India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, இலவச வீடு, பட்டா, தையல் இயந்திரம், வேலை வாய்ப்பு உள்பட மொத்தம் 743 மனுக்கள் அளிக்கப்பட்டது. மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் பரிந்துரைத்தார்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு சிறுதொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய தனிநபர் கடன் மற்றும் குழுக்கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி வழங்கி வருகிறது. இதனால், கடனுதவி பெற விரும்புபவர்கள் WWW.tabcedco.tn.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண் தம்புராஜ் இன்று தெரிவித்தார்.
கடலூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கடலூர் அஞ்சல் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு வசதியாக மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு நேரடியாக சென்று புதிய சேமிப்பு கணக்கு தொடங்க சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆட்சியர் அருண் தம்புராஜ் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையினை வழங்கினார். மேலும், விபத்தில் இறந்தவரின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு காசோலை வழங்கப்பட்டது.
கடலூர் வண்டிபாளையம் ஆலை காலனியை சேர்ந்தவர் புஷ்பநாதன்(35). முன்னாள் நகராட்சி கவுன்சிலராக இருந்த இவர், தற்போது அதிமுக மாவட்ட பிரதிநிதியாக உள்ளார். இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வண்டி பாளையம் பகுதியில் சென்றபோது, மர்மநபர்கள் இரண்டு பேர் அவரை வழிமறித்து அறிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து விருது முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்காக நாளை (1-ம் தேதி) முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை தீவிர வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு சென்று 2 ஓ.ஆர்.எஸ். பாக்கெட் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளுக்கு துத்தநாக மாத்திரைகள் 14 நாட்களுக்கு சேர்த்து வழங்குவார்கள் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கி வரும் கிறிஸ்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதிஉதவி வழங்கப்படுகிறது. இதில் ரூ.2 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை நிதி வழங்கப்படுகிறது. இதில் விண்ணப்பிக்க விரும்புவர்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கி வரும் கிறிஸ்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதிஉதவி வழங்கப்படுகிறது. இதில் ரூ.2 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை நிதி வழங்கப்படுகிறது. இதில் விண்ணப்பிக்க விரும்புவர்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுக்கு தயாராகி வரும் போட்டித் தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் ஜூலை 1-ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது. இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும். இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என கலெக்டர் அருண் தம்புராஜ் நேற்று தெரிவித்தார்.
கடலூர் மாவட்டத்தில் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுக்கு தயாராகி வரும் போட்டித் தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் ஜூன் 1-ம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது. இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும். இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என கலெக்டர் அருண் தம்புராஜ் இன்று தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.