India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் கோட்ட நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேலம் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக, ஜூலை 4, 6, 9, 11, 13 ஆகிய தேதிகளில் ஆலப்புழா – தன்பாத் விரைவு ரயில் மற்றும் எா்ணாகுளம் – பெங்களூா் ரயில் இருகூர் – போத்தனூர் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால் இந்த ரயில்கள் கோவை நிலையம் செல்வது தவிா்க்கப்படும். மேலும், போத்தனூரில் இந்த ரயில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை வஉசி மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் கடந்த மே 25ஆம் தேதி அரசு பொருட்காட்சி தொடங்கியது. இந்த பொருட்காட்சியை காண வரும் பெரியவர்களுக்கு ரூ.15, குழந்தைகளுக்கு ரூ.10 என நுழைவுக்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 2 ஆம் தேதி வரை பொருட்காட்சியை 1.44 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் ரூ.20.40 லட்சம் வருவாய் கிடைத்திருப்பதாக செய்தி மக்கள் தொடர்பு துறை தெரிவித்துள்ளது.
கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், உரிமம் பெற்ற சர்வேயர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் 15 நாட்களுக்குள் உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல் செய்து தரப்படும். உட்பிரிவு பட்டா 30 நாட்களுக்குள் மாற்றி தரப்படும். நிலுவை விண்ணப்பங்கள் குறைவாகவே இருக்கின்றன. இனி இணைய தளம் வாயிலாக அப்ரூவல் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவையின் முதல் பெண் மேயரான கல்பனா நேற்று(ஜூலை 3) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 2022 ஆம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாநகராட்சி 19வது வார்டில் வெற்ற பெற்ற இவர் மேயராக தேர்வானார். கல்பனா மேயரானது முதலே அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. மாநகராட்சியில் உள்ள 5 மண்டல தலைவர், கவுன்சிலர்கள் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வந்த நிலையில் நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.
வார்டு வளர்ச்சி பணிகளில் பாரபட்சம் காட்டுவதாக, கல்பனா மீது கவுன்சிலர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர். இந்த பிரச்னை மாநகராட்சி கூட்டங்களிலும் எதிரொலித்து வந்தது. தொடர்ந்து, மக்களவைத் தேர்தலில் கல்பனாவின் சொந்த வார்டில் திமுகவை விட பாஜக அதிக வாக்குகள் பெற்றது. இவை கட்சி தலைமை வரை சென்ற நிலையில், சொந்த காரணங்களுக்காக மேயர் கல்பனா ராஜினாமா செய்வதாக மாநகராட்சி ஆணையர் பிரபாகரன் நேற்று அறிவித்தார்.
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளது. இதில் திமுக -73 கவுன்சிலர்கள், காங்கிரஸ் -9 கவுன்சிலர்கள், அதிமுக -3, இந்.கம்யூனிஸ்ட் -4, மார்க்.கம்யூனிஸ்ட் -4, மதிமுக -3, கொ.ம.தே.க – 2, மமக -1 மற்றும் எஸ்டிபிஐ -1. திமுக கூட்டணியில் மட்டும் 96 கவுன்சிலர்கள் உள்ள நிலையில் மேயர் ராஜினாமா செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி, அடுத்த மேயர் யார் என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.
கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி நேற்று(ஜூலை 3) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 2024-25-ஆம் ஆண்டில் நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறமையும் ஆர்வமும் உள்ள கிராமபுற பயனாளிகளுக்கு மாணியம் வழங்கபட உள்ளது. சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணைகள் நிறுவிட, 50% மானியத்துடனான திட்டம் மாநில அரசால் செயல்படுத்தப்படவுள்ளது என்றார்.
கோவை எஸ்.பி பத்ரி நாராயணன் இன்று செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆண்டில் இதுவரை குற்ற செயல்களில் ஈடுபட்ட 37 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி வழித்தடத்தில் மேட்டுப்பாளையம் – நெல்லை இடையே சிறப்பு வாராந்திர ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதம் வரையே நீட்டிக்கப்பட்டிருந்த இந்த ரயில் சேவை, தற்போது ஜூலை இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 7 முதல் 28ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் இயங்கும்.
கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக பதவி வகித்த கல்பனா ஆனந்தகுமார் மார்ச் 2022-ல் மேயராக பதவி ஏற்றார். இந்நிலையில் இன்று தனது உடல் நிலை சரியில்லாததால் மேயர் பதவியை ராஜினாமா செய்வதாக, ராஜினாமா கடிதத்தை ஆணையருக்கு அனுப்பியுள்ளார். இந்நிலையில் வரும் 10 அல்லது 11ஆம் தேதி புதிய மேயர் தேர்வு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.