India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான அரசமரம் இருந்தது. மரத்தின் அடியே விநாயகர் சிலை வைத்து ஊர் மக்கள் வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று(மே 15) பெய்த கனமழை காரணமாக மரம் இன்று(மே 16) மரம் சரிந்து விழுந்தது. பழமை வாய்ந்த மரம் சாய்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு இன்று(மே 16) மழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகனமழை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 செ.மீட்டருக்கு அதிகமான மழைப்பொழிவிற்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் அரவை கொப்பரை கிலோ ரூ.111.60க்கும், பந்து கொப்பரை கிலோ ரூ.120க்கும் விவசாயிகளிடம் இருந்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக கொள்முதல் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெறுமாறு கலெக்டர் அந்த குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இருந்து ஆம்னி பேருந்து ஒன்று நேற்று(மே 15) காலை கோவை காந்திபுரம் வந்தது. இளம்பெண் ஒருவா் மட்டும் படுக்கையிலேயே இருந்துள்ளாா். அவருடன் வந்தவா்கள் அவரை தட்டி எழுப்பியபோது உயிரிழந்தது தெரியவந்தது. விரைந்து வந்த காட்டூர் போலீசார் விசாரிக்கையில், உயிரிழந்தவா் குனியமுத்தூரை சோ்ந்த ஐடி ஊழியர் மகாலட்சுமி என்பதும், உடல் நலக்குறைவால் ஊருக்கு வந்ததும் தெரிந்தது.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி நேற்று(மே 15) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயமுத்தூர் மாவட்டத்திலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேருவதற்கு விருப்பமுள்ள மாணவ/மாணவியர் இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பங்களை ஆய்வு செய்து அவர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
கோவை வேளாண் பல்கலை. மாணவர் நல மையம் சார்பில் கோடைகால சிறப்பு நீச்சல் பயிற்சி முகாம் மே 18ம் தேதி துவங்குகிறது. தினசரி காலை, மாலை வேளைகளில் ஆண், பெண்களுக்கு தனித்தனியாக நடைபெற உள்ளது. வெளிநபா்களுக்கு ரூ.3,068, பல்கலை பணியாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.2,006 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் 99405 15222 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் 5 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. அதன்படி நேற்று(மே 15) 29 மிமீ, இன்று(மே 16) 4 மிமீ, 17ல் 32 மிமீ, 18ல் 30 மிமீ, 19ம் தேதி 34 மிமீ மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக 29-33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 20-23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கோவை, கவுண்டம்பாளையம் சீனிவாசன் நகரை சோ்ந்தவா் வழக்கறிஞர் ராஜ்குமாா்(49). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக பணியாற்றி வருகிறாா். கடந்த 11ம் தேதி இவா் குடும்பத்துடன் பெங்களூர் சென்றுவிட்டு நேற்று(மே 15) வீட்டிற்கு வந்தபோது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு 17 சவரன் தங்க நகைகள் ரூ.4.50 லட்சம் கொள்ளை போனது தெரிந்தது. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை மாவட்ட ஆட்சியருக்கு, இன்று பேரிடர் மேலாண்மை துறை கடிதம் அனுப்பி உள்ளது. அதில் கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் தயாராக இருக்க வேண்டும் எனவும் கோவை மட்டுமன்றி, நீலகிரி விருதுநகர் உள்ளிட்ட 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு, மாநில பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் அவசர கடிதம் கனமழையின்போது ஏதாவது எதிர்பாராத நிகழ்வுகள் பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
கோவை, திருப்பூர், தேனி ஆகிய மாவட்டங்களில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த மாவட்ட அளவில் செயல் திட்டத்தை கடைபிடிக்க மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மருந்துகள் இருப்பு, கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தினசரி அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளதாக சுகாதார துறை இணை இயக்குநர் அருணா இன்று தெரிவித்துள்ளனர்
Sorry, no posts matched your criteria.