Cuddalore

News September 9, 2025

ஆலப்பாக்கம் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், ஆலப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் “நடுவுல கொஞ்சம் கற்றலைத் தேடி” திட்டத்தில் வகுப்புகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (09.09.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News September 9, 2025

கடலூர்: தப்பி ஓடியவரை சுட்டுப்பிடித்த போலீசார்

image

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் கஞ்சா போதையில் மோதிய வழக்கில் தப்பியவரை சுட்டுப் பிடித்த காவல்துறையினர். கஞ்சா போதையில் 3 இளைஞர்கள், 4 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கில் கந்தவேல் என்பவர் தப்பி ஓடினார். மேலும் தப்பியோடிய கந்தவேல் என்பவரை காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News September 9, 2025

ஆலப்பாக்கம்: வீடுகள் கட்டுமான பணி-ஆட்சியர் ஆய்வு

image

குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், ஆலப்பாக்கம் ஊராட்சியில் முதல்வரின் வீடுகள் மறுகட்டமைப்பு திட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், இன்று (09.09.2025) காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவருடன் பல்வேறு துறை அரசு அதிகாரிகளுடன் இருந்தனர்.

News September 9, 2025

கடலூர் மாவட்டத்தில் விஜய் சுற்றுப்பயணம்!

image

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் செப்டம்பர் 13 ஆம் தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக இன்று அட்டவணை வெளியானது. இந்த நிலையில் கடலூரில் நவம்பர் 22 ஆம் தேதி சனிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனால் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News September 9, 2025

கடலூர்: மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

image

காட்டுமன்னார்கோவில் அடுத்த டி.மணலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ரகோத்தமன் இவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள டி.நெடுஞ்சேரியில் மேச்சலுக்கு சென்ற மாடுகள் வராததால் அதனைத் தேடி வயலுக்கு சென்ற நிலையில் திடீரென பெய்த மழையில் அப்போது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புகாரின் பேரில் புத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News September 9, 2025

கடலூர் ஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம்

image

கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது மாநில ஒருங்கிணைப்பாளர் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முன்னணி வகித்தனர். இதில் பழைய டென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; ஆசிரியர்கள் டெட் தேர்வு அவசியம் என்பதை ரத்து செய்ய வேண்டும்; மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

News September 9, 2025

கடலூர்: மின்சார பிரச்சனையா? இதோ தீர்வு!

image

கடலூர் மக்களே சமீப காலமாக மிஞ்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுதலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிதலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழ அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 9, 2025

கடலூர்: பொதுமக்களிடம் 498 மனுக்களை பெற்ற ஆட்சியர்

image

கடலூரில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 498 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் அளித்தனர். அந்த மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News September 9, 2025

கடலூர்: கனரா வங்கியில் வேலை! Apply பண்ணுங்க!

image

கடலூர் இளைஞர்களே பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்படவுள்ளது. டிகிரி முடித்தால் போதும் நீங்களும் வங்கி வேலைக்கு போகலாம். விருப்பமமுள்ளவர்கள் 06.10.2025 தேதிக்குள் <>இங்கே க்ளிக் செய்து<<>> Register பண்ணுங்க. இப்பணிக்கு மாதம் ரூ.22,000 முதல் சம்பளம் வழங்கப்படும். வயது வரம்பு 20 முதல் 30 வயதியிக்குள் இருக்க வேண்டும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 9, 2025

கடலூர்: வெலிங்டன் ஏரி சீரமைக்க ரூ.130 கோடி

image

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே நூறாண்டுகள் பழமையான வெலிங்டன் ஏரி மற்றும் கால்வாயை சீரமைக்க ரூ.130 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு
கடலூரில் நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை அறிவித்திருந்தார். அதன்படி, ஏரியின் கரைகளை சீரமைக்க ரூ.74 கோடி, முதன்மை கால்வாய் சீரமைப்புக்கு ரூ.20 கோடி உபரிநீர் கால்வாய் சீரமைப்புக்கு ரூ.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!