India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இன்று கூறியதாவது. நாளை(13.8.24) கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் கோவை மாநகராட்சியின் மேயர் ரங்கநாயகி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் நேரடியாக தங்களது மனுக்களை வழங்கி தீர்வு கண்டு பயன்பெறலாம் என அறிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இருந்து இன்று மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் மும்பை செல்லுவதற்காக கோவை வந்தவர். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான திட்டங்களை மத்திய அரசு வழங்கி வருகின்றது என்று தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டுக்கான தலை சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில், சிறந்த பல்கலைகழகத்திற்கு பாரதியார் பல்கலைக்கழகம் 8ஆவது இடத்தை பெற்றதுள்ளது. அதே போல் கல்லூரியில் கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி 7ஆவது இடம் பிடித்துள்ளது. சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் கோவை CMC 3ஆவது இடத்தில் உள்ளது.
கோவை மாவட்ட நிர்வாகத்தால் வஉசி மைதானத்தில் வரும் ஆக.15ஆம் தேதி சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. இதனையொட்டி போலீசாரின் அணிவகுப்பு நிகழ்ச்சி ஒத்திகை நடைபெற்று வருகிறது. மேலும், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி ஒத்திகையும் அந்தந்த பள்ளிகளில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சுதந்திர தினத்தை ஒட்டி கோவை மாநகரில் 2000 போலீசாரும், புறநகரில் 1500 போலீசாரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கோவை பீளமேடு காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐ-யாக பணிபுரிந்து வரும் ரவி, நேற்று ஹோம் கார்ட் பிரபுவுடன் ரோந்து பணியில் ஈடுபட்டபோது கார் மோதியதில் பிரபு பலியானார். எஸ்எஸ்ஐ ரவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிந்த கோவை வடக்கு போக்குவரத்து போலீசார் இன்று விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கே.கே.புதூரை சேர்ந்த அஜய் ராகுல் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கோவை பீளமேடு காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐ – யாக பணிபுரிந்து வருபவர் ரவி. இவர் ஊர்க்காவல் படை வீரர் பிரபு என்பவருடன் டூவீலரில் ரோந்து பணி மேற்கொண்டு இருந்தார். அப்போது, கொடிசியா அருகே அதிவேகமாக வந்த கார் மோதியதில் பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். ரவி கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோவை கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கோவை அடுத்துள்ளது வெள்ளமலை எஸ்டேட் மட்டம். இங்கு ரேஷன் கடை ஒன்றுள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் கடையை ரேஷன் கடை ஊழியர் திறந்த போது, அங்குள்ள டயர் ஒன்றில் 6 அடி நீளமுள்ள நல்லபாம்பு படம் எடுத்து ஆடியது. இதைக்கண்டதும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சிறப்பு நிலைய அலுவலர் பிரகாஷ்குமார் தலைமையிலான தீயணைப்பு நிலைய வீரர்கள், பாம்பை லாவகமாக பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் 23ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதில், 10, 12, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதற்கு https://www.tnprivatejobs.tn.gov.in/என்ற இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.
கோவை வருகை தந்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதனை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் இன்று வரவேற்று மகிழ்ந்தார். இந்நிகழ்வில் வடக்கு மாவட்டச் செயலாளர் ரவி, தெற்கு மாவட்டச் செயலாளர் முருகேசன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளர் மருதவேல் என பலரும் கலந்து கொண்டனர்.
கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில், சுதந்திர தினத்திற்கான ஒத்திகை அணிவகுப்பு மற்றும் வாகா எல்லையில் நடைபெறும் அணிவகுப்பு நாளை(12.8.24) நடைபெற உள்ளது. இதுகுறித்து இன்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.