India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி இன்று துவங்கியது. 21 நாட்களுக்கு நடைபெறும் இம்முகாமில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமங்களில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. அதன் ஒருபகுதியாக இன்று சிக்காரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் எருமைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது.
கோவையில் வரும் 15ஆம் தேதி கொடிசியா மைதானத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, இன்று அடிக்கல் நாட்டி, பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளரிடம் பேசுகையில் இந்திய அளவில் இந்தியா கூட்டணி அமைய மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பு எடுத்ததாக தெரிவித்தார். இதனால் தான் பாஜக அதிக பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டது என்றார்.
கோவை மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி ரங்கநாதன் மற்றும் ஸ்ரீ விஜயபாமா சிட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியோரது இல்ல திருமண விழாவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இரு குடும்பத்தாரும் இன்று நேரில் சென்று அழைப்பிதழை வழங்கினர். இந்நிகழ்வில், திமுக தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் என பலரும் கலந்து கொண்டனர்.
கோவை மாநகராட்சியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், நாளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற இருந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் இன்று விடுத்துள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.
பீகாரில் ஒரு ஏழை தம்பதிக்கு ஏற்கனவே 2 ஆண் குழந்தைகள் பிறந்து உள்ள நிலையில், மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்து உள்ளது. அந்தக் குழந்தையை வளர்க்க முடியாமல் சிரமப்பட்ட அவர்களிடம் ரூ.1,500 கொடுத்து குழந்தையை தாங்களே வளர்த்துக் கொள்வதாக கூறி எடுத்து வந்துள்ளனர். அந்தக் குழந்தையைத் தான் கோவையில் ரூ.2.5 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளனர். இதையடுத்து, குழந்தையை வாங்கிய விஜயன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. குனியமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி இன்று தமிழக அரசின் விலையில்லா பாட புத்தகங்களை வழங்கினார். அப்போது, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உதவி ஆணையர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
கடந்தாண்டு சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிய நடிகர் விஜய், இந்தாண்டும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க முடிவு செய்துள்ளார். தவெக சார்பில் வழங்கபட உள்ள
இதில், 10 மற்றும் 12ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முதற்கட்டமாக ஜூன் 28ல் கோவை உள்ளிட்ட 21 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக இன்று கோவையில் தவெக நிர்வாகிகள் கூறினர்.
கோவை ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனம் பிரிவுகளில் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருத்தல் அவசியம். தகுதியுடையவர்கள் ஜூன் 20ம் தேதி முன் உரிய சான்றிதழ்களுடன் கோவை கலெக்டர் அலுவலக பழைய கட்டடத்தின் தரைத்தளத்தில் உள்ள, சமூகநலத்துறையில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.
கோவை மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்கில் தீர்வுகாண லோக்அதாலத் விசாரணை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விசாரணையை மாவட்ட நீதிபதி விஜயா துவக்கி வைத்தார். விசாரணையில், மொத்தம் 2,843 வழக்குகளில் சமரச தீர்வு காணப்பட்டது. இதன் வாயிலாக தீர்வு தொகையாக, ரூ.29.92 கோடி பைசல் செய்யப்பட்டது. 5 ஆண்டுக்கும் மேல் நிலுவையிலுள்ள 39 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது.
தமிழக அளவில் மாநில ஓபன் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கோவையைச் சேர்ந்த ஆகாஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கோவை வீரர் பட்டம் வெல்வது 32 ஆண்டுகளில் இதுவே முதல் முறை. ஆகாஷ் தனது திறமையால் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு பதக்கங்களை குவித்து வருகிறார். 2,251 தரவரிசை புள்ளிகள் பெற்றுள்ள ஆகாஷ் விரைவில் ஐஎம் பட்டம் பெற முயற்சி செய்து வருகிறார்.
Sorry, no posts matched your criteria.