India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கடலூர் வழியாக வரும் 13ம் தேதி மட்டும் வண்டி எண் (06147) திருச்சி – வேலூர் கண்டோன்மென்ட் சிறப்பு ரயில் அறிவிப்பு. அதன்படி திருச்சியிலிருந்து 13ம் தேதி காலை 8 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சிதம்பரம் காலை 10.46 மணிக்கும், திருப்பாதிரிப்புலியூர் 11.18 மணி, பண்ருட்டி 11.40 மணிக்கு வந்து திருவண்ணாமலைக்கு மதியம் 1.20க்கு சென்றடைய உள்ளது.

நெய்வேலியில் அமைந்துள்ள NLC India Limited இல் 7 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் ஆனது. இந்த வேலை வாய்ப்பிற்கான பதவி, சம்பளம், வயது வரம்பு, கல்வித் தகுதி, விண்ணப்பதாரர்கள் NLC India Limited, நெய்வேலின் இணையதளத்தில் https://www.nlcindia.in/ 11.12.2024 காலை 10.00 மணி முதல் 30.12.2024 மாலை 05.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

கடலூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் பெண்களின் நலனுக்காக ” சகி ” என்ற பெயரில் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரை மொத்தம் பெறப்பட்ட 569 வழக்குகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார். கருத்துக்களை COMMENTஇல் பதிவிடவும்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் இலங்கை-தமிழகம் நோக்கி நகர கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு டிச. 11, 12, 13 மற்றும் 16-ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை உடனே ஷேர் செய்யவும்!

வடகிழக்கு பருவமழை காரணமாக ஆறுகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளதாலும், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி உள்ளதாலும் பொதுமக்கள் ஏரி, குளம், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்க செல்வதை தவிர்க்க வேண்டும். ஆற்றில் தரைப்பாலங்களை கடந்து செல்லக்கூடாது. இளைஞர்கள் ஆபத்தை உணராமல் நீர் நிலைகளின் அருகே செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட சமூக நல்லிணக்க செயலில் ஈடுபட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் (அரசுப் பணியாளர்கள் ஆயுதப்படைவீரர்கள், காவல், தீயணைப்புத் துறை) கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.மேலும் இவ்விருது பெறுவதற்கு தகுதியுடைவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளம் வழியாக 15.12.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் வரும் 11ஆம் தேதி மிக மழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’ விடப்பட்டுள்ளது. மேலும் 11.5 முதல் 20 செ.மீ மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழை புயல் மற்றும் வெள்ளத்தால் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடலூரில் இன்று பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 684 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் அளித்தனர். அந்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான “கபிர்புரஸ்கார்” விருது 2025 ஆம் ஆண்டின் குடியரசு தின விழாவின்போது முதலமைச்சரால் வழங்கப்படுகிறது. இவ்விருது பெற தகுதியான கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் <

அசோசியஸ் அட்வைசர் பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. <
Sorry, no posts matched your criteria.