India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையினை புதிதாக பெற மற்றும் ஏற்கனவே விண்ணப்பித்து இதுவரை பெறப்படாத மாற்றுத்திறனாளிகள் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களுடன் வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெற கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை வானிலை மைய அதிகாரிகள் இன்று (மே.14) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகபட்சமாக 35 °, குறைந்த பட்சம் 24 ° இருக்கும், லேசானது முதல் மிதமான மழை பெய்யும். வியாழன், வெள்ளி இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும். சனிக்கிழமை மேகமூட்டம், இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஞாயிறு லேசான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று பதிவான மழைப்பொழிவு விவரத்தில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது அதன்படி, பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி பகுதியில் 8 செ.மீட்டரும், பொள்ளாச்சியில் 7 செ.மீட்டரும், ஆழியார் பகுதியில் 6 செ.மீட்டரும், சின்கோனா பகுதியில் 5 செ.மீட்டரும், சின்னக்கல்லார், வால்பாறை PAP, வால்பாறை PTO, போன்ற பிற பகுதிகளில் 2 செ.மீட்ட்ரும் மழைப் பதிவானது.
திருப்பூர் சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு பின்னர் கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்க பட்டு இருந்தார்.
அவ்வாறு, கோவை சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கபட்டு இருந்த சிறுவன், நேற்று இரவு சோப் ஆயிலை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இது குறித்து பந்தயசாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் கோவை மாவட்டம் 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 91.64% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 86.99 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 94.76 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து நிலையில் இருந்து வந்தது இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் இது குறித்து இன்று வானிலை மை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை மாவட்டத்தில் 16ஆம் தேதி அன்று மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி கோவை மாவட்டத்தில் மாணவர்கள் 94.31 % பேரும், மாணவியர் 97.49 % பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 96.02 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. தேர்ச்சி விகிதத்தில் தமிழக அளவில் கோவை மாவட்டம் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
ரஷிய கலாசார மையத்தின் இயக்குநரும், துணை தூதருமான அலெக்ஸாண்டா் டோடோநவ் நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்திய மாணவா்கள் சுமாா் 6 ஆயிரம் போ் கடந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சோ்ந்தனா் . இந்த ஆண்டு இந்திய மாணவா்களுக்கான மருத்துவ இடங்களின் எண்ணிக்கையை 8 ஆயிரமாக உயா்த்தியிருக்கிறோம் . அதேபோல ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கல்வி கட்டணத்திலேயே மருத்துவம் படிக்க முடியும் என்றார்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஜன.01ஆம் தேதி முதல் இன்று வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 114 நபர்கள் கைது செய்து, 81பேர் மீது வழக்கு பதிவுசெய்தும் , 33 பேரை எச்சரிக்கை செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 99 கிலோ 28 கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இன்று எஸ்பி பத்ரிநாராயணன் கூறினார்.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று (மே.13) வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜன.01ஆம் தேதி முதல் இன்று வரை இது வரை சமூகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய 24 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அவர்கள் பிணயில் வெளியே வரமுடியாத அளவுக்கு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.