Cuddalore

News January 6, 2025

கடலூர் மக்களுக்கு எஸ்.பி. முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆறு, குளம், ஏரி மற்றும் தடுப்பணைகளில் தண்ணீர் நிறைந்துள்ளது. பொதுமக்கள் ஆர்வமிகுதியால் நீர்நிலைகளில் இறங்கி குளிக்கும்போது உயிரிழப்பு ஏற்படுகின்றன. மேலும் தற்போது தொடர் விடுமுறை காலம் வருவதால் சிறுவர்கள் நீர்நிலைகளில் இறங்கி குளிக்க முற்படுவதை பெற்றோர்கள் கண்டிப்பாக அனுமதிக்க கூடாது என கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

News January 6, 2025

கடலூர் மாவட்டத்தில் பெண் வாக்காளர்கள் அதிகம்

image

தமிழகத்தில் இன்றைய (06/01/2025) தேதி வரை மொத்த வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கடலூர் மாவட்டத்தில் 1,069,935 ஆண் வாக்காளர்கள், 1,109,744 பெண் வாக்காளர்கள் உள்ளனர். இது மட்டுமல்லாமல் கடலூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிக அளவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News January 6, 2025

கடலூரில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

கடலூரில் நாளை (7ஆம் தேதி) மின் நுகர்வோர் குறை தீர்வு கூட்டம் நடக்கிறது. இதுகுறித்துமின்வாரிய செயற்பொறியாளர் வள்ளி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “மின்வாரிய செய்திக்குறிப்பில், குறை தீர்க்கும் கூட்டம் நாளை (7 ஆம் தேதி) கடலுார் கோட்ட அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது. பொதுமக்கள் மின் வாரியம் மின்வாரியம் குறையிருப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

News January 6, 2025

இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட ஆட்சியர்

image

கடலூர் மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று காலை 10 மணியளவில் வெளியிட்டார். அப்போது வருவாய் அலுவலர் ராஜசேகரன், கோட்டாட்சியர் அபிநயா, தாசில்தார் பலராமன் மற்றும் தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட அங்கிகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

News January 6, 2025

கடலூரில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, இறுதி வாக்காளர் பட்டியலினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (06.01.2025) காலை 10 மணியளவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட உள்ளார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தேர்தல் தனி தாசில்தார் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

News January 6, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் கலெக்டர் சிபி ஆதித்ய செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “விமான நிலையத்தில் பல்வேறு பணிகளில் சேர்வதற்கான பயிற்சியில் +2 அல்லது பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 23 வயதிற்குட்பட்ட பட்டியலினத்தவர் பங்கேற்கலாம் எனவும், பயிற்சி கால அளவு 6 மாதம், விடுதியில் தங்கி படிக்கும் வசதியும், பயிற்சிக்கான செலவினத்தொகை 95 ஆயிரம் வழங்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க.

News January 6, 2025

கடலூரில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, இறுதி வாக்காளர் பட்டியலினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (06.01.2025) காலை 10 மணியளவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட உள்ளார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் தேர்தல் தனி தாசில்தார் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

News January 5, 2025

கரும்பு கொள்முதல் செய்ய 14 குழு அமைப்பு

image

கடலூரில் பொங்கல் பரிசு வழங்குவதற்காக 7,78,296 குடும்ப அட்டைதாரர்களுக்கு முழு கரும்பு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திடும் வகையில் வேளாண்மைத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்களான வேளாண் அலுவலர், கூட்டுறவுத்துறை கள அலுவலர், பொது விநியோகத்திட்ட சார்பதிவாளர் ஆகியோர் அடங்கிய வட்டார அளவிலான 14 கொள்முதல் குழு அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News January 5, 2025

பாட்டியை திட்டிய தொழிலாளியை கொலை செய்த இளைஞர்

image

விருத்தாசலம் அடுத்த வீராரெட்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி சிவா (35). இவர் நேற்று இரவு அதே பகுதியைஅ சேர்ந்த கோவிந்தன் மனைவி செல்லம்மாள் (60) என்பவரை மது போதையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து ஆத்திரமடைந்த செல்லம்மாளின் பேரன் அபிமன்யு (19), சிவாவை கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதுகுறித்து ஆலடி போலீசார் வழக்கு பதிந்து அபிமன்யுவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 5, 2025

கடலூரில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

கடலூர் கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் ஜன.07ஆம் தேதி (செவ்வாய்) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் கடலூர் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கக்கூடிய மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் மின் தொடர்பான குறைகளை தெரிவிக்கலாம் என கடலூர் செயற்பொறியாளர் எம்.வள்ளி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!