Coimbatore

News July 11, 2024

நிதி நிறுவன மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்

image

கோவை உடையாம்பாளையத்தில் சர்வா ஐடெக் சொல்யூசன்ஸ் லிட் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் பொதுமக்களிடம் முதலீடுகளுக்கு அதிக இலாபம் தருவதாக கூறி ஏமாற்றியுள்ளது. இப்புகாரின் பேரில் இயக்குனர்கள் ரிதுவர்ணன், கவுத் ஸ்ரீஹரி, வெலக்கப்பாடி பாலன் நாராயணன் உள்ளிட்டோரை கோவை பொருளாதார குற்றப்பிரிவு கைது செய்து விசாரித்து வருகிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

News July 11, 2024

“மண் பாண்ட தயாரிப்புக்கு களிமண்ணை இலவசமாக எடுக்கலாம்”

image

கோவை ஆட்சியர் நேற்று வெளியிட்ட அறிக்கையில்; இயற்கை வளங்கள், நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகளின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரி, குளம், கண்மாய்களிலிருந்து களிமண் மற்றும் வண்டல் மண்ணை விவசாய பயன்பாட்டிற்கும், மண்பாண்டம் செய்யவும் கட்டணமின்றி எடுத்து பயனடையலாம். விவசாயிகள், மண்பாண்ட தொழில் செய்வோர் tnesevai.tn.gov.in என்ற இணையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

News July 11, 2024

கோவை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை

image

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று சில பகுதிகளில் கனமழையும், சில பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 7 மணி) வரை கோவை மாவட்டத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறி மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

News July 11, 2024

மரம் வளர்ப்பு திட்டத்தின் கீழ் மத்திய அகாடமியில் கருத்தரங்கு

image

கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநில வனச்சேவைக்கான மத்திய அகாடமியில் மரம் வளர்ப்பு திட்டத்தின் கீழ் கருத்தரங்கம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் மதிப்பு சங்கிலி அடிப்படையிலான வேளாண் காடுகள் வளர்ப்பு குறித்து தமிழ்நாடு வனக்கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் முதல்வர் பார்த்திபன் சிறப்புரையாற்றினார். இதில் இந்திய வன மேலாண்மை நிறுவனத்தின் நிர்வாகிகள், விவசாயிகள், வனத்துறையினர் உட்பட பலர் இருந்தனர்.

News July 11, 2024

கோவையில் 278 பானிபூரி கடைகளில் அதிரடி ஆய்வு

image

கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையிலான உணவு பாதுகாப்பு துறையினர் இன்று ஆவாரம்பாளையத்தில் இயங்கி வரும் பானிபூரி தயாரிப்பு, விற்பனை இடங்களில் ஆய்வு நடத்தினர். அப்போது, 278 கடைகளை ஆய்வு செய்ததில் 57 கடைகள் மற்றும் தயாரிப்பு இடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 15 உணவு மாதிரிகளும், பிளாஸ்டிக் கவர் பயன்படுத்திய 23 கடைகளுக்கு ரூ.46 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News July 10, 2024

எம்.பியை சந்தித்த ஆஸ்திரேலியன் கான்சுலெட் ஜென்ரல்

image

கோவை மக்களவை உறுப்பினரை ஆஸ்திரேலியன் கான்சுலெட் ஜென்ரல் இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பில் கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்புகள், உட்கட்டமைப்புகள், தொழில் துறை நகர்வுகள், உட்கட்டமைப்பு, தொழில் வளர்ச்சி உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

News July 10, 2024

ஒரே நாளில் 82 மனுக்களின் மீது விசாரணை

image

கோவை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இன்று மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன், தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து 82 மனுக்களின் மீது விசாரணை நடத்தி 3 மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கையும்,2 மனுக்கள் மீது மனு ரசீது பதிவு செய்தும், 74 மனுக்கள சுமூகமான முறையில் தீர்த்து வைத்தார்.

News July 10, 2024

கோவை – மும்பை ரயில் இனி காலை 8.50 மணிக்கு புறப்படும்

image

கோவை ரயில் நிலையத்தில் இன்று இரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, கோவையில் இருந்து மும்பை வரை செல்லும் லோகமான்ய திலக் எக்ஸ்பிரஸ், ரயில் கடந்த 10.06.2024 முதல் மதியம் 1 மணிக்கு கோவையில் இருந்து மும்பை சென்றது இந்நிலையில், இந்த ரயில் இன்று முதல் காலை 08.50க்கு புறப்படும் என தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

News July 10, 2024

7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

News July 10, 2024

போதைப்பொருள் விவகாரத்தில் இதுவரை 110 பேர் கைது

image

கோவை எஸ்பி அலுவலகம் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், கோவை மாவட்ட காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் போதைப்பொருள் விவகாரத்தில் கடந்த மே1 முதல் இதுவரை 110 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவர்களிடம் இருந்து இதுவரை 189.925 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!