India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் திருமாறன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட கவுன்சிலர்கள் பேசியதாவது,நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்க உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். கடலூரில் இஎஸ்ஐ ஆஸ்பத்திரி கட்ட வேண்டும். மேலும் விக்கிரவாண்டி-தஞ்சாவூர் சாலையில் மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பேசினார்.
கடலூர் மாவட்ட பித்தளை பாத்திர தொழிலாளர் சங்கத்தின் ஆண்டு பேரவை கூட்டம் கடலூரில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக சிஐடியு மாவட்ட செயலாளர் பழனிவேல், மாவட்ட துணை தலைவர் சுப்புராயன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் புதிய கூலி உயர்வு சம்பந்தமாக பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கம் குறைந்து கொண்டே வருகிறது.இந்த நிலையில் கடலூர் 36 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 36 டிகிரி செல்சியஸ், புவனகிரி 36 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 36 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 37 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 36 டிகிரி செல்சியஸ் மற்றும் திட்டக்குடியில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியல் தாவரவியல் துறையில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் 15 நாட்கள் வேளாண் பயிற்சி பெற்றனர். இதையடுத்து பயிற்சி நிறைவு பெற்றதையடுத்து நேற்று மாணவர்களுக்கு வேளாண் விஞ்ஞானிகள் காயத்ரி, கண்ணன், மோதிலால் ஆகியோர் சான்றிதழ்கள் வழங்கினர். இதில் பேராசிரியர்கள் பரமசிவம், சரவணகுமார், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
காட்டுமன்னார்கோயில் தாலுகா எள்ளேரி (மேற்கு) கிராமத்தில் இன்று இரவு 7 மணியளவில் இடிமின்னலுடன் கன மழை பெய்தது. அப்போது வீசிய சூறைக்காற்றில் எள்ளேரியில் சாலையோரம் இருந்த மரத்தின் கிளை முறிந்து, அருகில் நின்ற அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் மனைவி கலா (42) மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து காட்டுமன்னார்கோயில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூரில் உள்ள தபால் அலுவலகங்களின் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தபால் சேவை மக்கள் குறைகேட்பு கூட்டம் 21ஆம் தேதி நடக்கிறது. இதில் தபால் சேவைகளில் வாடிக்கையாளர்களின் பிரச்சனைகள், புகார்கள் போன்றவை விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்படும். மேலும் விவாதத்துக்கான புகார்கள் மற்றும் குறைகள் ஏதாவது இருந்தால், அவைகளை தபால் மூலம் அனுப்பி வைக்கலாம் என தபால் அலுவலகங்களின் கண்காணிப்பாளர் கணேஷ் இன்று தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வருகின்ற 21ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.இதில் தனியார் நிறுவன அதிகாரிகள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வுசெய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்குகின்றனர்.அதனால் 10 மற்றும் 12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் அருண் தம்புராஜ் இன்று தெரிவித்தார்.
சிதம்பரம் கோவிலாம்பூண்டி சாலையில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் சான்றிதழ்கள் சிதறி கிடந்ததாக பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் சிதம்பரம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.ஆய்வு செய்ததில் போலி சான்றிதழ் என தெரிந்தது.அத்துடன் கிடந்த ரசீதில் இருந்த சங்கர் தீட்சதர் என்பவரை காவல்துறை விசாரித்தனர்.அதில் நாகப்பன் என்பவருடன் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது.இந்த நிலையில் நேற்று கடலூர் 36 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 37 டிகிரி செல்சியஸ், புவனகிரி 37 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 37 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 38 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 38 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 38 டிகிரி செல்சியஸ் மற்றும் பண்ருட்டியில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது
கடலூர் மாவட்டத்தில் திருப்பாபுலியூர் ஏட்டுகள் அன்வர்அலி,ஜெயக்குமார்,புதுநகர் ஏட்டுகள் பத்மநாபன்,வெற்றிசெல்வன்,ராஜாராம்,உலகநாத, போக்குவரத்து பிரிவு ஏட்டுகள் மணிகண்டன்,பத்மநாபன்,முதுநகர் ஏட்டு சிவா உள்பட 59 தாலுகா போலீஸ் ஏட்டுகளும்,ஆயுதப்படை போலீஸ் ஏட்டுகள் 8 பேர் என மொத்தம் 67 ஏட்டுகள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளித்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திஷாமித்தல் உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.