India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியில் இன்று நடைபெற்றுவரும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். அதன்படி, மாணவர்களுக்கு ஏடிஎம் அட்டையை வழங்கினார். இதில் திரளான மாணவர்கள் பங்கேற்றனர். இந்தத் திட்டத்தால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். முதல்வர் நிகழ்ச்சியையொட்டி கல்லூர் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், நடிகர் விஜய் சேதுபதியை உதைப்பவருக்கு ரூ.1001 பரிசு என்று சமூகவலைதளத்தில் அர்ஜுன் சம்பத் பதிவிட்டிருந்தார். இது குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம், விசாரணைக்காக ஆஜரான அர்ஜுன் சம்பத்திடம் விசாரித்தினார். நீதிபதி முன்பு குற்றத்தினை ஒப்புக்கொண்ட அர்ஜுன் சம்பத்துக்கு கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அவருக்கு நேற்று ரூ.4,000 அபராதம் விதித்தது. உங்கள் கருத்து?
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கோவையில் தமிழ் புதல்வன் திட்டத்தை துவக்கி வைக்க வருகை தருகிறார். தொடர்ந்து உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலம், கணியூரில் கருணாநிதியின் திருவுருவச் சிலையை திறக்க உள்ளார். இதனையொட்டி கோவை மாநகர கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் 4 காவல் துணை ஆணையர்களின் மேற்பார்வையில் 19 உதவி ஆணையர்கள், 45 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட சுமார் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்தது.அதை தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்ததால், ஆழியார் அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. இந்நிலையில் முழு கொள்ளளவை எட்டியதால் ஆழியார் அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இன்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகர காவல் ஆணையர் இன்று கூறியதாவது, நாளை தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு, போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதில் அவினாசி சாலையில் கனரக வாகனங்கள் செல்வதை தவிர்த்து மாற்றுப்பாதைகளை பயன்படுத்தி தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். மேலும், காலை 06.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை கோவை மாநகர எல்லைக்குள் கனரக வாகனங்களை இயக்க அனுமதி கிடையாது.
கோவை ரயில்வே அதிகாரிகள் இன்று கூறியதாவது,
கோவையில் இருந்து பீகார் மாநிலம் பரௌனி இடையே வாராந்திர சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை இயக்க பட உள்ளது. மறுமார்க்கமாக, பரௌனி முதல் கோவை வரை வெள்ளிக்கிழமை இரவு 11.45 மணிக்கு வரும் என தெரிவித்துள்ளனர். எனவே இந்த சிறப்பு ரயிலை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.
கோவையில் நாளை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். இதற்காக 11 மணிக்கு விமானநிலையம் வரும் முதல்வர் அரசு கலை கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தை 12 மணிக்கு துவக்கி வைத்து பின்னர் உக்கடம் மேம்பாலம் திறந்து வைக்கிறார். இதனை தொடர்த்து கனியூரில் கருணாநிதி சிலை திறந்து வைக்க உள்ளார்.
கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்துவரும் பத்ரி நாராயணன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கார்த்திகேயனை புதிய எஸ்பியாக நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. கார்த்திகேயன் தற்போது திருவண்ணாமலை எஸ்பியாக இருந்துவருகிறார். அதேபோல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள், பல பதவிகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 11ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. எனவே, மாவட்ட மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
கோவையில் இன்று (ஆக.8) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் மின்தடை ஏற்படும். அவை: கோயில்பாளையம், சர்க்கார்சமகுளம், குரும்பபாளையம், மண்ணிக்கம்பாளையம், அக்ரகார சாமகுளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிபாளையம், மொண்டிகாலிபுதூர், தளவாய்பாளையம், பழையூர், நாச்சிபாளையம், ஜமின்கொட்டாம்பட்டி, வடுகபாளையம், பேரிகை, செட்டிப்பள்ளி, பீளமேடு புதூர், கணபதி, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடி.
Sorry, no posts matched your criteria.