Coimbatore

News August 28, 2024

சூலூர் அருகே மேம்பாலத்தின் கீழ் புகை

image

கோவை திருச்சி சாலையிலிருந்து இருகூர் செல்லும் வழியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே மேம்பாலத்தின்கீழ் பகுதியில் இருகூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் சிலர் குப்பைகளைக் கொட்டி வந்ததாக தெரிகிறது. அந்த குப்பை குவியலில் இன்று திடீரென தீப்பிடித்து. காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவியதில் மேம்பாலத்தை கரும்புகை சூழ்ந்தது. இதனால் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

News August 28, 2024

தமிழ்நாடு வேளாண்மை பல்கலை.யில் தென்னை திருவிழா

image

கோவை வடவள்ளி உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தென்னை திருவிழா நேற்று நடைபெற்றது. பாரசூட் கல்பவிருக்ஷா அறக்கட்டளை, தென்னை வளா்ச்சி வாரியம் ஆகியவை இணைந்து நடத்திய இந்தத் திருவிழா, கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தொடங்கிவைத்துப் பாா்வையிட்டாா். இந்த நிகழ்வில் துணைவேந்தா் கீதாலெட்சுமி, சா்வதேச தென்னை சமுதாய செயல் இயக்குநா் ஜெல்பினா ஆலவ் என பலரும் கலந்து கொண்டனர்.

News August 28, 2024

கோவை மாவட்டத்தில் இன்றுமுதல் மழை

image

கோவை மாவட்டத்தில் இன்று முதல் செப். 1ம் தேதி வரை மிக லேசான தூறல் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. வரும் 31ம் தேதி, ஆனைமலை, பொள்ளாச்சி தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் முறையே 10 மி.மீ., மற்றும் 9 மி.மீ., மழை பெய்ய வாய்ப்புள்ளது. இத்தகவலை,கோவை, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய முதன்மை அலுவலர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

News August 28, 2024

JUSTIN: கோவையில் பாஜக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு

image

கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த சதீஷ்குமார் பாஜக மண்டல இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் சதீஷ்குமார் நேற்றிரவு பூ மார்க்கெட் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென சதீஷ்குமாரை கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். தற்போது அவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News August 28, 2024

கோவையில் மின்தடை அறிவிப்பு

image

கோவையில் மின்பராமரிப்பு காரணமாக நாளை (ஆக.29) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை பீளமேடு துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும். அதேபோல், காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை தாளக்கரைமுத்தூர் துணை மின் நிலையம், மார்ச்சநாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 28, 2024

3 திமுக பூத் நிர்வாகிகளுக்கு தங்க மோதிரம் பரிசு 

image

மோப்பிரிபாளையத்தில் திமுகவிற்கு அதிக வாக்குகள் பெற்றுக் கொடுத்த 3 பூத் நிர்வாகிகளுக்கு (ஆக27) தங்க மோதிரம் பரிசு வழங்கப்பட்டது. மக்களவை தேர்தலில் திமுகவிற்கு அதிக வாக்குகள் பெற்றுத் தந்த 3 பூத் நிர்வாகிகளுக்கு 1/2 பவுன் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் , ஏ.வி அன்பரசு, விநாயகா பழனிச்சாமி, வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

News August 27, 2024

கோவை: 9 லட்சம் ஏமாற்றிய நான்கு பேர் கைது

image

கோவை ஆர். எஸ். புரத்தை சேர்ந்தவர் ராமசாமி (30) இவரது செல்போனுக்கு வாட்ஸ் ஆப்பில் குறுந்தகவல் வந்தது. அதில் முதலீடு செய்தால் அதிக அளவில் லாபம் மற்றும் கமிஷன் தொகை கிடைக்கும் என தெரிவித்தனர். இதனை நம்பிய ராமசாமி ரூ. 9 லட்சம் பணம் அனுப்பினார். ஆனால் எந்த லாபமும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கோவை சைபர் க்ரைம் போலீசார் நடத்திய விசாரணையில் கிஷான் சவுத்ரி சுனில் சரண் சந்தீப் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

News August 27, 2024

பாஜக மாநிலத் தலைவருக்கு பகிரங்க சவால்

image

கோவை இன்று அதிமுக கட்சி அலுவலகத்தில் சிங்கை ஜி.ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது பாஜகவை எக்காலத்திலும் எதிர்ப்பது அதிமுக மட்டும்தான். “அதிமுக ஊழல் ஆட்சி என்று சொல்லும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீங்கள் ஏன் அதிமுக வில் கூட்டணி வைத்தீர்கள்? கூட்டணி வைக்கும் போது தெரியவில்லையா? இது ஊழல் கட்சி என்று?நேருக்கு நேர் விவாதம் பண்ண ரெடியா? என்று கூறினார்.

News August 27, 2024

கோவை: ‘நாகை திருவள்ளுவன் உயிருக்கு ஆபத்து’

image

சமூக வலைத்தளங்களின் வாயிலாக, தமிழ் புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவனுக்கு நாம் தமிழர் கட்சியினர் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து இன்று கோவை பந்தயசாலையில் உள்ள மேற்கு மண்டல தலைவரை இன்று சந்தித்த தமிழ் புலிகள் அமைப்பினர் ஐஜியிடம் நாகை திருவள்ளுவனுக்கு பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்.

News August 27, 2024

BREAKING கோவையில் குழந்தை விற்பனை: 3 பேர் கைது

image

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பிறந்த குழந்தையை பணத்துக்காக விற்பனை செய்ததாக குழந்தையின் தாய் உட்பட 3 பேரை இன்று கைதுசெய்த பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் குழந்தையை விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!