Cuddalore

News April 11, 2025

கடலூர்: 10 வட்டாட்சியர் அலுவலகங்களில் நாளை சிறப்பு முகாம்- ஆட்சியர்

image

கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, வேப்பூர், புவனகிரி ஆகிய 10 இடங்களில் வட்டாட்சியர் அலுவலகங்கள் செயல்படுகிறது. இந்த அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நாளை (12/4/2025) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

News April 11, 2025

குழந்தை பாக்கியம் அருளும் மேல்பட்டாம்பாக்கம் சுப்பிரமணியர்

image

மேல்பட்டாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. உற்சவத்தின் 9 நாட்களும் தினமும் மகா அபிஷேகம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சி தருகிறார். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் முருகனுக்கு தேன் அபிஷேகம் செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

News April 11, 2025

கடலூர் மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் இன்று (ஏப்.11) பல்வேறு பகுதியில் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கடலூர் மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்க. இந்த தகவலை உங்க உறவினர்களுக்கும் SHARE பண்ணுங்க…

News April 11, 2025

ரேஷன் கார்டில் திருத்தும் செய்யணுமா?

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களை இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை. ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.

News April 11, 2025

விருத்தாசலத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 3 பேர் கைது

image

விருத்தாசலம் போலீசாருக்கு நேற்று காலை கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் விருத்தாசலத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 2 பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட விருத்தாசலத்தை சேர்ந்த வசந்தி (45), ராமச்சந்திரன் (65), சரண்ராஜ் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

News April 10, 2025

கடலூர்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய எண்கள்..

image

கடலூர் மாவட்ட மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அரசு தொலைபேசி எண்கள். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் – 98941 81364, குடிநீர் பிரச்சனை – 1800 425 1941, மாவட்ட சமூக நல அலுவலர் (குழந்தை திருமண தடுப்பு) – 1098, வரதட்சணை தடுப்பு & பெண்கள் குடும்ப வன்கொடுமை பாதுகாப்பு – 1091, மருத்துவ உதவி அழைப்பு – 104. இந்த தகவலை பிறரும் தெரிந்து கொள்ள SHARE செய்யவும்!

News April 10, 2025

ராணுவத்தில் சேர கடைசி வாய்ப்பு-APPLY NOW!

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணிகளுக்கு <>அதிகாரப்பூர்வ இணையத்தில் <<>>ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில், இன்றே கடைசி நாள் என்பதால் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உடனே APPLY செய்து, உங்க நண்பர்களுக்கும் இத்தகவலை SHARE பண்ணுங்க…

News April 9, 2025

தடையை மீறி மீன் பிடித்தால் சட்டப்படி நடவடிக்கை – ஆட்சியர்

image

கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் கடலுார் மாவட்டத்தில்வரும் 15ம் தேதி முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக் காலம் அமல்படுத்தப்படுகிறது. தடையை மீறி மீன்பிடி வலைகள் கொண்டு மீன்பிடிப்பில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 9, 2025

கடலூர்: 14 எஸ்.ஐ.க்கள் இடம் மாற்றம் – எஸ்.பி. அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படை எஸ்.ஐ. சிவக்குமார், கடலூர் போக்குவரத்து காவல் நிலையத்திற்கும், ஆயுதப்படை தில்லை கோவிந்தராஜ பெருமாள் சிதம்பரத்திற்கும், ஆயுதப்படை எஸ்.ஐ.க்கள் செல்வநாயகம், ராமஜெயம், ஆனந்தன் ஆகியோர் விருத்தாசலம் போக்குவரத்து காவல் நிலையத்திற்கும் என மாவட்டம் முழுவதும் 14 எஸ்.ஐ.க்களை பணி இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

News April 9, 2025

புதுச்சேரி – கடலுார் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

image

புதுவை மாநிலம், கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் கோவில் செடல் உற்சவத் திருவிழா நாளை (10ம் தேதி) நடக்கிறது. இதனால், புதுச்சேரி-கடலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், நான்கு சக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்து நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கடலூரிலிருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்கள் கன்னியகோயில் புதிய பைபாஸ் வழியாக செல்லும்.

error: Content is protected !!