India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை தடாகம் சாலை, கோவில்மேடு அருகே, கல்யாணி நகரில் உள்ள வயல்வெளியில், நேற்று (மார்ச்.17) ஆரஞ்சு நிறத்தில் தவளைகள் தென்பட்டதால், அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். மேலும் சிலர், அந்த தவளைகளை தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த புகைப்படம் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மார்ச்.23ஆம் தேதி கோவை வருகிறார். ஆர்.எஸ்.புரத்தில் கோவை மாநகராட்சி நிதியின் கீழ் சர்வதேச ஹாக்கி மைதானம் அமைக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு அடிக்கல் நாட்டுவதற்காக தமிழக அரசு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோவைக்கு வருகை தர உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் முனைப்புடன் செய்து வருகிறது.
கோவை இந்துஸ்தான் கல்லூரியில் மார்ச்.22ஆம் தேதி மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் துறை மூலம் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் 8, 10, 12, டிகிரி, டிப்ளமோ முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் தேர்ச்சி பெறுவோருக்கு உடனே வேலை வழங்கப்படும். (Share பண்ணுங்க).
கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று(மார்ச்.17) திடீரென பெய்த மழையால் அப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் அடுத்த இரு நாள்கள்( நாளை, நாளை மறுநாள்) மிதமான மழை இருக்கும் என TNAU காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கோவை மக்களே வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள். Share பண்ணுங்க
கோவை மாவட்டத்தில் இன்று (17.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின், கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
கனடா புதிய பிரதமர் மார்க் கார்னியின் அமைச்சரவையில் கோவையை பூர்வீகமாக கொண்ட பெண் அனிதா ஆனந்த் இடம் பெற்றுள்ளார். இவர் கனடாவின் அறிவியல் மற்றும் தொழில்துறையின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அனிதாவின் தந்தைவழி தாத்தா கோவை வெள்ளலூர் அன்னசாமி சுந்தரம் ஆவார். இவர் மகாத்மா காந்தியுடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். கோவைக்கு பெருமை சேர்த்த அனிதா-க்கு வாழ்த்துக்கள் குவிகின்றன.
கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக, வெயில் சுட்டெரித்து வந்தது. இதனிடையே நகரின் பல பகுதிகளில், கடந்த 2 தினங்களாக, பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் சில இடங்களில், இன்றிரவு 7 மணி வரை, மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
கோவை மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி நேற்று வெளிட்ட செய்திக்குறிப்பில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் தமிழக சுற்றுலா துறை சார்பில் சுற்றுலா பயணச்சந்தை நிகழ்ச்சி மார்ச்.21 முதல் 23ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. கோவை மாவட்ட சுற்றுலா தொடர்புடைய தங்கும் விடுதிகள், முகவா்கள், ஏற்பாட்டாளா்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனம் சார்ந்த தகவல் அரங்குகளை அமைத்து பயன்பெற கேட்டுள்ளார்.
கோவை மாநகராட்சியில் ஒவ்வொரு வாரமும் செவ்வாயன்று மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நாளை (மார்ச்.18) நடைபெற இருந்த மாநகராட்சி மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் சார்பில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாஜக சார்பில் இன்று(மார்ச்.17) டாஸ்மாக் ஊழலை கண்டித்து முற்றுகை போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இதில் கலந்து கொள்ள வந்த பாஜக தேசிய மகளிர் அணி தலைவி, கோவை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனை, ஆர்ப்பாட்டம் செல்லும் வழியிலே போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.