India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில்,
“தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி ஜுலை.9, 10ஆகிய நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. இதில் முருங்கை பொடி, பருப்பு பொடி, சாம்பார் பொடி ஆகியவை தயாரிக்க கற்று தரப்படும்” என தெரிவித்துள்ளார்.
கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ள புத்தக திருவிழா தொடா்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய கலெக்டர் கிராந்திகுமார் பாடி மாவட்ட நிா்வாகம் கொடிசியா இணைந்து நடத்தும் புத்தக திருவிழாவின் 8வது பதிப்பு ஜூலை 19 ஆம் முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என்றார்.
மேட்டுப்பாளையத்தில் பாஜக கலந்தாய்வு கூட்டம் நேற்று (ஜூலை 5) நடைபெற்றது. நீலகிரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் குறித்து நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் பாஜக சட்டமன்ற குழு தலைவரும், மாநில துணைத்தலைவருமான நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா, நந்தகுமார் உள்ளிட்ட பாஜக மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோயமுத்தூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு(காலை 10 மணி வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நேற்றிரவு(ஜூலை 5) தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. கடந்த சில நாள்களாகவே இரவில் மழை பெய்து குளிர்ச்சி நிலவுதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று கோவையில் பேசுகையில், போனவாரம் ஆன்மிக அரசியல், இந்தவாரம் திராவிட அரசியல்; போன வாரம் போதைக்கு எதிர்ப்பு, இந்த வாரம் நீட் எதிர்ப்பு; போன வாரம் திமுக எதிர்ப்பு, இந்த வாரம் பாஜக எதிர்ப்பு; போன வாரம் நடிகர் விஜய், இந்த வாரம் ஜோசப் விஜய்; விஜயின் நடவடிக்கைகளில் முரண்பாடுகளை பார்த்தால் வெகு விரைவில் தவெக மூடுவிழா காணும் என்றார்.
கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், கோவை மாவட்டத்தில் அரசு மானியத்துடன் கூடிய தீவன வளர்ப்பு திட்டம் 525 ஏக்கரில் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் அருகில் உள்ள கால்நடை மருத்துவ நிலையங்களை அணுகி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; அக்னி வீர் வாயு இந்திய விமானப்படை தேர்வு இணையதளம் வாயிலாக 18.10.2024 முதல் நடைபெற உள்ளது. இதற்கு 08.07.2024 முதல் 28.07.2024 வரை விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி 12ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும், தேர்வுக் கட்டணமாக ரூ.550 செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கோவை மேயர் கல்பனா ராஜினாமா கடிதம் கொடுத்துள்ள நிலையில் வரும் 8 ஆம் தேதி மாநகராட்சியின் சாதாரண கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் ராஜினாமா கடிதம் கவுன்சிலர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்படும். அதன் நகல் நகராட்சி நிர்வாக துறைக்கு அனுப்பப்பட்டு, பின் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்படும். தேர்தல் ஆணையம் ஒரு தேதியை அறிவிக்கும் அன்று மேயர் தேர்தல் நடைபெறும்.
மேட்டுப்பாளையம் – கோவை ரயில் பாதையை இரட்டை பாதையாக மாற்ற வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் பகுதி பொது மக்கள் மத்திய இணையமைச்சர் எல்.முருகனிடம் மனு அளித்தனர். மேலும் அதற்கான மனுவினை இன்று டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவியிடம் இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் வழங்கினார்.
கோவை மாவட்டத்தில் உள்ள 84 நீர் நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண்களை விவசாய நோக்கத்திற்காக பயன்படுத்த விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்து அதனைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்கும் விவசாயிகள் tnesevai.tn.gov.in என்ற இனைய தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.