India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரம் அதாவது இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவையில் காதலிப்பதாக கூறி 20 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். நாகர்கோவிலைச் சேர்ந்த ஸ்ரீ தர்சன் (22). கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் 2ம் ஆண்டு படித்துவருகிறார். பி.கே. புதூரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். பாலியல் உறவு தொடர்பான போட்டோ, வீடியோக்களை வைத்து மாணவிகளை மிரட்டி வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். 2 மாணவிகள் புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை ரத்துசெய்வதும், இயற்கை வழிபாட்டுக்கு தடை விதிப்பதும் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைக்கு எதிரானது. ஆனால் இதைத்தான் இந்த திமுக அரசு செய்து வருகின்றது என கோவை பந்தயசாலையில் இன்று தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வேதனை தெரிவித்துள்ளார்.
மத்திய சமூகநீதி (ம) அதிகாரமளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு SEED (Scheme for Economic Empowerment DNT’s) திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. கல்விக்கான அதிகாரமளித்தல் சீர்மரபினர்களுக்கு வீட்டுமனைப் பட்டா (ம) வீடுகள் கட்ட நிதி உதவி வழங்குதல் ஆகியவை இத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும். தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.
கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், ஆனைகட்டி ஐடிஐயில் நேரடி மாணவா் சோ்க்கை வரும் 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இங்கு எலக்ட்ரீசியன், பிட்டர், ஒயர்மேன், வெல்டா் பிரிவுகளில் இருபாலருக்கும் நேரடி சேர்க்கை நடைபெற்றுவருகிறது. விவரங்களுக்கு 94990-55694, 99945-55884, 94430-15904, 99421-28234, 95002-49705, 98657-96373 ஆகிய எண்களில் தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை நேரு ஸ்டேடியத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள் நேற்று துவங்கின. மாணவியருக்கு 14, 17, 19 ஆகிய வயது பிரிவுகளில் நடத்தப்படும் போட்டில் 38 பள்ளிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
100மீ, 200மீ, 400மீ, 800மீ, தடை தாண்டும் ஓட்டம், தொடர் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஹேமர் த்ரோ உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அமைச்சர் நேருவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 2018ல் உக்கடம் மேம்பாலம் அமைக்க சிஎம்சி காலனி மக்களின் இடம் பெறப்பட்டது. மாற்றாக அப்பகுதி மீன் மார்க்கெட்டை அப்புறப்படுத்தி 18 மாதங்களில் 520 வீடுகள் கட்டி தரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. 4 ஆண்டுகள் ஆகியும் மீன் மார்க்கெட்டை அப்புறப்படுத்தாததால் மக்கள் வீடின்றி அவதிப்படுகின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை-மதுரை அணிகளுக்கு இடையேயான TNPL போட்டி நேற்று நெல்லையில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கோவை அணி, 20 ஓவர்கள் முடிவில் 163/9 ரன்கள் குவித்தது. 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கோவை அணி சார்பில் ஷாருக்கான் 51 ரன்களும், கௌதம் தாமரை கண்ணன் 4 விக்கெட்டுகளும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
நீலகிரி மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் மாஸ்டர் மாதன் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து பிரஸ் காலனியில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வருகின்றார். அவரை முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.
கோவை எஸ்பி பத்ரி நாராயணன் நேற்று மாலை விடுத்துள்ள செய்தி குறிப்பில், கோவை மாவட்டத்தில் கடந்த 01-01-24 முதல் இதுவரை 44 நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த செய்தி குறிப்பில் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.