India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் பேருந்து நிலையத்தில் பல்வேறு பகுதிகளுக்கான புதிய பேருந்து போக்குவரத்து சேவையினை மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், மாநகராட்சி ஆணையர் S. அனு IAS மற்றும் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன் ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர். உடன் போக்குவரத்து துறை அலுவலர்கள், தொமுச நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பண்ருட்டியில் இருந்து இன்று காலை அரசு பேருந்து ஒன்று கடலூர் நோக்கி புறப்பட்டது. பண்ருட்டியில் உள்ள ஒரு வளைவில் திரும்பிய போது, எதிரே வந்த தனியார் பள்ளி வேன் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பள்ளி வேன் டிரைவர் மற்றும் 5 மாணவர்கள் லேசான காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
கடலூர் அடுத்த திருவந்திபுரத்தை சேர்ந்தவர் டிரைவர் மகேஷ்குமார் (42), அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் நேற்று கடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து மகேஷ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் அடுத்த திருவந்திபுரத்தை சேர்ந்தவர் டிரைவர் மகேஷ்குமார் (42), அதே பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் நேற்று கடலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து மகேஷ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் செம்மண்டலம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மஞ்சக்குப்பம், வில்வநகர், வேணுகோபாலபுரம், குண்டுஉப்பலவாடி, தாழங்குடா, குண்டுசாலை ரோடு, போலீஸ் கோர்டர்ஸ், புதுக்குப்பம், தேவனாம்பட்டினம், சுனாமி நகர், பாரதி ரோடு, பீச்ரோடு, புதுப்பாளையம், சில்வர் பீச், வன்னியர்பாளையம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 78-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அப்போது அவருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜராம் , கூடுதல் ஆட்சியர் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு கடலூர் அருகே பில்லாலி பகுதியில் கிராம சபை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அப்பொழுது பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள துறைகளை கூறினர். இதில் ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சுதந்திர தின விழாவையொட்டி கடலூர் பாடலீஸ்வரர் கோயிலில் இன்று சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி, போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் பங்கேற்று பொதுமக்களுடன் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர். இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், கடலூர் சரக ஆய்வர் பரமேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
78-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பில்லாலி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் சரண்யா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கடலூர் பெரிய கங்கணாங்குப்பத்தில் 13-ம் தேதி நடிகர் சேரன் காரில் வந்தபோது தனியார் பேருந்து அதிக சத்தத்துடன் ஹாரன் அடித்ததாக கூறி டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள், சேரன் போலீசில் புகார் அளிக்காமல் தானாக சட்டத்தை கையில் எடுத்துள்ளார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடலூர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.