Coimbatore

News August 16, 2024

சவுக்கு சங்கருக்கு ஜாமீன்: கோவை நீதிமன்றம்

image

பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனிடையே முத்துராமலிங்க தேவர் குறித்தும் அவதூறாக பேசியதாக தொடர்ந்த வழக்கை விசாரித்த கோவை நீதிபதி சரவணபாபு, சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி இன்று உத்தரவு பிறப்பித்தார். அவர் மீது மேலும் ஒரு குண்டர் சட்டம் இருப்பதால், சிறையிலேயே இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News August 16, 2024

கோவையில் 42 மாதங்களில் 16,820 பெண்கள் கருக்கலைப்பு

image

கோவையில் கடந்த 42 மாதங்களில் 16,820 பெண்கள் கருக்கலைப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 2021ஆம் ஆண்டு முதல் 30 ஜூன் 2024ஆம் ஆண்டு வரை கருக்கலைப்பு செய்யப்பட்ட விவரங்களை, தனியார் தொலைக்காட்சி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளது. இதில், கோவை 4ஆம் இடத்தில் உள்ளது.

News August 16, 2024

கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு

image

கோவை மாவட்டத்தின் ஒருசில இடங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கும் எனவும், போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும் தெரிகிறது. கடந்த சில நாள்களாக வால்பாறை, பொள்ளாச்சி உள்ளிட்ட மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது. இன்று அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

News August 16, 2024

கோவையில் தொழில் தொடங்க கடன் உதவி 

image

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ், கயிறு வாரியத்தின் வாயிலாக மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ், அதிகபட்ச திட்ட செலவு ரூ.50 லட்சம், உற்பத்தி மற்றும் வணிக சேவைத்துறைகளில் ரூ.20 லட்சத்துக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் கயிறு வாரிய மண்டல அலுவலகம் துவங்கப்பட்ட பின் தொழிற்சாலைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என கயிறு வாரிய மண்டல அலுவலர் சாபு தெரிவித்தார்.

News August 16, 2024

கோவையில் நாளை மின்தடை

image

கோவையில் மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஆக.17) சூலூர் துணைமின் நிலையம், கோவை துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். அதேபோல் மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்றாற்போல் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News August 16, 2024

பட்டியலின, பழங்குடியின மாணவர்களுக்கு உதவித்தொகை

image

கனரா வங்கியின் கோவை மண்டல அலுவலகத்தின் சாா்பில் சிறந்த பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவிகள் 126 பேருக்கு வித்யா ஜோதி திட்டத்தின்கீழ் ரூ.5.04 லட்சம் உதவி தொகை நேற்று வழங்கப்பட்டது. இதனை கோவை மாவட்ட தாட்கோ மேலாளா் மகேஸ்வரி வழங்கினார். அப்போது, மண்டல தலைவா் ரதீஷ் சந்திர ஜா, கோட்ட மேலாளா்கள் நஞ்சுண்டா, ஸ்ரீதா் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

News August 16, 2024

கோவைக்கு இனி HAPPYதான்

image

கோவை மக்களின் 60 ஆண்டுகால கனவான ‘அத்திக்கடவு – அவினாசி நீர் செறிவூட்டும் திட்டம்’ நனவாகப் போகிறது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்துவைக்கிறார். 2019இல் இத்திட்டத்திற்கு அப்போதைய முதல்வர் இபிஎஸ் ரூ.1,652 கோடி ஒதுக்கி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து ஆட்சி மாறிய நிலையில் நாளை தொடங்கப்பட உள்ள நிலையில் இத்திட்டத்திற்கு ரூ.1,916 கோடி செலவிடப்பட்டதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 16, 2024

கோவையில் 191 நிறுவனங்கள் மீது நடவடிக்கை.

image

கோவை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தேசிய விடுமுறை தினமான நேற்று (ஆக.15) கோவை மாவட்டத்தில் கடைகள், தொழில் நிறுவனங்கள் என 230 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 92 கடைகள், நிறுவனங்கள், 99 உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 191 உரிமையாளர்கள், பொறுப்பாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.

News August 16, 2024

கோவை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்

image

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளி அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே, தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ளவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். மக்களே ஷேர் பண்ணுங்க!

News August 15, 2024

மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை ரத்து

image

மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையே சிறப்பு வாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆக.1 ஆம் தேதி அடர்லி அருகே ஏற்பட்ட நிலச்சரிவால் பாறாங்கற்கள், மரங்கள் விழுந்து தண்டவாளம் சேதமடைந்ததால் அன்று முதல் ஆக.15 வரை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் வரும் ஆக.22 ஆம் தேதி வரை இச்சேவையை ரத்து செய்து ரயில்வே இன்று அறிவித்துள்ளது.

error: Content is protected !!