India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024மற்றும் 25ம் நிதியாண்டில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி இல்லை என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக சென்னையை சேர்ந்த தயானந் கிருஷ்ணன் அளித்த ஆர்டிஐ மனுவுக்கு பதில் இவ்வாறு வந்துள்ளது. இதனால் இந்த நிதியாண்டில் கோவைக்கு ஒதுக்கீடு செய்ய பட இருந்து மெட்ரோ ரயில் திட்டம் தற்போது இல்லை என்பதால் கோவை மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
வருவாய்த்துறை சார்பில் வழங்கும் ஜாதி, வருவாய் உள்ளிட்ட 26 வகையான சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல் கோரும் மனுக்கள் மீது அதிகபட்சமாக, 15 நாட்களில் முடிவெடுக்க வேண்டும் என்று, கோவை மாவட்டத்திலுள்ள, 11 தாலுகா தாசில்தார்கள் மற்றும் அனைத்து வருவாய்த்துறை அலுவலர்கள், அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை நடத்த விரும்புவோர், ஒற்றைச்சாளர முறையில் இ-சேவை மையம் வாயிலாக, மாவட்ட வருவாய் அலுவலரிடம், லைசென்ஸ் பெற விண்ணப்பிக்க வேண்டும். தமிழக அரசின் வெடிபொருள் சட்ட விதிகள், 2008ன் கீழ், விண்ணப்பங்களை அக்.,6 வரை http://tnedistrict.tn.gov.in என்ற இணைய முகவரியில், இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் உள்ளிட்ட புதிய விதிமுறைகளை கோவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
சிறு குறு தொழில் நிறுவனங்கள்,வங்கிகள், ஜவுளி நிறுவனங்கள்,விவசாயம், தோல், வருமான வரி துறை மற்றும் ஜி.எஸ்.டி சார்ந்த துறைகள் தொடர்பாக அனைவரையும் ஒரே இடத்தில் சந்திக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையின் பேரில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சார்பில் மேற்கண்ட துறைகளை சார்ந்த உயர் அதிகாரிகள் கூட்டம் செப்டம்பர் 11ம் தேதி, காலை 10 மணியளவில் கொடிசியா கூட்ட அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வடவள்ளி சாலையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இன்று 44வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.
இதில் மொத்தமாக 9,526 மாணவர்கள் இளமறிவியல், முதுநிலை பட்டமேற்படிப்பு மற்றும் முனைவர் பிரிவில் பட்டம் பெற உள்ளனர். இதில் 3,415 மாணவர்கள் நேரடியாகவும் பட்டங்களை பெற்றனர்.
கோவை போத்தனூர் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளரிடம் நேற்று அளித்த மனுவில், ராமேஸ்வரத்திலிருந்து கோவைக்கு மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, திண்டுக்கல், பழநி, உடுமலை, பொள்ளாச்சி, போத்தனூர் வழியாக இன்டர்சிட்டி இயக்கப்பட வேண்டும். அதேபோல மதுரை வரை செல்லும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயிலை போடி வரை நீட்டிக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு இன்று பொள்ளாச்சியிலிருந்து உக்கடம் நோக்கி வரும் கனரக வாகனங்கள், பேருந்துகள் ஈச்சனாரி சர்வீஸ் ரோடு வழியாக வந்து ஈச்சனாரியில் u turn செய்து செட்டிபாளையம் வழியாக ஜி.டி. டேங்க், ரயில் கல்யாண மண்டபம் சந்திப்பு, போத்தனூர் கடைவீதி, குறிச்சி பிரிவு, ஆத்துப்பாலம் வழியாக உக்கடம் செல்ல வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
கோவை பாரதியார் பல்கலை தொலைநிலை கல்வி இயக்கத்தின்கீழ் பி.எட். படிப்பு (ஆண்டுத்தேர்வு) பயிற்றுவிக்கப்படுகிறது. இதில் 2023 – 24ம் ஆண்டுக்கான தேர்வுகள் வரும், 25ம் தேதி துவங்கி, 30ம் தேதி முடிவடைகின்றன என பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு, பல்கலை இணையதளம், https://b-u.ac.in ஐ பார்க்கலாம் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கல்வி நிறுவனங்களில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் சீண்டல் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஆலாந்துறை அருகே சுமார் 10க்கும் மேற்பட்ட அரசு பள்ளியில் அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அங்கு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தப் புகாரில் ஈஷா யோகா மையத்தின் மருத்துவக் குழுவைச் சேர்ந்த மருத்துவர் சரவணமூர்த்தி என்பவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை.யில் இன்று (செப்.9) நடைபெறவுள்ள 44வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் காலை 9 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கோவை வருகிறார். அங்கிருந்து பல்கலைக்கழகம் செல்லும் அவர் காலை 10.30 மணிக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துடன் இணைந்து பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். விழா முடிவடைந்து பிற்பகல் 3.10-க்கு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.
Sorry, no posts matched your criteria.