India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியாவின் மிகப்பெரிய ராட்டினம் டெல்லியில் உள்ளது. அதே போல மும்பையில் ஒரு பிரம்மாண்ட ராட்டினத்தை அமைக்க மும்பை மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டம் ஆரம்ப நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய ராட்டினத்தை கோவை காந்திபுரம் பகுதியில் அமைந்து வரும் செம்மொழி பூங்காவில் நிறுவ கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோவை கலெக்டர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவத் துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற விரும்பும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) இலவச ஆங்கில மொழிப் பயிற்சி அளிக்க உள்ளது. இப்பயிற்சியில் சேர www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாநகராட்சி 74-வது வார்டு கவுன்சிலர் எஸ்.சங்கர் இன்று (மார்ச்.9) தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் கே.செல்வப் பெருந்தகை எம்எல்ஏ அவர்கள் நாளை (மார்ச்.10) மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து வரும் விமானத்தில் கோவை விமான நிலையம் வந்து அடைகிறார் என குறிப்பிட்டிருந்தார்.
கோவையில் பல புகழ்பெற்ற கோயில்கள் உள்ளன. அவற்றில் ▶முருகன் கோயில் மருதமலை. ▶ஈச்சனாரி விநாயகர் கோயில். ▶கோனியம்மன் கோயில். ▶பூரி ஜகனத் கோயில். ▶பேரூர் பட்டீஸ்வரர் கோயில். ▶தியானலிங்க கோவில். ▶காரமடை அரங்கநாதர் சுவாமி கோயில். ▶மாசாணியம்மன் ஆலயம். ▶தண்டுமாரி அம்மன் ஆலயம். ▶வெள்ளியங்கிரி சிவன் மலை கோயில் ஆகிய கோவில்கள் உள்ளன. கோவை மக்களே உங்க குலதெய்வ கோவில்களை கீழே கமெண்ட் பண்ணுங்க. Share பண்ணுங்க
கோவைக்கு இன்று (9.3.25) மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வந்தார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் போதை புழக்கத்தால் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
போலி “ஆப்” மூலம் பல்வேறு மோசடி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கோவை சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், போலி பேமென்ட் செயலிகள் மூலம் மோசடி அதிகரித்துள்ளது. பணம் அனுப்பியது போல் ஸ்கிரின் ஷாட், SMS உள்ளிட்டவை அனுப்புகின்றனர். SMS வந்து விட்டது என நம்பக்கூடாது. வங்கி கணக்கில் பணம் வந்து விட்டதா என சோதனை செய்ய வேண்டும். பணம் வந்த பிறகே, உறுதி செய்ய வேண்டும். மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார்.
சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் நேற்று விடுத்த செய்திக்குறிப்பில் ரயில் பாதையில் பல இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் ஆலப்புழாவில் இருந்து மார்ச்.10, 12, 15 ஆகிய தேதிகளில் ஆலப்புழா – தன்பாத் விரைவு ரயிலும், எர்ணாகுளத்தில் இருந்து இதே தேதிகளில் எர்ணாகுளம் – பெங்களூரு விரைவு ரயில் போத்தனூா், இருகூா் வழியாக இயக்கப்படும். கோவை ரயில்வே நிலையம் செல்வது தவிர்க்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இன்று (08.03.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
தொழில்துறையில் கோவை தேசிய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் புகழ் பெற்றுள்ளது. சோதனை, சவால்களை கண்டு முடங்கிவிடாமல் தைரியத்துடன் அவற்றை எதிர்கொள்ளும் திறன் கோவை தொழில்முனைவோரிடத்தில் உள்ளதே இதற்கு காரணம். பெரிய நூற்பாலைகள் அதற்கு தேவையான உயர்ந்த பொறியியல் தொழிற்சாலைகள்,வார்ப்பட தொழிற்சாலைகள், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள், மருத்துவமனைகள் கடந்த நூற்றாண்டில் தொடங்கி இன்று வரை வெற்றி நடைபோடுகின்றன.
கிணத்துக்கடவில், மசாஜ் மையம் என்ற பெயரில் விபச்சாரம் நடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். விசாரணையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் ஒருவர், மசாஜ் மையம் நடத்துவதற்காக வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் இரு பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வருவது தெரியவந்தது. போலீசார் இரு பெண்களையும் மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பென்னை கினத்துக்கடவு போலிசார் தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.