India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உடையாம்பாளையத்தில் புதிதாக நடைபெற்று வரும் வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த போது இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர் இந்நிலையில் இன்று உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த குமார், மனோஜ் ஆகியோர் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் தமிழகத்தில் கடந்த மாதம், 19ம் தேதி நடைபெற்றது. வரும் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. கோவை மாவட்டத்தில் ஓட்டு எண்ணும் பணியில், 706 ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளில், அசம்பாவிதங்களை தடுக்க, கோவை மற்றும் பொள்ளாச்சியில், 1000 போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக இன்று காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த 1989-ஆம் ஆண்டு கல்லூரி கல்விப் பணியில் வேதியியல் துறையில் சேர்ந்து பல்வேறு கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றிய உலகி கோவை வருவதற்கு முன் கடலூா் பெரியாா் அரசு கலை கல்லூரியின் முதல்வராக இருந்தாா். கடந்த 2021ல் கோவை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநராக நியமிக்கப்பட்ட அவா் பின் கோவை அரசு கலை கல்லூரியின் முதல்வராக கடந்த 2022 டிசம்பா் மாதம் நியமிக்கப்பட்டாா். இவர் நேற்று ஓய்வு பெற்றார்.
கோவை -சார்ஜா இடையே ஏர் அரேபியா என்ற விமானம் இயக்க பட்டு வருகிறது. இந்த ஏர் அரேபியா விமானம் 160 பயணிகளுடன் கோவையிலிருந்து இன்று (ஜுன் 01) அதிகாலை 4.15 மணிக்கு செல்ல வேண்டிய விமானத்தில் திடிர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட காரணங்களால் விமானம் புறப்பட வில்லை மேலும் தற்போது வரை இந்த தொழில்நுட்ப கோளாறு சரியாகாததால் இந்த விமானம் இன்னும் புறப்பட வில்லை என விமான நிலைய அதிகாரிகள் கூறினார்.
கோவை பூண்டி மலையடிவாரத்தில் இருந்து சுயம்பு லிங்கத்தை தரிசிக்க 51/2 கி.மீ தூரம் மலைப்பாதையில் மலையேற்றம் செய்ய வேண்டும். பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த பிப். முதல் இன்று வரை 2.25 லட்சம் பேர் மலையேற்றம் செய்துள்ளனர். இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் 25 ஆயிரம் பேர் கூடுதலாக மலையேறி உள்ளதாக இன்று வனத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை மலைப்பகுதியில், இரு நாட்களுக்கு (ஜூன்.1 மற்றும் ஜூன்.2) மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ளது. அதன்படி கோவையில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்
கோயம்புத்தூர் மலைப்பகுதியில், அடுத்த இரு நாட்களுக்கு (ஜூன்.1 & 2) மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவையில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக இது வெளியிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள தடுப்பணைகளில் விவசாய நோக்கத்திற்காக வண்டல் மண் எடுக்க தகுதி வாய்ந்த விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. அவ்வாறு வேளாண் நோக்கத்திற்காக வண்டல் மணல் தேவைப்படும் விவசாயிகள் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டாட்சியரை நேரில் சந்தித்து விண்ணப்பங்கள் வழங்கி அதற்கான அனுமதியை பெற்று கொள்ளலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி தெரிவித்துள்ளார்.
கோவை அருகே மேற்குத்தொடா்ச்சி மலையின் ஒருபகுதியாக உள்ளது வெள்ளிங்கிரி மலை. இங்குள்ள 7 ஆவது மலையில் சுயம்புலிங்கம் உள்ளது. இதனை வழிபடுவதற்காக ஆண்டு தோறும் பிப்ரவரி முதல் மே வரை பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். இந்தாண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில் மலையேற்றத்திற்கான அனுமதி இன்றுடன் நிறைவு பெறுவதாக போளுவாம்பட்டி வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை அரசு கலை கல்லூரியில் 2024 – 2025 ஆம் கல்வியாண்டு இளநிலை பிரிவில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் பதிவு கடந்த மே. 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. மொத்தம் 127 சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களில் 90 இடங்கள் நிரம்பின. ஜூன் 10 ஆம் தேதி பொதுப் பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.
Sorry, no posts matched your criteria.