India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிதம்பரத்தில் கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், மாற்றுத் திறனாளிக்கு மூன்று சக்கர சைக்கிள் மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது. விழல் கட்டி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன் நடைபெற்ற விழாவுக்கு, கட்சியின் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் ராஜா. சம்பத்குமார் தலைமை வகித்தார். நகர்மன்ற உறுப்பினர் ஜெ.மஞ்சுளா வரவேற்றார்.
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவானதை தொடர்ந்து கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் (2ஆம் எண்) புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்கப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. முன்னதாக கடலூர் துறைமுகத்தில் நேற்று ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கூடலூரிலிருந்து பண்ருட்டி பறை டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்பொழுது வரக்கால்பட்டு பகுதியில் சென்றபோது டிப்பர் லாரியின் முன் சக்கரம் பஞ்சரானதால் லாரி தாறுமாறாக சாலையில் ஓடியது.அப்பொழுது டிரைவர் லாரியை நிறுத்த முற்பட்டார்.ஆனால் லாரி அங்கிருந்த டீக்கடை நோக்கி வந்தது.அப்பொழுது டிரைவர் சாமர்த்தியமாக லாரியை டீக்கடை முன்பு நிறுத்தினார்.
கடலூரில் அமைந்துள்ளது புனித டேவிட்கோட்டை, இந்த கோட்டை சோழ மண்டல கடற்கரையோரமாக அமைந்துள்ளது. செஞ்சி மன்னர்களால் கட்டப்பட்ட சிறிய கோட்டையாயிருந்த இது 1677இல் செஞ்சிக் கோட்டையை சிவாஜி கைப்பற்றிய பின்னர் மராட்டியரின் கைக்கு வந்தது. மராத்தியர்களிடமிருந்து பிரித்தானியரால் 1690ஆம் ஆண்டு இந்தக் கோட்டையும் மற்றும் சுற்றிலும் அவர்கள் கட்டுப்பாட்டிலிருந்த நகரங்கள் மற்றும் கிராமங்களும் மொத்தமாக வாங்கப்பட்டன.
கடலூர் அடுத்த எஸ்.என் சாவடி நியாய விலை கடையில் ரேஷன் பொருட்கள் வாங்க அப்பகுதி பொதுமக்கள் வந்திருந்தனர். இந்நிலையில் இன்று இட்லி அரிசி, துவரம்பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் இருப்பு இல்லை என்று கூறி வழங்கப்படவில்லை. சமீப காலமாக தினமும் ஏதேனும் ஒரு காரணம் கூறி பல பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படுவதில்லை என்று புலம்பியவாறு ரேஷன் வாங்க வந்த பொதுமக்கள் திரும்பி சென்றனர்.
கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு கோடைக்கால நீச்சல் பயிற்சி வகுப்பு கடந்த 14ஆம் தேதி துவங்கியது. இதில் ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று நீச்சல் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து 13 நாட்கள் நடைபெற்று வந்த இந்த நீச்சல் பயிற்சி வகுப்பு நாளை 26ம் தேதி நிறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூரில் பிரபல திரையுலக நட்சத்திரங்களான அமுதவாணன், KPY பாலா, நிஷாந்த் கவின் மற்றும் பின்னணி பாடகர்கள் ஹரிப்பிரியா, திவாகர் பங்கு பெறும் ஸ்டார் நைட் லைவ் ஷோ நாளை 26 ஆம் தேதி மாலை சென் ஜோசப் மெயின் கேம்பஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் லைவ் மியூசிக், டி.ஜே, டான்ஸ் மற்றும் மிமிக்ரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. இது தொடர்பான விளம்பர பேனர்கள் கடலூரில் பல்வேறு பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகரில் தமிழ்நாடு நான்காவது கூட்டு தொழில்நுட்ப கம்பெனி என்சிசி சார்பில் நேற்று வருடாந்திர கூட்டு பயிற்சி மற்றும் தல்சாணிக் தேர்வு முகாம் ஆகியவை தொடங்கியது. ஜூன் 1 தேதி வரை நடைபெறும் இம் முகாமின் கட்டுப்பாட்டு அதிகாரியாக தமிழ்நாடு நான்காவது கூட்டு தொழில் நுட்ப கம்பெனியின் கட்டுப்பாட்டு அதிகாரி கர்னல். வாசுதேவ நாராயணன் சேனா மெடல் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (24/05/24) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் கணபதி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் கல்பனா, விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் முருகேசன், நெய்வேலி காவல் ஆய்வாளர் அசோகன் மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் சாராயம், கஞ்சா, மது விற்பனை குறித்தும், கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் , போலி மதுபானம் விற்பனை செய்வோர், மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்கள் பற்றிய தகவல்களை காவல்துறைக்கு 7418846100 மற்றும் 04142 -284353 என்ற காவல் உதவி எண்களில் தகவல் தெரிவிக்கலாம். இந்த புகார் எண்ணுக்கு வரும் புகார்களின் அடிப்படையில் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எஸ்.பி. ராஜாராம் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.