India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாநகராட்சியில் 25 ஆண்டுகள் அப்பழுக்கின்றி பணியாற்றிய பணியாளர்களுக்கு ரூ.2000/- வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் , வழங்கினார். உடன் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இருந்தனர்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கோவை, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் (ஆகஸ்ட் 15) நள்ளிரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கோவை: நபார்டு வங்கியில் (NABCONS) காலியாக உள்ள 63 Junior Technical Supervisors பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.1,15,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் 26 தேதிக்குள்<
கோவையில், ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி இரண்டு நபர்களிடம் ரூ.40.5 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற மோசடிகளில் பாதிக்கப்பட்டால், 0422-2300600 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது https://cybercrime.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம்.விழிப்புடன் இருக்க, இந்தத் தகவலைப் ஷேர் பண்ணுங்க
பசுமை நிறைந்த கோவை மாவட்டத்தைச் சுற்றி பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. அவற்றில், நீங்கள் பார்த்தே ஆக வேண்டிய 10 இடங்கள்:
மருதமலை
சிறுவாணி
கோவை குற்றாலம்
பூண்டி வெள்ளியங்கிரிமலை ஆண்டவர் சன்னதி
ஆழியாறு அணை
குரங்கருவி
காடாம்பாறை அணை
டாப் ஸ்லிப்
திருமூர்த்தி மலை
பர்லிக்காடு பரிசல் சவாரி
இதுதவிர வேறு இடங்கள் இருந்தால் தெரிவிக்கவும்! கோவை மக்களே SHARE பண்ணுங்க!
கோவை மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிவாய்ப்பை எதிர்பார்ப்பவரா நீங்கள்? உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி பெற விரும்புகிறீர்களா? சரியான நேரம் இதுதான். மொத்தம் 750 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
விநாயகர் சதுர்த்தியையொட்டி சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில், களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பிளாஸ்டிக், தெர்மாகோல் போன்ற பொருட்களால் செய்யப்பட்ட சிலைகளைத் தவிர்க்க வேண்டும். ரசாயன சாயங்கள் பயன்படுத்தப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கக் கூடாது. இயற்கையான சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என கோவை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றுடன் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதுவரை தற்காலிக பட்டாசு கடை அமைக்க 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில் முழுமையான விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவித்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு படிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? அதுவும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இப்பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் 12-ம் வகுப்பு,டிப்ளமோ,டிகிரி முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம்.விண்ணபிக்க<
மத்திய வங்கக்கடலின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த நிலையில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலையில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசான முதல் மணி வரை லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.