India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் 3 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளை இன்று (08.09.2025) வழங்கினார். அப்போது தனித்துணை ஆட்சியர் தங்கமணி, தனித்துணை ஆட்சியர் (முத்திரைத்தாள்) தனலட்சுமி, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்துப் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (செப்டம்பர் 8) கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி ஆகிய பகுதிகளில் இரவு ரோந்துப் பணிக்குச் செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட அலுவலக கூட்டரங்கில் காவல்துறை பற்றிய பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஒவிய போட்டிகளை வைத்து, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிசுகளை வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் மனிஷா,சார்லஸ், அப்பாண்டைராஜ் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் முகமது நிசார் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் டி.ஆனந்த், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் Bumble B அறக்கட்டளை மூலம் கல்வி 40 செயலியை தொடங்கி வைத்து, ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடர் நல தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் டிவியினை இன்று (8.09.2025) வழங்கினார்.
கடலூர் மாவட்டத்தில் இன்று (08.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சின்ன கண்ணாடி கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சித்தி விநாயகர் மற்றும் எல்லைப்பிடாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகத்திற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்
எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்பித்தார். உடன் திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
▶️கடலூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04142-212660
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
பண்ருட்டி – திருத்துறையூர் ரயில் நிலையத்திற்கு இடையே நேற்று (செப்.7) ரயில்பாதை அருகே 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்ததாக வந்த தகவலின் பேரில் கடலுார் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார், சடலத்தை மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடலூர் மக்களே இதற்கு விண்ணபிக்க அதிகாரப்பூர்வ <
வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது Office Assistant, (Assistant Manager) மொத்தம் 13,217 காலிப் பணியிடங்களை நிரப்படவுள்ளது. டிகிரி முடித்திருந்தால் போதும் நீங்களும் Bank-யில் பணியாற்றலாம். வயது வரம்பு 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். மாதம் ரூ.35,000 முதல் ரூ.85,000 வாங்கலாம். இப்போதே Online-யில் <
Sorry, no posts matched your criteria.