India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று (மே.20) மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கோவையில் இருந்து பெங்களூரு வழித்தடத்தில் இண்டிகோ விமான நிறுவனம் 4 விமானங்களை இயக்கி வருகிறது. இதில், 4 விமானங்களையும் இந்த வழித்தடத்தில் செவ்வாய்கிழமை மட்டும் இயக்கி, மீத நாட்களில் 3 விமான சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், இனி ஞாயிறுதோறும் இந்த வழித்தடத்தில் 4 விமானங்களை அந்நிறுவனம் இயக்கவுள்ளதாக இன்று அறிவித்துள்ளனர்.
உலக உயர் ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு நேற்று கோவை அரசு மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை டீன் நிர்மலா கொடியசைத்து துவக்கி வைத்து பேசுகையில் உயர் ரத்த அழுத்தம் உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணமாக உள்ளது. இதை முறையாக பரிசோதிக்காவிட்டால் பல இணை நோய்கள் ஏற்படும். உயர் ரத்த அழுத்தத்தை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சரி செய்தால் சிக்கல்களை தவிர்க்கலாம் என்றார்.
அளவுக்கு அதிகமாக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, பூமிக்கு அதிகமாக அழுத்தம் தரப்படுவதால், நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக புவியியல் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நிலநடுக்க பட்டியலில், கோவையும் இடம் பெற்றுள்ளதாக இன்று செய்தி வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 1 வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது இந்த சூழலில் அடுத்த 3 நாட்களுக்கு (மே 23 வரை) கோவை மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே 23ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் சுற்றுலா செல்வது தவிர்க்கலாம் என்று பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது
கோவை சுந்தராபுரம் – மதுக்கரை சாலையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் அரசு பேருந்து சிக்கியது.,சில நாட்களுக்கு முன்பு, பாதாள சாக்கடை பணிக்காக குழி தோண்டப்பட்டு பிறகு மூடப்பட்ட நிலையில், நேற்று பெய்த மழையில் மண் ஊறியிருந்ததால் திடீரென பள்ளம் ஏற்பட்டு அவ்வழியாக சென்ற அரசு பேருந்து அதில் சிக்கியது. பொக்லைன் இயந்திரம் மூலமாக பேருந்தை மீட்கும் பணி நடந்து வருகிறது.
கோவை சுந்தராபுரம் – மதுக்கரை சாலையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் அரசு பேருந்து சிக்கியது.,சில நாட்களுக்கு முன்பு, பாதாள சாக்கடை பணிக்காக குழி தோண்டப்பட்டு பிறகு மூடப்பட்ட நிலையில், நேற்று பெய்த மழையில் மண் ஊறியிருந்ததால் திடீரென பள்ளம் ஏற்பட்டு அவ்வழியாக சென்ற அரசு பேருந்து அதில் சிக்கியது. பொக்லைன் இயந்திரம் மூலமாக பேருந்தை மீட்கும் பணி நடந்து வருகிறது.
சென்னை திருமுல்லைவாயலை சேர்ந்தவர்கள் தம்பதி வெங்கடேஷ் – ரம்யா. தம்பதிக்கு 5 வயதில் மகனும், 7 மாதத்தில் மகளும் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் தம்பதி தங்கியிருந்த அப்பார்ட்மெண்டின் பால்கனியில் இருந்து தவறி விழுந்த 7 மாத குழந்தை காப்பாற்றப்பட்டது. இதனையடுத்து, சொந்த ஊரான காரமடைக்கு வந்த ரம்யா மன உளைச்சலில் இருந்த நிலையில் நேத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு இலங்கை கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக கோவையில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புயுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவையில் செய்தி மக்கள் தொடா்பு துறை சாா்பில் ஆண்டுதோறும் அரச பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பொருட்காட்சி வரும் மே 24ஆம் தேதி தொடங்கி 45 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. இங்கு பல்வேறு அரசு துறைகளின் சார்பில் ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளன. இப்பணிகளை நேற்று கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, டிஆர்ஓ சர்மிளா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.