Cuddalore

News June 24, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கி கடன்

image

கடலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். அப்போது அவர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி பயனாளிகள் 30 பேருக்கு வங்கி கடன் மானியத்திற்கான செயல்முறை ஆணையை வழங்கினார். இதில் கூடுதல் ஆட்சியர் சரண்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

News June 24, 2024

கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு கலெக்டர் அழைப்பு

image

கடலூரில் ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வரும் 28-ம் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.அதனால் கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும். மேலும் கூட்டத்தில் கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் 28-ம் தேதி காலை 8 மணி முதல் 10 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.

News June 24, 2024

கடலூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 

image

கள்ளச்சாராய மரணத்தை கண்டித்தும்,கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும்,சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும்,கடலூரில் இன்று காலை அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கினார். இதனால் அங்கு போலீஸ் குவிப்பு

News June 24, 2024

கடலூர் கலெக்டரிடம் மனு

image

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது,முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.இதில் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கத்தில் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர்.இதில் பெரும்பாலானோர் சொந்த வீடு இன்றி வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வரும் எங்களுக்கு அரசு இலவச மனை பட்டாவை வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.

News June 24, 2024

கடலூர்: முருங்கைக்காய் விலை கிடுகிடு உயர்வு

image

கடலூர் உழவர் சந்தையில் கடந்த சில நாட்களாக அனைத்து வகை காய்கறிகளின் விலைகளும் உயர்ந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் கடந்த வாரம் ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் இன்று கிடுகிடுவென விலை உயர்ந்து 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைப்போல் பிடி கருணை 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.

News June 24, 2024

கடலூர்: வீடு கட்ட ஆணை வழங்கிய அமைச்சர்

image

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க நீர்வளத் துறை சார்பில் ரூ.81.12 கோடி மதிப்பீட்டிலான கொள்ளிடம் வடிநிலக் கோட்டம் அருவாள்மூக்கு வெள்ளத் தடுப்பு திட்டப்பணிகள் நேற்று கடலூர் அருகே திருச்சோபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் என்.எல்.சி நிறுவனத்தின் சார்பில் வீடுகட்டுவதற்கான ஆணைகள் மற்றும் காசோலையை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள் வழங்கினார்.

News June 23, 2024

கடலூர்: வீடு கட்ட ஆணை வழங்கிய அமைச்சர்

image

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க நீர்வளத் துறை சார்பில் ரூ.81.12 கோடி மதிப்பீட்டிலான கொள்ளிடம் வடிநிலக் கோட்டம் அருவாள்மூக்கு வெள்ளத் தடுப்பு திட்டப்பணிகள் இன்று கடலூர் அருகே திருச்சோபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் என்.எல்.சி நிறுவனத்தின் சார்பில் வீடுகட்டுவதற்கான ஆணைகள் மற்றும் காசோலையை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள் வழங்கினார்.

News June 23, 2024

கடலூரில் இடி,மின்னலுடன் மழை!

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (23) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி, கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது .

News June 23, 2024

சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் திறப்பு விழா

image

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கட்டடவியல் துறையில் 1972-77ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பில் கருத்தரங்கு அறை புதுப்பிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று (ஜூன் 23) மாலை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு புல முதல்வர் சி.கார்த்திகேயன் தலைமை வகித்தார். கட்டடவியல் துறை தலைவர் எஸ்.பூங்கோதை முன்னிலை வகித்தார். கருத்தரங்கு அறையை பதிவாளர் ஆர்.சிங்காரவேல் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

News June 22, 2024

கடலூரில் பலத்த மழை

image

கடலூரில் இன்று (22-ம் தேதி) காலை முதல் மாலை வரை வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் இரவு 8.30 மணியளவில் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது சூறைக்காற்றும் வீசியதால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இந்த மழை சுமார் 9.30 மணி வரை நீடித்தது. இதனால் அனைத்து பகுதிகளிலும் சாலைகளில் ஆறாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

error: Content is protected !!