India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்களை கண்காணித்து அவர்களை சென்னை நகர போலீஸ் சட்டப்பிரிவு 51ன் கீழ் நகரை விட்டு 6 மாதத்திற்கு வெளியேற உத்தரவிடப்பட்டு வருகிறது. மேலும், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சாட்சி சொல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். சாட்சிகளை இவர்கள் மிரட்டி வருகின்றனர். அதன்படி கோவை நகரில் இருந்து இதுவரை 155 ரவுடிகள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோயம்புத்தூரில் இன்று (ஆகஸ்ட் 17) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழையின் அளவு 7 முதல் 11 செ.மீ வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மிதமான கனமழைக்கான எச்சரிக்கையாகும். பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கோவை மக்களே EB கட்டணம் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ஆனால், அந்த கவலை இனி வேண்டாம். <
கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Artificial Intelligence Programmer பயிற்சி வழங்கப்படுகிறது. 75 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் AI தொழில்நுட்பம் தொடர்பான அனைத்தும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு டிகிரி முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <
கோவை மாவட்டத்தில் இன்று (16.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் ஆக.19, 20 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இப்பயிற்சி சிறு தொழில் முனைவோருக்கு தங்களது வருமானத்தை பெருக்க பெரும் உதவியாக இருக்கும். பயிற்சியில் ரொட்டி வகைகள், கேக் மற்றும் பிஸ்கட், பப்ஸ் வகைகள் தயாரிக்க தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட உள்ளது. விபரங்களுக்கு: 94885 18268 என்ற எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோவை மக்களே, மத்திய அரசு புலனாய்வு துறையில் தற்போது காலியாகவுள்ள, 4987 Security Assistant (SA)/ Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10வது தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பளம் ரூ, 21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படும். இதில் சேர விருப்பமுள்ளவர்கள், <
பொள்ளாச்சி ஆவலப்பம்பட்டியை சேர்ந்த விவசாயி முத்துக்குமார்(47). இவருக்கு சொந்தமான தோப்பு வீட்டில் ஆனைமலையை சேர்ந்த வடிவேல், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். முத்துக்குமாரிடமிருந்து பணம் பெற்ற இருவரும் தராமல் இழுத்து வந்த நிலையில் வீட்டை காலி செய்ய கூறியுள்ளார். ஆத்திரமடைந்த இருவரும் நேற்று அவரை வெட்டி கொலை செய்தனர். தொடர்ந்து இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
கோவை மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் மேற்பார்வையாளர் என 90 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.76,380 வரை வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
Sorry, no posts matched your criteria.