Coimbatore

News April 17, 2025

கோவை மக்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்

image

▶️கோவை மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077 ▶️மாவட்ட ஆட்சியர் 0422-2301114 ▶️மாநகர காவல் ஆணையர் 0422-2300250 ▶️மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 0422-2300600 ▶️விபத்து அவசர வாகன உதவி 102▶️குழந்தைகள் பாதுகாப்பு 1098▶️பெண்கள் உதவி எண் 181▶️முதியோர்கள் உதவி எண் 14567▶️பேரிடர் கால உதவி 1077▶️சைபர் க்ரைம் உதவி எண்1930 ▶️ இரத்த வங்கி சேவை 1910, மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

News April 17, 2025

ஊட்டிக்கு செல்வோர் கவனத்திற்கு!

image

உதகையில் கோடை சீசன் துவங்கியுள்ளதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மே.1ஆம் தேதி முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் வாகனங்கள் குன்னூர் வழியாகவும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் வரும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும், ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட உள்ளது. இதனிடைய ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு வரும் ஏப்.20 ஆம் தேதி முதலே இந்த மாற்றம் செய்யப்பட உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

News April 17, 2025

கோவை: பூங்கோல் தாயார் கோயில்

image

கோவையில் எழில்கொஞ்சும் கோவனூரில், பழமையான பூங்கோல் தாயார் குகைக்கோயில் அமைந்துள்ளது. அழகிய மலையிடுக்குகளில் இடையில், அம்மன் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கிறார். அம்மனை தரிசிக்க செல்லும் வழியில் எல்லாம் சிறிய சிறிய நீருற்றுக்கள் என, இயற்கை நம்மை பிரம்மிக்க வைக்கிறது. குடும்பத்துடன் ஒரு நாள், இயற்கையுடன் செலவிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு, பூங்கோல் தாயார் கோயில் ஒரு வரப்பிரசாதம். SHARE பண்ணுங்க.

News April 17, 2025

கோவை: செங்கல் தலையில் விழுந்து ஒருவர் பலி

image

பீகாரை சேர்ந்தவர் முகமது சலீம்(43). கட்டட கூலி தொழிலாளியான இவர், கோவை, கோவில்பாளையம், வழியாம்பாளையத்தில் அடுக்கு மாடி கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது முதல் தளத்திலிருந்து, எதிர்பாராத விதமாக செங்கல் ஒன்று, முகமது சலீம் தலையில் விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

News April 16, 2025

கோவை: ரூ.45,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள 1 குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள், இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு SHARE செய்யவும்.

News April 16, 2025

கோவை: சமையல் உதவியாளர் பணிக்கு அழைப்பு

image

கோவை மாவட்ட சமூக நலத்துறையின் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 331 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு பெண்களை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது.21 முதல் 40 வயதுக்குள் உள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஏப்ரல் 28க்குள் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியுடைய பெண்கள் தகுந்த சான்றிதழ்களுடன் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 16, 2025

கோவையில் குண்டர் சட்டத்தில் 61 பேர் கைது

image

கோவை மாநகர போலீசார் கடந்த நான்கு மாதங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ரவுடிகள், பாலியல் குற்றவாளிகள், போதைப் பொருள் விற்பனையாளர்கள் என மொத்தம் 61 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும், குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்தவும், மாநகரில் குற்றங்களை குறைக்கவும் 51-ஏ சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக நேற்று காவல் ஆணையர் தெரிவித்தார்.

News April 16, 2025

ஜிப்லிக்கு நோ சொல்லுங்க; சைபர் கிரைம் எச்சரிக்கை!

image

கோவை மக்களே, ஜிப்லி(Ghibli) புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதில் நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களை டீப் ஃபேக் (Deep fake) தொழில்நுட்பத்தில் பயன்படுத்தி தவறாக சித்தரிக்கப்படும் அபாயம் உள்ளதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சைபர் க்ரைம் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணை அழைக்கவும். இதை ஷேர் பண்ணுங்க! உங்க நண்பர்களும் Ghibli ஆபத்தை தெரிஞ்சுக்கட்டும்.

News April 16, 2025

சமூக ஆர்வலர்களுக்கு பாராட்டு விழா

image

கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீர் பாதுகாப்பில் சிறப்பாக செயல்படுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட
உள்ளது. நீர் பாதுகாப்பில் செயல்படுபவர்களின் விவரங்கள் மாநகராட்சியின் ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மையத்திற்கு அனுப்புமாறு என்றார்

News April 16, 2025

கோவை; ‘நோ’ சொன்னவரை கொன்றவனுக்கு ஆயுள் தண்டனை

image

கோவை எஸ்.சி.எஸ்.டி நீதிமன்றம் ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த ஒருவரைக் கொலை செய்த குற்றவாளிக்கு நேற்று ஆயுள் தண்டனை விதித்தது. திருநெல்வேலியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இடையர்பாளையத்தை சேர்ந்த மணிஜோசப் என்பவரை போலீசார் கைது செய்தனர்.  இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி விவேகானந்தன், மணி ஜோசப்புக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

error: Content is protected !!