India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கோவை வடக்கு சட்டமனற் தொகுதியில் 13ஆம் நம்பர் மேஜையில் இவிஎம் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.ERROR என்று காட்டியத்ஹல் ஏஆர்ஓ தலைமையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஆய்வு செய்யபட்டு வருகிறது.
கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அதிக தபால் 5127 வாக்குகளை பெற்று முன்னலியில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 1341 தபால் வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். தபால் வாக்குகள் பெற்று பாஜக அண்ணாமலை 1852 இரண்டாம் இடத்தில் உள்ளார்.
கோவை வாக்கு என்னும் மையத்தில் சரியான அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி முகவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.மின்விசிறி,குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி முகவர்கள் கடுமையாக கூச்சலிட்டு வருகின்றனர்.
கோவை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான ஜிசிடி வளாகத்தில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. முகவர்கள், வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு ஒரு வழி, அதிகாரிகளுக்கு ஒரு வழி. பேனா, நோட்பேட் ஆகியவை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 100 மீட்டர் வரை பொதுமக்கள், கட்சி தொண்டர்களுக்கு அனுமதி இல்லை. அரசு அலுவலர்களின் இரு சக்கர வாகனங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதி இல்லை.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, கோயமுத்தூர் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, கோயம்புத்தூர் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
2024 மக்களவைத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் மொத்தம் 64.81% வாக்குகள் பதிவாகி உள்ளது. வேட்பாளராக திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரும், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும், பாஜக சார்பில் அண்ணாமலையும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-னுடன் இணைந்திருங்கள்.
2019 மக்களவைத் தேர்தல் பொள்ளாச்சி தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்ட சண்முகசுந்தரம் 1,75,883 (16.32%) வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை 2024 மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் ஈஸ்வரசாமியும், அதிமுக சார்பில் கார்த்திக் அப்புசாமியும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? உங்கள் கருத்து என்ன?
2019 மக்களவைத் தேர்தல் கோயம்புத்தூர் தொகுதியில், திமுக கூட்டணியில் சிபிஎம் சார்பில் போட்டியிட்ட நடராஜன் 1,79,143 (14.38%) வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இம்முறை 2024 மக்களவைத் தேர்தலில், திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரும், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும், பாஜக சார்பில் அண்ணாமலையும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? உங்கள் கருத்து என்ன?
நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதனையடுத்து, அதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் இருந்து 100 மீட்டருக்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.