India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக கோவை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் ரெட் பிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பிலிப்ஸ் ஜெரால்டு மீது வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே பெலிக்ஸ் ஜெரால்ட் தரப்பில் ஜாமீன் கேட்டு கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று மனுவை விசாரித்த நீதிபதி ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
கோவை வேளாண் இணை இயக்குநர் பெருமாள்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவையில் ஆண்டுக்கு சராசரியாக 609 மி.மீ மழை பெய்கிறது. இந்த ஆண்டு பெய்துள்ள மழைக்கு சோளம், கம்பு, ராகி சாகுபடியினை செய்ய ஏற்ற நிலை நிலவுகின்றது. எனவே விவசாயிகள் இந்த பருவ மழைக்கு இதனை விளைவித்து பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த போகம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது மகள் தமிழ்ச்செல்வி, அண்ணன் மகள் புவனா ஆகிய சிறுமிகளுடன் நேற்று(மே 26) அப்பகுதியில் உள்ள குட்டையில் குளிக்க சென்றுள்ளார். 3 பேரும் ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கியுள்ளனர். தகவல் அறிந்த சுல்தான்பேட்டை போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று 1 மணி நேர தேடுதலுக்கு பின் மூவரையும் சடலமாக மீட்டனர்.
கேரளத்தில் இருந்து தமிழ்நாடு வழியாக கர்நாடக மாநிலத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் யானைகள் வலசை செல்கின்றன. இதனால் உண்மையான எண்ணிக்கை தெரிவதில்லை. எனவே, 3 மாநிலங்களிலும் சேர்த்து ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு நேற்று முன்தினம்(மே 25) தொடங்கியது. தொகுதி மாதிரி, நேர்கோட்டு முறை, நீர்நிலைகளில் கணக்கெடுப்பு என 3 நாள் யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் இன்றுடன்(மே 27) நிறைவு பெற்றது.
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் அபுதாஹீர் . இவர் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி 10 ஆண்டுகள் சிறையில் இருந்தார். வெளியில் வந்த பின் பண மோசடி, வழிப்பறியில் ஈடுபட்டதாக போலீசாருக்கு புகார் வந்ததன் பேரில் வழக்கு பதிவு செய்தனர். பின், இவ்வழக்கு கோவை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் அபுதாஹீருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தலைமறைவானார். நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.
வால்பாறை அடுத்த மளுக்குபாறையில் இருந்து
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சாலையில் நேற்று (மே25 ) சாலையில் சிறுத்தை ஒன்று சுற்றித்திரிவதை கண்ட சுற்றுலா பயணிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சாலக்குடி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எக்காரணத்தைக் கொண்டும் வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்தவோ வனவிலங்குகளை போட்டோ எடுக்கவோ கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை புலியகுளம் பெரியார் நகரை சேர்ந்த பெயிண்டர் மாரிமுத்து. இவர் அப்பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாரிமுத்துவை கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை கேபிஆா் பொறியியல், தொழில்நுட்ப கல்லூரியில் இயந்திர மின்னணுவியல் துறைக்காக ரூ.3.70 கோடி செலவில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மின்சார வாகன சிறப்பு ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற இதன் திறப்பு விழாவில் மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனத்தின் துணைத் தலைவா் சங்கா் வேணுகோபால், கல்லூரியின் முதல்வர் சரவணன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று (மே.24) பதிவான மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வால்பாறை PTO, வால்பாறை PAP ஆகிய பகுதிகளில் 4 செ.மீட்டரும், சின்னக்காலர், UPASI தேனீர் ஆராய்ச்சி நிலையம் ஆகிய பகுதிகளில் 3 செ.மீட்டரும், சின்கோனா, சோலையாறு, வால்பாறை தாலுகா அலுவலகம் ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும் பொள்ளாச்சியில் 1 செ.மீட்டரும் மழைப்பதிவானது.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருள்கள் தடை தொடா்பாக மாவட்ட அளவிலான பணிக்குழு கூட்டம் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய அவர் கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். தினசரி சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் மஞ்சப்பை ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Sorry, no posts matched your criteria.