India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை சுந்தராபுரம் – மதுக்கரை சாலையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் அரசு பேருந்து சிக்கியது. சில நாட்களுக்கு முன்பு, பாதாள சாக்கடை பணிக்காக குழி தோண்டப்பட்டு பிறகு மூடப்பட்ட நிலையில், நேற்று பெய்த மழையில் மண் ஊறியிருந்ததால், திடீரென பள்ளம் ஏற்பட்டு அவ்வழியாக சென்ற அரசு பேருந்து அதில் சிக்கியது. பொக்லைன் இயந்திரம் மூலமாக பேருந்தை மீட்கும் பணி நடந்து வருகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு இன்று (மே.19) மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, கோயம்புத்தூரில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கோவை செட்டிவீதியை சேர்ந்த வரலட்சுமி என்பவரின் சிறப்பு குழந்தை மாரண்ண கவுண்டர் உயர்நிலை பள்ளியில் பயின்று 10 ஆம் வகுப்பில் 300 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தொடர்ந்து மேல்நிலை கல்வியான 11ஆம் வகுப்பில் சேர்க்க கோவையில் உள்ள அரசு பள்ளிகள் மறுப்பதாக வேதனையுடன் தெரிவித்தார். இவர் நேற்று கோவை கலெக்டரை நேரில் சந்தித்து குழந்தையின் மேற்படிப்பிற்காக மனு அளித்தார்.
கோவை வெள்ளியங்கிரி மலையில் நேற்று (மே.17) சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் அங்கு பக்தர்கள் நடந்து செல்லும் பாதைகள் சிதலமடைந்துள்ளன. தொடர்ந்து வெள்ளியங்கிரி மலையில் காலநிலை மாற்றம் காரணமாக அடிக்கடி மழை பெய்து வருவதாலும், கடும் குளிர் நிலவி வருவதாலும், வெள்ளியங்கிரி மலையேறுவதற்கு பக்தர்கள் வரவேண்டாம் என வனத்துறையினர் தற்போது (மே.18) தெரிவித்து உள்ளனர்.
கோவை வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் அரசுப் பொருட்காட்சியின் கண்காட்சி அரங்கின் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பல மாதங்கள் கழித்து கோவையில் பொருட்காட்சி நடைபெற உள்ளதால் பொதுமக்கள் லட்சகணக்கானோர் வருவார்கள் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் முறையாக இருக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று (மே.18) பெய்த மழை அளவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேட்டுப்பாளையம் புலியூர் அணை பகுதியில் 17 செ.மீட்டரும், ஆழியார், தொண்டமுத்தூர் ஆகிய பகுதிகளில் 5 செ.மீட்டரும் கோயம்புத்தூர் AP, வால்பாறை PTO ஆகிய பகுதிகளில் 4 செ.மீட்டரும் சிகோனா, சூளூர், கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் 3 செ.மீட்டரும் மழைப்பதிவானது.
லாலி சாலையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நீச்சல் பயிற்சி முகாமை பல்கலைகழக துணைவேந்தர் முனைவர் வெ கீதாலட்சுமி இன்று காலை துவக்கி வைத்தார். பல்கலைக்கழக மாணவர் நல மைய முதன்மையர் முனைவர் நா மரகதம், பட்ட மேற்படிப்பு பயிலக முதன்மையர் முனைவர் ந செந்தில் , வளாக அலுவலர் பொன் நகுலன், உடற்பயிற்சி ஆசிரியர் தேசிக ஶ்ரீநிவாசன் உடனிருந்தனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற, சிறப்பு வாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அம்மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழையால் மலை ரயில் பாதையில் பாறாங்கற்கள், மண் விழுந்து சேதமானதால் ரயில் சேவை இன்று(மே 18) ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டு 17 வயது அஸ்வின் என்ற சிறுவன் இறந்தார் என்பது வருத்தத்திற்குரிய சம்பவம் ஆகும். குற்றாலம் மட்டும் இன்றி அனைத்து மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளை அரசு கண்காணிக்க வேண்டும், உயிர் சேதங்களை தடுக்க வேண்டும் என நேற்று குனியமுத்தூரில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு காணப்படுகிறது. மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கேரள வனப்பகுதியில் அமைந்துள்ள சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 52 மி.மீ., மழையும்,. அடிவாரத்தில், 34 மி.மீ., மழை பெய்துள்ளதால், அணையின் நீர்மட்டம், 10 அடியாக உயர்ந்துள்ளது. என்று அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.