India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தனித்துவம் வாய்ந்த மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க ஏற்கனவே வைத்திருக்கும் அடையாள அட்டை கலர் நகல், ஆதார் அட்டை கலர் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தில் ஒருவர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்துக்கு வர வேண்டும் என கலெக்டர் கிராந்திக்குமார் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று (மே.16) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வால்பாறை PTO பகுதியில் 6 செ.மீட்டரும், சின்கோனா பகுதியில் 2 செ.மீட்டரும் மழைப்பொழிவு பாதிவாகியிருந்தது.
12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாணவ, மாணவிகளுக்கு ‘கல்லூரிக் கனவு’ இரண்டாம் கட்ட நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நாளை (மே 18) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அதிகமுள்ள கல்லூரிப் படிப்புகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும்.
கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில்,
கோவை மாநகர் மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட, மாநகர் மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள், பகுதிச் செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
இதில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
அரசு போக்குவரத்து கழகம் கோவை சார்பில் 602 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சிவப்பு நிறத்திலான சொகுசு பஸ்கள் 180. மகளிர் இலவசமாக பயணிக்க கூடிய வகையில் 422 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் மகளிருக்கான பஸ்களை அடையாளம் காண வெளிர் நீல நிறத்தில் 16 டவுன் பஸ்கள் ஜிபிஎஸ் வசதியுடன் நேற்று முதல் முதற்கட்டமாக இயக்கப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் அழகாக இருப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை குனியமுத்தூர் அடுத்த சுண்ணாம்பு கால்வாய் அணைக்கட்டு பகுதியில் கடந்த 3 மாதங்களாக நீர் வரத்து இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழை காரணமாக தண்ணீர் வர ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், அங்குள்ள சாய பட்டரைகளில் இருந்து சாயக் கழிவுகள் ஆற்றில் கலப்பதால் நீர் அதிக நுறையுடன் காணப்படுகிறது.
போக்குவரத்து கழக கோவை மண்டல பொது மேலாளர் ஸ்ரீதரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் இயக்கப்பட்டு வரும் பழைய பேருந்துகளை படிப்படியாக நிறுத்திவிட்டு புதிய பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதாக தமிழக அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டல பொதுமேலாளர் ஸ்ரீதரன் இன்று தெரிவித்துள்ளார்.
கோவை ரயில்வே அதிகாரிகள் இன்று(மே 16) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை வழியாக இயக்கப்படும் நிஜாமுதீன் கொச்சுவேலி வாராந்திர ரயில் 01.07.24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயணிகள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் பயணிக்கலாம். மேலும் திப்ருகர் முதல் நாகர்கோவில் வரை செல்லும் சிறப்பு ரயில் 03.07.24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 5 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 11 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 16 வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ அதே நிலையில் வரும் 30.05.2024 அன்று காலை 10 மணிக்கு கோவை அவிநாசி சாலையிலுள்ள கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்படும் என எஸ்பி பத்ரிநாராயணன் இன்று(மே 16) தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக கொப்பரை கொள்முதல் நடைபெறுகிறது. 31500 மெட்ரிக் டன் கொப்பரை, 800 மெட்ரிக் டன் பந்து கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 10ஆம் தேதி கொப்பரை கொள்முதல் நிறைவு பெறுகிறது. விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.