Coimbatore

News August 6, 2024

BREAKING கோவை மேயர் தேர்தல் தொடங்கியது

image

கோவை மேயராக இருந்த கல்பனா தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், மேயர் பதவி காலியானது. இந்த நிலையில், மேயர் பதவிக்கான தேர்தல் சற்றுமுன் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 100 கவுன்சிலர்களை கொண்ட கோவை மாநகரில் 96% இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் உள்ளனர். திமுக சார்பில் ரங்கநாயகி வேட்பாளராக களத்தில் உள்ளார். 4% உள்ள அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தேர்தலை புறக்கணித்தனர். உங்கள் கருத்து என்ன?

News August 6, 2024

கோவையில் இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

image

கோவை மாவட்டம் காளாம்பாளையத்தில் கடந்த 3ம் தேதி சாலை விபத்தில், சிக்கி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீராம் என்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி நேற்று மூளை சாவு அடைந்தார். இதனை தொடர்ந்து அவரது தாய் தந்தையர் ஸ்ரீ ராமின் உடல் உறுப்புகள் கோவை அரசு மருத்துவமனையில் இன்று தானமாக வழங்கினர். உறுப்புகள் அகற்றப்பட்ட நிலையில் உடல் நாளை காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

News August 6, 2024

கோவையில் இன்று மின்தடை

image

கோவை மாவட்டத்தில் மின் பராமரிப்புப் பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் முழு நேர மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவை: எம்ஜிசி பாளையம், பொன்னேகவுண்டர் புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னபசெட்டி புதூர், மண்ணிக்கம்பாளையம், கல்லிபாளையம், தொட்டியனூர் சில பகுதிகள், ஊரைக்கல்பாளையம். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News August 6, 2024

கோவை மேயர் பதவி: போட்டி வேட்பாளர் நிறுத்த முடிவு?

image

நெல்லையை தொடர்ந்து கோவையிலும் மேயர் பதவிக்கு போட்டி வேட்பாளரை நிறுத்த முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேயர் பதவிக்காக வாய்ப்பை இழந்த 3 பெண் கவுன்சிலர்கள் இணைந்து பேசி வருகின்றனர். இதற்கு மற்ற கவுசிலர்கள் ஆதரவு அளித்துள்ளனா். இன்று தேர்தலுக்கு முன் டவுன்ஹாலில் உள்ள தனியார் மண்டபத்தில் நடக்கும் கூட்டத்தில் தங்கள் அதிருப்தியை தெரிவிக்கவுள்ளதாக நேற்று தகவல் வெளியாகி உள்ளது. உங்கள் கருத்து?

News August 5, 2024

யானை தாக்கியவரை நேரில் சந்தித்த அமைச்சர்

image

கோவை, தொண்டாமுத்தூர் பகுதியில் காட்டு யானை தாக்கி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாஸ்கர் என்பவரை அமைச்சர் முத்துசாமி இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.50,000 உதவித்தொகைக்கான காசோலையை வழங்கினார். இந்நிகழ்வில் கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி அரசு அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

News August 5, 2024

கோவைக்கு வரும் முதல்வர் ஸ்டாலின் 

image

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற 9ஆம் தேதி கோவைக்கு வருகிறார். அன்றைய தினம் கோவை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். மேலும் கோவை, கருமத்தம்பட்டிக்கு செல்லும் முதலமைச்சர், அங்கு கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார். இதற்கான பணிகள் விரைந்து நடந்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.

News August 5, 2024

கோவை மேயர்: யார் இந்த ரங்கநாயகி?

image

கோவை மாநகராட்சியின் திமுக கூட்டணியின் மேயர் வேட்பாளராக 29வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டார். தரணி நகர் 8வது வீதி, கணபதிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர்தான் ரங்கநாயகி. 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ரங்கநாயகியின் கணவர் ராமச்சந்திரன். இவர் 29வது வார்டு திமுக செயலாளராக இருக்கிறார். இத்தம்பதிக்கு குகன், வாகிணி என 2 பிள்ளகள் உள்ளனர். இவரது செயல்பாடு எப்படி? கமெண்ட் பண்ணுங்க!

News August 5, 2024

கோவையில் அமைச்சர் கே.என்.நேரு

image

கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று வருகை தந்த தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவை திமுக கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், கோவை மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் வரவேற்றனர்.

News August 5, 2024

கோவை மேயர்: யார் இந்த ரங்கநாயகி?

image

கோவை மாநகராட்சியின் திமுக கூட்டணியின் மேயர் வேட்பாளராக 29வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டார். தரணி நகர் 8வது வீதி, கணபதிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர்தான் ரங்கநாயகி. 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ரங்கநாயகியின் கணவர் ராமச்சந்திரன். இவர் 29வது வார்டு திமுக செயலாளராக இருக்கிறார். இத்தம்பதிக்கு குகன், வாகிணி என 2 பிள்ளகள் உள்ளனர். இவரது செயல்பாடு எப்படி? கமெண்ட் பண்ணுங்க!

News August 5, 2024

கோவையில் கத்தி முனையில் செயின் பறிப்பு 

image

கோவை அம்மன் குளம் சேர்ந்தவர் ஆல்வின் கிளிண்டன்(30) இவர் நேற்று கிருஷ்ணசாமி நகர் தனியார் மருத்துவமனை அருகே உள்ள டீக்கடையின் பின்புறம் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் ஆல்வின் கிளிண்டனை கத்தி காட்டி மிரட்டி ஒரு பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து இராமநாதபுரம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஷாரூக்கான (22) என்பவரை கைதுசெய்தனர்.

error: Content is protected !!