Coimbatore

News July 17, 2024

கோவையில் நீதிபதி மரணம்: யார் அந்த மர்ம ஆசாமி?

image

பொள்ளாச்சி அருகே உள்ள சின்னம்பாளையத்தில் சாலையை கடக்க முயன்ற நீலகிரி மாவட்ட நீதிமன்ற கூடுதல் நீதிபதி கருணாநிதி மீது அதிக வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நீலகிரி மாவட்ட நீதிபதி கருணாநிதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய மர்ம ஆசாமி நிற்காமல் விரைந்து சென்றார். இந்த விபத்து தற்செயலா, இல்லை திட்டமிட்டதா எனப் போலீசார் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.

News July 16, 2024

கோவை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கை

image

கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை சுற்றுவட்டார பகுதிகளில் மழைக்காலம் தீவிரம் அடைந்துள்ளதால், டெங்கு காய்ச்சல் பரப்பும் ஏடி.எஸ் கொசுக்கள் உற்பத்தியாவதற்கான காலநிலை நிலவுகிறது. மேலும் வீடுகள் வளாகங்கள், பணிபுரியும் அலுவலங்கள் மற்றும் அங்காடிப்பகுதிகளில் உள்ள நீர் சேகரிப்பு கொள்கலன்களை கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

News July 16, 2024

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை

image

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இன்று கூறியதாவது, மேட்டுப்பாளையம் பிரதான சாலையில் அமைந்துள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 31.07.2024 வரை நடைபெறவுள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் காலியிடங்கள் பூர்த்தி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

News July 16, 2024

“மக்களுக்கு திமுக அளித்த பரிசுதான் மின் கட்டண உயர்வு”

image

கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று கூறியதாவது, புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் திமுகவே வெற்றி பெற்றுள்ளது. மக்கள் அளித்த இந்த வெற்றிக்கு, திமுக அளித்துள்ள பரிசுதான் இந்த 6,000 கோடி ரூபாய் மின் கட்டண உயர்வு. மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக திமுக அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்

News July 16, 2024

நேற்று முதல் இன்று காலை வரை பெய்த மழை அளவு

image

கோவையில் நேற்று முதல் இன்று காலை வரை பெய்த மழை அளவு அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ளனர். அதில், வேளாண் பல்கலை – 11.20 மி.மீ, பெ.நாயக்கன்பாளையம் – 1.80 மிமீ, மேட்டுப்பாளையம் – 33. 50 மிமீ, அன்னூர்- 2.40 மிமீ, கோவை தெற்கு 2.50, சூலூர்- 11, தொண்டாமுத்தூர் – 5, சிறுவாணி அடிவாரம் – 95, மதுக்கரை தாலுக்கா – 5, போத்தனூர் ரயில் நிலையம் -3 மழை பதிவாகி உள்ளது. மொத்தம் 580.70 மி.மீ மழை பதிவானது.

News July 16, 2024

ஆரஞ்சு அலர்ட்: பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

image

கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை கோவை மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்தது. அதில் மழைநீர் தேங்கும் வாய்ப்புள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் மழையின்போது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவேண்டும், உயர்மின்சாரம் இருக்கும் பகுதிகளுக்கும் மின்கம்பங்களுக்கு அருகிலும் செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

News July 16, 2024

கோவையில் இன்று ஆரஞ்சு அலர்ட்

image

கோவை மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், இன்று வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

News July 16, 2024

பி ஏ பி அணிகளின் நீர்மட்டம் விபரம்

image

பி.ஏ.பி. பாசன திட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் இன்று (ஜூலை 16) காலை 8 மணி நிலவரப்படி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சோலையாறு அணையின் நீர்மட்டம் 128.68 அடியாகவும், பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 28.20 அடியாகவும், ஆழியார் அணையின் நீர்மட்டம் 91.00 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 28.41 அடியாகவும் உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News July 16, 2024

கோவையில் தீ விபத்து- 3 பேர் மரணம்

image

கோவையில் அடுப்பு அருகே இருந்தபடி பாட்டிலில் பெட்ரோலை ஊற்றும் போது திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் சிக்கிய சின்னகருப்பு, முத்துகுமார் மற்றும் அழகுராஜ் உள்ளிட்ட மூன்று பேர் மரணம் அடந்தனர். இச்சம்பவத்தில் நான்கு பேர் காயமடந்த நிலையில் அதில் இரண்டு பேர் 80 சதவீத காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

News July 16, 2024

கோவையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு

image

இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி கோவை மாவடத்திலும் காலிப்பணியடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு,18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையத்தளத்தில் ம் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.

error: Content is protected !!