India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாளை சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கலெக்டர் தேசியக்கொடி ஏற்றுகிறார். இதனை முன்னிட்டு இன்று மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், எஸ்.பி. ராஜாராம் ஆகியோர் சுதந்திர தின போலீஸ் ஒத்திகை நிகழ்ச்சியை பார்வையிட்டனர். அப்பொழுது வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்
சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 18ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்தும் இன்று மற்றும் வரும் 19ஆம் தேதி செங்கல்பட்டில் இருந்தும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பண்ருட்டி, கடலூர் துறைமுகம், சிதம்பரம் ஆகிய ஊர்களில் நின்று செல்லும். செங்கல்பட்டிலிருந்து மாலை 5.55க்கு புறப்படும் இந்த ரயில் (06019) பண்ருட்டிக்கு இரவு 08.05க்கு வந்து திருநெல்வேலிக்கு மறுநாள் காலை 5.50க்கு செல்லும்.
கடலூர், செம்மண்டலத்தில் உள்ள தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக கிளை அலுவலகம் மூலம் குரு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா வரும் 19ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 சதவீத சலுகை அளிக்கப்படும் என கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னக ரயில்வே சார்பில், அகமதாபாத்தில் இருந்து கடலுார் வழியாக திருச்சிக்கு வரும் 22 ஆம் தேதி முதல், டிச. 26 ஆம் தேதி வரையில், வியாழக்கிழமைகளில் வாராந்திர அதிவேக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் வரும் 22, 29-ஆம் தேதிகளிலும், செப்டம்பரில் 5, 12, 19, 26, அக்டோபரில் 3, 10, 17, 24, 31, நவம்பரில் 7, 14, 21, 28, டிசம்பரில் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.
கடலூர் மாவட்ட எஸ்.பி. இராஜாராம், மாவட்டத்திற்குள் ஒரே காவல் நிலையத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் உள்பட 350 பேரை பணியிட மாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அவர்களை உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய காவல் நிலையங்களுக்கு பணிக்கு செல்ல வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மஞ்சக்குப்பம் டவுன்ஹால் அருகே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு மற்றும் அதன் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை, கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று வழங்கினார். இதில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி பிறந்தநாளை முன்னிட்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மாநகர் மாவட்டம் சார்பில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கடலூரில் நடைபெற உள்ளது. இந்த விழிப்புணர்வு பேரணி தொடர்பான துண்டறிக்கையை, வி.சி.க மாநகர செயலாளர் செந்தில், வி.சி.க தலைவர் திருமாவளவனிடம் இன்று வழங்கினார்.
கடலூர் டவுன்ஹால் அருகே சர்வதேச இளைஞர் தினத்தினை முன்னிட்டு தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று தடுப்பு குறித்து ஆட்டோக்களில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று ஒட்டுவில்லைகளை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
கடலூர் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்கம் நடத்தும் வேலை வாய்ப்பு முகாம், செம்மண்டலம் தனியார் மகளிர் கல்லூரியில் நாளை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் எஸ்எல் லூமேக்ஸ் நிறுவனம் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளதாக கடலூர் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்கம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நாளை மறுநாள் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும், மதுபான பார்களையும் அன்று ஒரு நாள் மூட வேண்டும். இதை மீறி கடைகளை திறந்து மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.