India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மலைப்பகுதியில், இரு நாட்களுக்கு (ஜூன்.1 மற்றும் ஜூன்.2) மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ளது. அதன்படி கோவையில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்
கோயம்புத்தூர் மலைப்பகுதியில், அடுத்த இரு நாட்களுக்கு (ஜூன்.1 & 2) மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவையில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சியின் காரணமாக இது வெளியிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள தடுப்பணைகளில் விவசாய நோக்கத்திற்காக வண்டல் மண் எடுக்க தகுதி வாய்ந்த விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. அவ்வாறு வேளாண் நோக்கத்திற்காக வண்டல் மணல் தேவைப்படும் விவசாயிகள் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டாட்சியரை நேரில் சந்தித்து விண்ணப்பங்கள் வழங்கி அதற்கான அனுமதியை பெற்று கொள்ளலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திக்குமார் பாடி தெரிவித்துள்ளார்.
கோவை அருகே மேற்குத்தொடா்ச்சி மலையின் ஒருபகுதியாக உள்ளது வெள்ளிங்கிரி மலை. இங்குள்ள 7 ஆவது மலையில் சுயம்புலிங்கம் உள்ளது. இதனை வழிபடுவதற்காக ஆண்டு தோறும் பிப்ரவரி முதல் மே வரை பக்தா்கள் அனுமதிக்கப்படுகின்றனா். இந்தாண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில் மலையேற்றத்திற்கான அனுமதி இன்றுடன் நிறைவு பெறுவதாக போளுவாம்பட்டி வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
கோவை அரசு கலை கல்லூரியில் 2024 – 2025 ஆம் கல்வியாண்டு இளநிலை பிரிவில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் பதிவு கடந்த மே. 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. மொத்தம் 127 சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களில் 90 இடங்கள் நிரம்பின. ஜூன் 10 ஆம் தேதி பொதுப் பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.
கருமத்தம்பட்டி பெயிண்ட் கடை உரிமையாளர் நாகராஜிடம் கரூரை சேர்ந்த சாய் ஸ்ரீ, கணவர் கிருஷ்ணகுமார், மாமா பெருமாள்சாமி உள்ளிட்டோர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.6 லட்சம் பெற்றுள்ளனர். ஆனால், வேலை வாங்கி கொடுக்கவில்லை. இப்புகாரின் பேரில் கோவை குற்றப்பிரிவு போலீசார் மூவரை பிடித்து விசாரித்ததில் மொத்தம் 10 பேரிடம் ரூ.22.55 லட்சம் மோசடி செய்தது தெரிந்தது. இதனையடுத்து மூவரையும் நேற்று கைது செய்தனர்.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கும் தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கும் மற்றும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும் ஒரே விண்ணப்பம் வழியாக இளமறிவியல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. வரும் 7ஆம் தேதி முதல் இணையதள வாயிலாக சேர்க்கை நடைபெற உள்ளது என இன்று வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி கூறினார்.
கோவையில் தனியார் பத்திரிக்கை புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்தவர் அஜய் ஜோசப். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொள்ளாச்சி பகுதியில் வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது நாய் ஒன்று குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி நேற்று உயிரிழந்தார். இந்நிலையில், இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட பத்திரிக்கையாளர்கள், அஞ்சலி செலுத்தினர்.
கோயம்புத்தூரில் நேற்று (மே.29) பெய்த மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வால்பாறை PTO, UPASI தேயிலை அறிவியல் துறை ஆகிய பகுதிகளில் 3 செ.மீட்டரும், சின்கோனா, சோலையார், வால்பாறை PAP ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும் சின்னக்கல்லார் பகுதியில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
கோவை விமான துறை அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 2ஆம் தேதி முதல் கோவையில் இருந்து டில்லி மும்பை கனெக்டிங் பிளைட் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவிற்கு செல்லக்கூடிய விமான சேவை வசதியை பிரபல விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியா ஆரம்பிக்க உள்ளதாக அமெரிக்காவில் உள்ள 5 நகரங்களான நியூ ஆர், நியூயார்க், வாஷிங்டன், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ கனடாவில் உள்ள வான்குவார் செல்ல முடியும் என்றனர்.
Sorry, no posts matched your criteria.