India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்வில் கருப்பு உடை அணிந்து வந்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று கோவையில் உள்ள கல்லூரி நிகழ்வில் கலந்து கொள்ள வந்தார். இந்நிகழ்வில், மாணவர்கள் சிலர் கருப்பு உடை அணிந்து வந்தனர். அப்போது, அவர்களை போலீசார் வேறு நிறத்தில் உடை அணிந்து வருமாறு கூறி திருப்பி அனுப்பினர்.
கோவை-அபுதாபி இடையே நேரடி விமான சேவை இன்று(10.8.24) காலை தொடங்கியது. இந்நிலையில் இன்று காலை 6.40-க்கு அபுதாபியில் இருந்து கோவை வந்த விமானத்தில், 163 பேர் பயணித்தனர். பின்னர், மீண்டும் காலை 7.30 மணிக்கு கோவையில் இருந்து 168 பயணிகளுடன் விமானம் அபுதாபி புறப்பட்டு சென்றது.
கோவை தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று காலை நடைபெறும் இந்திய குடிமை பணி தேர்வுகளில் தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்ள உள்ளார். அதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவை வருகை தர உள்ளார். தொடர்ந்து அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பின்னர் மாலையில் விமான மூலமாக சென்னை செல்கிறார்.
கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் கேலோ இந்தியா திட்ட நிதியுதவியில், தொடக்க நிலை கால்பந்து பயிற்சிக்கான மாவட்ட மையம் கோவை நேரு விளையாட்டரங்கில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கால்பந்து பயிற்சி மாவட்ட மையத்தில் பயிற்சியாளா் இப்பணிக்கு ஆக.13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதலமைச்சர் வாக்குறுதி அளித்திருந்தார். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தற்போது இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான முயற்சிகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் இன்று கோரியுள்ளது.
கோவை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் அனைத்து வட்டாரங்களிலுள்ள ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடப்பு ஆண்டிற்கு (2024-25) திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி ஊரக இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி 19.08.24 முதல் 24.08.24 வரை 6 நாட்கள் உயிர் உரங்கள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் உற்பத்தி என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.
மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இன்று வரை லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய விசாரணையில் சார்பதிவாளர் சாந்தி, அவரது குடும்பத்தினர் வங்கி கணக்குகளில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் அலுவலக ஊழியர், டிரைவர், புரோக்கர் மூலம் ரூ.25,33,880 லஞ்சமாக பெற்றது தெரிந்தது. இதுகுறித்து பேசிய லஞ்ச ஒழிப்பு துறையினர் சார்-பதிவாளர் சாந்தி மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றனர்.
➤கோவையில் தமிழ்புதல்வன் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ➤உக்கடம்-ஆத்துப்பாலம் இடையே கட்டப்பட்ட ரூ.481 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ➤கலைஞர் நாணயம் வெளியீட்டு விழாவிற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு, முதல்வர் ஸ்டாலின் அழைப்பு. ➤மே.பாளையம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் ரூ.25.33 லட்சம் டிஜிட்டல் முறையில பணம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டது.
சேலம், அஸ்தம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் கோவை புதூர் பகுதியில் டேட்டா என்ட்ரி நிறுவனம் துவங்கி பல கோடி மோசடி செய்ததாக பேரூர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் புகாரளிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த 10 ஆண்டுகளாக தலைமறைவாகியுள்ளார். இவ்வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கின்றனர். இதுகுறித்த வழக்கை விசாரித்த கோவை நீதிமன்றம் வரும் ஆக.12க்குள் ஆஜராக உத்தரவிட்டது.
கோவை லஞ்ச ஒழிப்பு கூடுதல் எஸ்பியாக இருந்துவரும் பி.மணிகண்டன் பதவி உயர்வு பெற்று, சென்னை மத்திய சரக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு எஸ்பியாகவும், கோவை மாவட்ட தலைமையிடத்து கூடுதல் எஸ்பி கே.முத்துக்குமார் எஸ்பியாக பதவி உயர்வு பெற்று சென்னை புளியந்தோப்பு துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை போக்குவரத்து துணை ஆணையராக கடலூர் கூடுதல் எஸ்பி அசோக் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.