India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் தேமுதிக சார்பில் மாவட்ட கழக செயலாளர் மாஜி எம்எல்ஏ சிவக்கொழுந்து தலைமையில் மனு கொடுக்க வந்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனையை தடுத்த தவறிய மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும், கள்ளச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி ஜூலை 9ஆம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறைக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ அல்லது tdadcuddalore@gmail.com என்ற மின்னஞ்சலில் ஜூலை மாதம் 8ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் அருண் தம்புராஜ் இன்று தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கடந்த 3 ஆண்டுகளில் 8,165 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.52,39,17,045 மதிப்பில் பராமரிப்பு உதவிதொகை, 2,277 பேருக்கு கல்வி உதவிதொகை, 1,249 பேருக்கு ரூ.1,51,35,536 மதிப்பில் இலவச பேருந்து பயண சலுகை அட்டைகள் உள்பட மொத்தம் 50,236 பேருக்கு ரூ.61,57,34,367 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.
கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியின் வாயிலாக நடைபெறும் திட்டப்பணிகள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் நடைபெறும் அனைத்து திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
புவனகிரி பகுதியை சேர்ந்த செல்வகுமாருக்கும் சின்னசேலத்தை சேர்ந்த சூர்யாவுக்கும் கடந்த 17.9.2023 திருமணம் நடந்தது. இந்நிலையில் வரதட்சணை கொடுமையால் சூர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து இன்று சூர்யாவின் உடல் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தபோது அங்கு வந்த செல்வகுமார், சூர்யாவின் உறவினர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விஷ்ணு பிரசாத், கடலூர் மக்களவைத் தொகுதிக்கு 2வது முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறை கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கிராம சுகாதார செவிலியர்களை துணை சுகாதார நிலையங்களில் காலிப் பணியிடங்களில் உடனடியாக நிரப்பிட வேண்டியும், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு டேட்டா ஆப்ரேட்டர் நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்னிபாத் திட்டத்தின்கீழ் அக்னிவீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்காக திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண்கள் ஜூலை 8 முதல் ஜூலை 28 வரை https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு அக் 10 அன்று நடத்தப்படும். கல்வித் தகுதி 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் மொத்தமாக 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
கடலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். அப்போது அவர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி பயனாளிகள் 30 பேருக்கு வங்கி கடன் மானியத்திற்கான செயல்முறை ஆணையை வழங்கினார். இதில் கூடுதல் ஆட்சியர் சரண்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள போலீசார் விவரம் வெளியிடப்பட்டது. அதன்படி கடலூரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கவியரசன், மணிவண்ணன், சிதம்பரத்தில் இன்ஸ்பெக்டர் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், விருத்தாசலத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யனார், ராமலிங்கம், நெய்வேலியில் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் தனசீலன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.