India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மாற்றுத்திறனாளிகள் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் பெற்று பழுதடைந்து இருப்பின் மீண்டும் விண்ணப்பித்து பயன்பெறலாம். இதற்கு அறை எண் 112, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கடலூர் என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாகவோ அல்லது நேரிலோ 16.12.2024-க்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

ஃபெஞ்சல் புயல் கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த மத்திய குழுவினரிடம் விவசாய விளைநிலங்கள், சாலைகள், மேம்பாலங்கள், வீடுகள் மற்றும் கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து கூடுதல் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டும் என்று தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவெ கணேசன் கோரிக்கை மனு அளித்தார்.

நடுவீரப்பட்டு அருகே உள்ள பாலூரை சேர்ந்த தொழிலாளியான கார்த்திக் (40) என்பவர், நேற்று இரவு தனது குடிசை வீட்டில் சாமி கும்பிட விளக்கு ஏற்றிய போது எதிர்பாராதவிதமாக குடிசையின் மீது தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் மளமளவென எரிந்த தீ குடிசை வீடு முழுவதும் எரிந்தது. இதில் அந்த குடிசை வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஃபெஞ்சல் புயல் மழைவெள்ள சேதங்களை ஆய்வு செய்ய கடலூர் வந்துள்ள மத்திய குழுவினர் இன்று நெய்வேலியில் தங்கியுள்ளனர். இந்த குழுவினர் நாளை (08/12/2024) காலை 10 மணியளவில் மேல்பட்டாம்பாக்கம், பகண்டை, அழகியநத்தம், குண்டுஉப்பலவாடி கண்டக்காடு, நாணமேடு ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்பட்ட பல்வேறு வகையான சேதங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார்கள் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

கடலூா மாவட்டத்தில் கனமழையின் காரணமாகவும், வெள்ள பெருக்கின் காரணமாகவும் 1,113 குடிசை வீடுகளும், 285 ஓட்டு வீடுகள் என மொத்தம் 1,390 வீடுகள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த வீடுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கடலூரில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தமிழக முதல்வர் அறிவித்த 2000 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சியினை, தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று தொடங்கி வைத்தார். உடன் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா உள்ளிட்ட பலர் உள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள், பொது தீட்சிதர்களால் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட வழக்கில் கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும் நிலத்தின் சுவாதீன உரிமை பெற்றவர் எழுதிய உயிலின்படி, குறிப்பிட்ட தீட்சிதர் நிலத்தை விற்பனை செய்துள்ளார். நிலத்தின் பட்டா இன்னும் கோயிலின் பெயரிலேயே உள்ளது என அறநிலையத்துறை வாதம் செய்தது.

ஃபெஞ்சல் புயல் பாதித்த கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த 3 மாவட்டங்களில் தேர்வுகள் வரும் ஜன.02 ஆம் தேதி முதல் 10 தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், முந்தைய தேர்வு அட்டவணைப்படி அறிவிக்கப்பட்ட அரையாண்டு விடுமுறைக் காலம் (டிச.24-ஜன.01) இம்மாவட்டங்களுக்கும் பொருந்தும் என பள்ளி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கடலூர் உட்பட கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி விழுப்புரம்,, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு பெஞ்சன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வுதாரத்தை உயர்த்துவதற்காக கடலூரில் நாளை சிறு வணிக முகாம் நாளை 6.12.24 முதல் 12.12.24 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் மாணவர்களுக்கு ஒரு லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்று அமைச்சர் பெரிய கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் 129 மின்கம்பங்கள் மற்றும் மின் ஒயர்கள் சேதமடைந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தை சேர்ந்த 1,843 பணியாளர்கள் மூலம் 129 மின்கம்பங்கள் நடப்பட்டும், 2802 கிலோ மீட்டர் நீளத்திற்கு மின் கம்பிகள் சீர்செய்யப்பட்டும் 154 கிராமங்களுக்கு மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.