India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பல இடங்களில், கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கோவைக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை எச்சரிக்கையால் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையிலும், அவ்வாறு நடந்தால், என்னென்ன மீட்பு பணிகளை மேற்கொள்ளுவது என தயார் நிலையில் உள்ள மாநில பேரிடர் மீட்புப் படை உள்ளதாக இன்று தெரிவித்துள்ளனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் அரசு மாதிரி பள்ளி அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெய்சங்கர், மேற்கு மண்டல உதவி ஆணையர் சந்தியா, உதவி செயற்பொறியாளர் சவிதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
கோடை மழைக் காலம் என்பதால் சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்கி இருந்தால் ஓட்டுநர்கள் பேருந்துகளை கவனமாக ஓட்ட வேண்டும் என்று ஓட்டுநர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. மேலும் – பேருந்துகளில் நீர் கசிவு, நீர் உள்ளே புகுதல் மற்றும் சாய்வு இருக்கை சரி வர இயங்கவில்லை என பயணிகள் கூறும் குறைகளை உடனடியாக அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி அதை சரி செய்ய வேண்டும் என இன்று தெரிவித்துள்ளனர்.
கோவை ரத்தினபுரி சேர்ந்தவர் பிரபு(42). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை மிரட்டல் வழக்கில் ரத்தினபுரி போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று சிறையில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு அரசு மருத்துமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து பந்தைய சாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாநில பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது. அனைத்து மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் இருப்பதாக மாநில பேரிடர் மீட்புப்பட்டை தகவல் தெரிவித்துள்ளது. கோவையில் அடுத்த 5 நாட்களுக்கு அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை (மே.18) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை கோயம்புத்தூரில் கனமழை பதிவாகக்கூடும். சமீபமாக தமிழகத்தின் மழைப் பொழிவின் அளவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் தா. மலரவன் இன்று காலமானார். இந்நிலையில் இவரின் மறைவுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கலை தெரிவித்துள்ளார். அம்மாவின் அன்பை பெற்றவருமான மலரவன் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். மலரவன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன் என ட்வீட் செய்துள்ளார்.
கோவை முன்னாள் மேயரும், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டி.மலரவன் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். டி.மலரவன் 2001முதல் 2006 வரை மேயராகவும், 2006-2011 வரை கோவை மேற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினராகவும், 2011-2016 வரை வடக்கு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். இவரது உடல் தற்போது பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பொது விநியோக திட்டம் தொடா்பாக துறை அலுவலா்களுடனான ஆய்வு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளா் ஹா்சஹாய் மீனா தலைமை வகித்தாா். அப்போது, பேசிய அவர் ரேஷன் பொருட்களை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார் இதில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்ட பலர் இருந்தனர்.
கோவை மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் சரண்யாதேவி நேற்று கூறுகையில், பள்ளிகள், கல்லூரிகள் அருகில் 100 மீட்டருக்குள் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு 1343 கல்வி நிறுவனங்களுக்கு புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்கள்
என சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 29 கிராமங்கள் புகையிலை இல்லாத கிராமங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன என்றார்.
Sorry, no posts matched your criteria.