India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை மாநகர ஆணையர் பாலகிருஷ்ணன் இன்று கூறியதாவது, கோவை மாவட்டத்தில் நேற்று நடத்த பட்ட சோதனையில் ஆம்னி பேருந்து ஒட்டுநர்கள் 95 பேர் மது போதையில் பேருந்தை இயக்கியது கண்டுபிடிக்க பட்டுள்ளது. இந்த பேருந்தின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்க பட்டு மாற்று ஓட்டுநர்களை வரவழைத்து பேருந்தை இயக்க உத்தர விட பட்டுள்ளது. மேலும் ஓட்டுநர்களுக்கு அபராதமும் விதிக்க பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
கோவை மாநகராட்சியில் ஒவ்வொரு வாரமும் செவ்வாயன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மேயர் தலைமையில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நாளை (செப்.3) மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுவதாக கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திராவிட சுயமரியாதை கழகத்தின் தலைவர் நேருதாஸ் தலைமையில் இன்று கோவை ஆட்சியர் கிராந்தி குமார்பாடியை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கோவையில் உள்ள தனியார் பள்ளிகள் சிலவற்றில் மாணவர்கள் சேர்க்கைக்காக வழங்கும் விண்ணப்பங்களில் ஜாதி, மதம் உள்ளிட்டவைகளை கட்டாயம் எழுத வேண்டும் என்று கட்டாயபடுத்துவதாகவும் அவ்வாறான பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
வால்பாறை கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து 4 பேரை நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தற்காலிக பேராசியர் ராஜபாண்டி பணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். மேலும், தற்காலிக பேராசிரியர்கள் சதீஷ், முரளிராஜ், ஆய்வக உதவியாளர் அன்பரசு ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று விடுத்த செய்தி குறிப்பில், ஊரக வேலை உறுதி திட்டத்தில் கடந்த 2023-24ஆம் ஆண்டு செய்யப்பட்ட பணிகள் (ம) பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் 2016-17 முதல் 2021-22 வரையிலான செயல்பாடுகளை 4 நாட்கள் சமூக தணிக்கை செய்து 5வது நாள் கிராம சபை கூட்டம் நடத்தி பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். இன்று முதல் சமூக தணிக்கை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்களுக்கான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி இம்மாதம் நடத்தப்படவுள்ளது. இதற்கு முன்பதிவு ஆக.17ல் துவங்கி, கூடுதல் அவகாசத்துடன் இன்று (செப்.2) வரை வழங்கப்பட்டது. எனவே, கோவையைச் சேர்ந்தவர்கள் இன்று மாலைக்குள் https://www.sdat.tn.gov.in/என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
திமுக பவளவிழா ஆண்டை முன்னிட்டு நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழா வரும் செப். 17ம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர், பேராசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில் பெரியார் விருது பத்மஸ்ரீ விருது பெற்ற இயற்கை விவசாயி கோவை தேக்கம்பட்டி பாப்பம்மாள் பாட்டிக்கு வழங்கப்பட உள்ளதாக திமுக தலைமை கழகம் இன்று அறிவித்துள்ளது.
கோவையைச் சேர்ந்த பாப்பம்மாள்(108) சிறு வயது முதலே விவசாயத்தில் ஆர்வம் கொண்டிருந்ததாலும், அதனை முறையாக கற்க வேளாண் யூனிவர்சிட்டியில் சேர்ந்தார். பின் 1959ஆம் ஆண்டு தேக்கம்பட்டி ஊராட்சி உறுப்பினராகவும், 1964ல் யூனியன் கவுன்சிலராகவும், மாதர் சங்கத் தலைவியாகும் பதவி வகித்துள்ளார். 2021ல் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. இதை தொடர்ந்து தற்போது பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் இன்று கூறியதாவது. கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தலை தடுத்து நிறுத்தல் மற்றும் கையாளுதல் தொடர்பான கூட்டம் தமிழக அரசின் தலைமை செயலாளரால் நாளை (திங்கட்கிழமை) காணொலிக் காட்சி மூலம் நடத்தப்பட உள்ளது. இக்கூட்டம் நிர்மலா கல்லூரியில் பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
கோவை, ராமநாதபுரத்தை சேர்ந்த மூதாட்டியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் தான் சிபிஐ அதிகாரி எனவும், தொடர்ந்து பார்சலில் போதை பொருள், சர்வதேச சிம் கார்டுகள், போலி பாஸ்போர்ட்கள் வந்துள்ளதாகவும் அதுகுறித்து வழக்கு பதியாமல் இருக்க ரூ.2.50 கோடி கட்ட வேண்டும் என கூறியுள்ளனர். அதை நம்பி அவரும் கட்டியுள்ளார். பணம் திரும்ப வரவில்லை. இப்புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.