India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூரில் நேற்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது.இதில் கடலூர் பகுதியில் 79.2 மி.மீ, வானமாதேவி 72.8 மில்லி மீட்டர், வேப்பூர் 53 மில்லி மீட்டர், பண்ருட்டி 49 மில்லி மீட்டர், கலெக்டர் அலுவலகம் 62.6 மில்லி மீட்டர், விருதாச்சலம் 32 மிமீ. குப்பநத்தம் 32.8 மில்லி மீட்டர் குடிதாங்கி 42 மில்லி மீட்டர் போன்ற பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் அளவு மொத்தமாக 586.50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கடலூர், புதுசத்திரத்தின் கிழக்கே கடலூர் மற்றும் சிதம்பரம் ஆகிய இடங்களுக்கு நடுவில் அமைந்துள்ளது சாமியார்பேட்டை கடற்கரை. இங்கு அதிக அளவில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தென்னை மரங்கள் சூழ்ந்த இந்த கடற்கரைப் பகுதி கிராமங்களில் ஓடைகள் ஓடுவது அதன் அழகை அதிகரிக்கிறது. இங்கு புகழ்பெற்ற ஸ்ரீபின்ன வாழி அம்மன் கோயில் கடற்கரையுடன் அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
விருத்தாசலம் அடுத்த சித்தேரிக்குப்பத்தைச் சேர்ந்தவர் காசிநாதன் (70). இவரது மனைவி வேம்பு (65 ). கணவன் மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் இன்று அதிகாலை விருத்தாசலம் வயலூர் மேம்பாலத்தில் சென்ற போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விருத்தாசலம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம் தாலுகா போலீசார் பாலூத்தாங்கரை பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் மது பாட்டில்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த அதே ஊரை சேர்ந்த கலைச்செல்வி என்பவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசிப்பணி தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய கோட்டங்களில் உள்ள சுமார் 3 லட்சம் கால்நடைகளுக்கும்,ஜூன் மாதம் 10-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரை தடுப்பூசி போடப்படும் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் நேற்று (ஜூன்.05) பெய்த மழையின் அளவு விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பரங்கிப்பேட்டையில் 7 செ.மீட்டரும், பெலாந்துறை, விருதாச்சலம் ஆகிய பகுதிகளில் 6 செ.மீட்டரும், குப்பணதம், கோதைச்சேரி ஆகிய பகுதிகளில் 5 செ.மீட்டரும், வடக்குத்து, சேது தோப்பு, புவனகிரி, செய்வேலி ஆகிய பகுதிகளில் 3 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடை வைத்துள்ள உரிமையாளர்களிடம் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.இதில் மாநகர ஆணையாளர் காந்தி ராஜ் கூறுகையில், தேவனாம்பட்டினம் கடற்கரை புதுப்பிக்கும் பணி தொடங்க உள்ளதால் அங்கு கடை வைத்துள்ள அனைவரும் அதே பகுதியில் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று கூறினார்.
சிதம்பரம் முத்தையா நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் 2-ஆம் ஆண்டு விழாவையொட்டி, கலச விளக்கு வேள்வி பூஜை, சமுதாயப்பணி , ஆன்மீக சொற்பொழிவு ஆகியவை நேற்று மாலை நடைபெற்றது. நிகழ்வுக்கு, சக்திப்பீட தலைவர் கோபி தலைமை வகித்து கலச விளக்கு வேள்வி பூஜையை தொடங்கி வைத்தார். அருளானந்தம், டி.எஸ்.எஸ்.பாலகுமார், சித்த மருத்துவர் அர்ச்சுனன் ஆகியோ முன்னிலை வகித்தனர்.
கடலூர், தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கல்லூரியில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் வெற்றி பெற்றதை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை பத்திரமாக ஏற்றி அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களையும் சரிபார்த்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் இன்று காலை கொண்டுவரப்பட்டு கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட வெள்ளிக் கடற்கரையில் மூலதன மானிய திட்ட நிதியின் கீழ் ரூ.4.98 கோடி மதிப்பீட்டில் பூங்கா உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தும் பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண் தம்புராஜ் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.