இதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் துறைமுகம் இருப்புப் பாதை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 18, 2024

கடலூர்: மகனைகொடூரமாக தாக்கிய தந்தை கைது

image

கடலூர் அடுத்த உச்சிமேடு சேர்ந்தவர் முத்துக்குமரன் (42) மகன் முகேஷ்(17). முத்துக்குமரன் நேற்று மாலை மதுபோதையில் வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டதை முகேஷ் தட்டி கேட்டார். இதில் ஆத்திரமடைந்த முத்துக்குமரன் கத்தரிக்கோலால், முகேஷ் கழுத்தில் குத்தினார். காயமடைந்த முகேஷ் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் முத்துக்குமரனை கைது செய்தனர்.

News May 18, 2024

கடலூர் காவலர்கள் இரத்த தான நிகழ்ச்சி 

image

கடலூர் காவலர் திருமண மண்டபத்தில் இன்று ரத்ததான முகாம் நடைபெற்றது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமை தாங்கி, ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், உடல் உறுப்பு தானங்களில் பெரும்பாலான தானங்கள் நாம் உயிரோடு இருக்கும் போது கொடுக்க முடிவதில்லை. நாம் உயிரோடு இருக்கும்போது அளிப்பது ரத்த தானம் மட்டுமே. அதனால் அனைவரும் ரத்த தானம் செய்யுங்கள் என அறிவுறுத்தினார்.

error: Content is protected !!