India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில், 12 இடங்களில் செயல்பட்டு வந்த மணல் குவாரிகள் முறைகேடு காரணமாக அமலாக்கத்துறை வழக்கில் சிக்கி மூடப்பட்டன. இதனால் கட்டுமானத்துறை, லாரி உரிமையாளர்கள் தரப்பினர் உள்ளிட்டோர் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு தவித்து வருகின்றனர். இதையடுத்து அரசு சார்பில், 13 மாவட்டங்களில் புதிதாக மணல் குவாரிகள் திறக்க பணிகள் நடந்து வருகின்றன. அதில் கடலூர் மாவட்டத்திலும் புதிய மணல் குவாரி விரைவில் அமைய உள்ளது.

புதுச்சத்திரம் அருகே 16 வயது மாணவி அரசு பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அப்போது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. புதுச்சத்திரம் போலீசார் பள்ளி மாணவியிடம் விசாரணை செய்து, கர்ப்பத்திற்கு காரணமான ஆண்டாள் முள்ளிப் பள்ளத்தை சேர்ந்த பவித்ரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூர் வில்வராயநத்தத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட வீடுகளை, விற்பனை கிரைய ஆவணத்தின் மூலம் பெற்ற வீட்டின் உரிமையாளர்களுக்கு பட்டா வழங்க இன்று (25.01.2025) காலை 10 மணிக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள விநாயகர் கோயில் வளாகத்தில் பட்டா மாறுதல் விண்ணப்பம் பெறும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

கடலூர் மாநகராட்சியும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமும் இணைந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்புடன் நெகிழி பயன்பாட்டை தவிர்த்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாபெரும் நெகிழி சேகரிப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணி கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் இன்று (25.01.2025) காலை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் ஆன்லைன் வழியாக 2,583 சைபர் குற்ற புகார்கள் வந்துள்ளது. அதில் 208 வழக்குகள் பதிவு செய்து, 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.14.67 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ரூ.10.18 கோடி வங்கிகளில் முடக்கப்பட்டு, அதில் ரூ.73,29,307 திரும்ப பெற்று புகார் தாரர்களுக்கு திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது என கடலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

நெல் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் நெல் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்ய இன்று (24.01.2025) கடலூர் வருகை புரிய உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் கூடுதலாக பணியாற்றிட பாதுகாப்பு அலுவலர் பணிக்கும், சமூகப்பணியாளர் பணிக்கு 2 காலியிடங்கள் நிரப்படவுள்ளன. ஒப்பந்த அடிப்படையிலான பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவம் மற்றும் இதர விவரங்கள் கடலூர் மாவட்ட இணையதள முகவரி www.cuddalore.tn.nic.in-ல் கொடுக்கப்பட்டுள்ளதாக கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார். SHARE NOW!

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினம் தோறும் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (23/01/2025) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் இராஜாராமன், சிதம்பரம் உதவி ஆய்வாளர் பரணிதரன், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சந்துரு, பண்ருட்டி உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் திட்டக்குடியில் காவல் ஆய்வாளர் தெய்வசிகாமணி ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களால் பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். தவறான நபர்கள் மூலம் உண்டாகும் நட்புகள் குடும்ப வாழ்க்கையை சிதைத்து விடும். அதனால் சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்டு பழகும் நபர்களிடம், அவர்களது உண்மை தன்மை தெரியாமல் குடும்ப விஷயங்களையோ?, தங்களது தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்ள கூடாது என கடலூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

கடலூர் முதுநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் வேலூரைச் சேர்ந்த அன்புகுமார் (30) என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வேலூர் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து முதுநகர் போலீசார் போக்ஸோ சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அன்புவைத் தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அன்பு (எ) அன்புகுமாரை இன்று போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.