India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்டத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கீழ் பட்டப்படிப்பு படித்த வேலையில்லாத இளைஞர்களை தொழில்முனைவோராக்கும் திட்டம் 2024-25ம் நிதி ஆண்டில் செயல்படுத்தப்படவுள்ளது. அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 3 பட்டதாரி இளைஞர்களுக்கு நிதி உதவி பின்னேற்பு மானியமாக வழங்கப்படும் என்று வேளாண்மை இணை இயக்குனர் இன்று தெரிவித்துள்ளார்.
கோவை பீளமேட்டில் 29 பவுன் தங்கம், 2 வைர நெக்லஸ், வைர தோடுகள், ரூ.10 லட்சம் ரொக்கத்தை கடந்த பிப்.6 ஆம் தேதி மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தமிழகம் முழுவதும் 78 குற்ற வழக்குகளில் தொடர்புடைய மூர்த்தி உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட கும்பலை கைது செய்தனர். இதில் திறம்பட செயல்பட்ட கோவை போலீசாரை தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று நேரில் வரவழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் நேற்று முன்தினம் தனியார் பள்ளி வேன் ஏறி இறங்கியதில் 1ஆம் வகுப்பு மாணவர் படுகாயமடைந்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல வேனில் இருந்து கீழே இறங்கும் முன்பே வாகனம் நகர்ந்ததால் சிறுவன் தடுமாறி விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பொள்ளாச்சி அருகே இன்று(ஜூலை 20) கோழிப்பண்ணை சுவர் இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழந்தனர். கெங்கம்பாளையத்தில் முருகானந்தம் என்பவரது கோழிப்பண்ணையில் இன்று பராமரிப்பு பணி செய்த போது அங்கிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் மொமதாசிங்(30) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முருகானந்தம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ரேவதி, ரபிந்திரசிங், கொனாமிகாசிங் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோவை வேளாண் பல்கலை. பட்டப்படிப்பு மாணவா் சேர்க்கைக்கு ஜூன் 23 ஆம் தேதி முதல் இணையவழி கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் காலியிடங்களுக்கு நகர்வு அடிப்படையில் தரவரிசையில் அடுத்ததாக இடம் பெற்ற மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர். அதன்படி 7.5% இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கான 3 ஆம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, சமர்ப்பிப்பு பணிகள் மொத்தம் 200 இடங்களுக்கு வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று(ஜூலை 20) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்திலும் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கோவை அன்னூரில் நேற்று(ஜூலை 19) மத்திய அமைச்சர் நன்றி தெரிவித்தார். அன்னூர் பயணியர் மாளிகை முன்பு மத்திய அமைச்சர் எல்.முருகன் மக்களவைத் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் நீலகிரி தொகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் மத்திய அரசின் மூலம் நிறைவேற்றுவேன் என்றும் அவர் தெரிவித்தார். மாவட்ட தலைவர் சங்கீதா செயலாளார் ஏ.பி ஜெயபால் மற்றும் பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பட்டயப் படிப்பிற்கான இனையதள கலந்தாய்வில் கலந்து கொண்டு இடஒதுக்கீடு பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு வரும் 23ம் தேதி அன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. இதில் விண்ணப்பிக்க உள்ள மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள பதிவு செய்யபட்ட மின்னஞ்சல் & செல்போனுக்கு குறுஞ்செய்தி இன்று அனுப்பப்பட்டுள்ளதாக வேளாண்மை பல்கலைக்கழக முதன்மையர் தெரிவித்தார்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் இன்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறியதாவது;
தமிழக அரசு பட்டியலின சாதிக்கு எதிரான அடக்குமுறைகளை கழைய தனி சட்டம் இயற்ற தயக்கம் காட்டுவது ஏன். சாதிய வன்கொடுமைகளை அகற்ற உடனடியாக தமிழக அரசு தனி சட்டம் இயற்ற அரசுக்கு கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அவ்வாறு தனிச்சட்டம் இயற்றினால் தான் அடக்குமுறை அழியும் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை கொடிசியா வளாகத்தில் கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா இணைந்து நடத்துகின்ற கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2024ஐ இன்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். இதில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளது எனவும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமன்றி அனைவரும் இதில் கலந்து கொள்ள ஆட்சியர் கேட்டு கொண்டார்.
Sorry, no posts matched your criteria.