India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாவட்டத்தில் கடந்த 01.05.2024 முதல் இன்று வரை, நடத்தப்பட்ட சிறப்பு அதிரடி சோதனைகளின் அடிப்படையில் தற்போது வரை போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 128 நபர்களை கைது செய்து 82 பேர் மீது வழக்கு பதிவு செய்தும், 46 நபர்களை எச்சரிக்கை செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 194 கிலோ 095 கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இன்று எஸ்பி பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.
காதில் பூ சுற்றி நாளை தபேதிக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கு.ராமகிருஷ்ணன் இன்று தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் புறக்கணித்து பேரிடர் நிவாரண நிதியை ஒதுக்காமல், தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் புறக்கணித்த பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.
கோவை மாவட்ட ஆட்சியரிடம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் (ஜூலை. 23)மனு அளித்தனர். அதில், தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி ஆடி 18 (3.08.2024) தீரன் கோவை மாவட்டத்திற்கு அரசு விடுமுறையாக அறிவிக்க கோரி கோவை கிழக்கு மாநகர் மாவட்ட செயலாளர் தனபால், மேற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் கிராந்தி குமார் பாடியிடம் மனு அளித்தனர். பாக்கியம், அய்யாசாமி, பொன்னுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கோவை தெற்கு மாவட்டம் மற்றும் பொள்ளாச்சி நகர அதிமுக சார்பில் மின் கட்டணம் உயர்வை கண்டித்து சட்டசபை எதிர்க்கட்சி கொறடாவும், மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் தாமோதரன், அமுல் கந்தசாமி, நகர செயலாளர் கிருஷ்ணகுமார் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
கோவை: மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை வருகிற 28.07.2024 முதல் 30.07.2024 வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், மேற்படி 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை மலைக்கோயிலுக்கு இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதியில்லை. மேலும் மலைப்படிகள் வழியாகவும், திருக்கோயிலின் சார்பில் விடப்படும் பேருந்துகளில் மலை கோயிலுக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரம் அதாவது இரவு 7 மணி வரை மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கோவையில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஊட்டி – குன்னூர் மலை ரயில் பாதையில் தண்டவாளத்தில், பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சூறாவளி காற்று வீசியதால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதன் காரணமாக குன்னூர்-ஊட்டி இடையே இயங்கும் மலை ரயில் சேவை நேற்று முதல் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என ரயில்வே நிர்வாகம் இன்று அறிவித்தது. மலை ரயில் பாதையில் விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணியில் ரயில்வே பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையம் மூலமாக தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள சுமார் 4000 திற்கும் மேற்பட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 26.072024 அன்று கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெற மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
உற்பத்தித் துறையில் புதிதாக (Freshers) பணியில் சேர்வோரை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு முதல் மாத சம்பளத்தை ஊக்கத்தொகையாக (நிறுவனங்கள் தரும் ஊதியம் போக) வழங்கும் என இன்றைய பட்ஜெட் தாக்கலின்போது மத்திய நிதியமைச்சர் முத்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு உற்பத்தி மையங்கள் அதிகம் உள்ள கோவை மாவட்ட மக்களின் வயிற்றில் பாலை வார்த்ததுபோல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய மத்திய பட்ஜெட்டில் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் முன்னுரிமை பெற்ற துறையாக அறிவிக்கப்பட வேண்டும் என்பது கோவை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சிறு, குறு நிறுவனங்கள் கடன் பெறுவதற்கான விதிகளை தளர்த்த வேண்டும், ஓவர் டிராப்ட் 40% முதல் 50 வரை உயர்த்தி வழங்க வேண்டும், தொழிலாளர் கட்டணத்திற்கான ஜிஎஸ்டியை 5% அளவிற்கு குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர். உங்கள் கருத்து என்ன?
Sorry, no posts matched your criteria.