India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தினை கண்காணிக்கும் வகையில் சூயஸ் நிறுவனத்தின் மூலமாக குடிநீர் கசிவுகள் உள்ளிட்ட புகார்களை கேட்டறிந்து உடனடியாகத் தீர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தின் செயல்பாடுகளை கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில் டெல்லி ஜல் போர்டு தலைமை நிர்வாக அலுவலர் அன்பரசு ஐஏஎஸ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோவை சைபா் க்ரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஜன.1 முதல் மே மாத இறுதி வரை நிதி தொடா்பாக 2,446, மற்ற மோசடி தொடா்பாக 906 வழக்குகள் என மொத்தம் 3,352 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மோசடி செய்யப்பட்ட தொகை ரூ.53,07,67,674. மீட்கப்பட்ட தொகை ரூ.4,31,61,707. மோசடி வழக்கு தொடா்பாக கடந்த 5 மாதங்களில் 18 போ் கைது செய்யப்பட்டு, 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் 144 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள 232 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று காலை நடக்கிறது. கோவை மாவட்டத்தில் அன்னூர் மேட்டுப்பாளையம் என மொத்தமாக பல மையங்களில் 69,737 பேர் தேர்வு எழுதுகின்றனர். காலை 9.30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை தேர்வு நடைபெறும். இதற்காக 13 பறக்கும் படைகள், 94 மொபைல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவையில் உள்ள கல்வி நிறுவனங்கள், வரும் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கும் முன்பாக, கோவை மாவட்ட சுகாதாரத்துறையிடம் தடையில்லா சான்று வாங்க வேண்டும்.
பள்ளி வளாகத்தில், கொசு உற்பத்தியாகும் வகையில் மழைநீர் தேங்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் பள்ளி வளாகங்களை, துாய்மையாக வைத்திருக்க வேண்டும் என இன்று கோவை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7மணி வரை) கோவை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மிதமான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியை சேர்ந்த காது, மூக்கு, தொண்டை சிகிச்சை டாக்டர் ஜெயக்குமார், இங்கிலாந்தில் நடைபெறும் 70 வயதானோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணிக்கு விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து நேற்று(ஜூன் 7) பேசிய அவர் , சிறு வயது முதல் விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ளது. இந்திய உலகக் கோப்பை இந்திய அணிக்காக 16 பேர் கொண்ட அணியில் தன்னை தேர்வு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சியும், ‘இண்டி கூட்டணியும் தேர்தலில் தோற்றுவிட்டது என்பதை ராகுல் காந்திக்கு யாராவது எடுத்துச் சொன்னால் நல்லது. மக்கள் அளித்த தீர்ப்பு பிரதமர் மோடி ஆட்சி தொடர வேண்டும் என்பதுதான். பாஜகவை பொறுத்தவரை இந்த தேர்தல் முடிவுகள் கொண்டாடித் தீர்க்க வேண்டிய வெற்றி என்று கூறியுள்ளார்.
கோடை விடுமுறை முடிந்து ஜூன்.10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் உடனான ஆலோசனை கூட்டம் இன்று ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெற்றது. இதில், தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் மாநகராட்சி கல்வி அலுவலர் தாமஸ் சேவியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவை வழியாக வரும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இன்று இரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதில், சொரனுார் முதல் கோவை வரை இயக்கப்படும் ரயில் இன்று காலை 11:10 மணிக்கு கோவை போத்தனூர் வந்தடைந்தது. மேலும் வரும் 10ஆம் தேதி மற்றும் 12 ஆம் தேதியும் கோவை ஜங்ஷன் வராமல் போத்தனூரில் நிறுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், நேற்று கோவை அரசு பொறியியல் கல்லூரியில் இருந்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கோவை தெற்கு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு, சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.