Coimbatore

News September 23, 2024

வால்பாறையில் பரவும் ஃபீவர்..?

image

கோவை மாவட்டம் வால்பாறையில் காலநிலை மாற்றம் காரணமாக அப்பகுதி மக்களுக்கு வைரல் பீவர் பரவி வருவதாக கூறப்படுகிறது. இதனைதொடர்ந்து மருத்துவ பணியாளர்கள் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யவும், நகராட்சி அதிகாரிகள் கொசு மருந்து அடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

News September 23, 2024

பிஏபி அணிகளின் நீர்மட்டம் விவரம்

image

பிஏபி பாசன திட்டத்தில் உள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டம் இன்று (செப்டம்பர் 23) காலை 8 மணி நிலவரப்படி சோலையாறு அணையின் நீர்மட்டம் 158.91அடியாகவும், பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 71.11 அடியாகவும், ஆழியார் அணையின் நீர்மட்டம் 118.40அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 45.05அடியாகவும் உள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News September 23, 2024

கோவை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கோவை வீட்டு வசதி பிரிவுக்குட்பட்ட மனைகளில் 177 ஒதுக்கீடு தாரர்கள் வாரிய விதிமுறைகளின் படி பணம் செலுத்தும் காலம் முடிவுற்றும், அரசு வட்டி தள்ளுபடி சலுகை பலமுறை அறிவித்தும் பலர் நிலுவை தொகை செலுத்த வரவில்லை. ஒதுக்கீட்டாளர்கள் வரும் 30ம் தேதிக்குள் கணக்கை நேர் செய்து நிலுவை தொகையை செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் ஒதுக்கீடு உத்தரவு ரத்து செய்யப்படும் என கலெக்டர் கிராந்திகுமார் அறிவித்துள்ளார்.

News September 23, 2024

சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம்!

image

கோவை, ஆர்.எஸ்.புரத்தில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம் அமைக்க கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும் கட்டுமான பணிகள் விரைவில் துவங்கவுள்ளது. ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள மைதானத்தில் சர்வதேச தரத்தில் செயற்கை புல்வெளி பலத்துடன் அடங்கிய ஹாக்கி மைதானம் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.

News September 23, 2024

கட்டில்களை வைத்து சீல்: கலாய்க்கும் நெட்டிசன்கள்

image

தொண்டாமுத்தூர் பகுதியில் இன்று கோவை எஸ்பி கார்த்திகேயன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, குபேரபுரி டாஸ்மாக் பாரில் மதுவிற்பனை கண்டு மூவரை கைது செய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து சீனிவாசன், அர்ஜுன், வினோத் உள்ளிட்ட மூவரை கைது செய்தனர். பின், கோவை கலெக்டர் உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் பாரை வருவாய்த்துறையினர் கட்டிலை வைத்து மறைத்து சீல் வைத்த சம்பவத்தை கண்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

News September 22, 2024

கோவையில் இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤கோவையில் வரும் 24ஆம் தேதி கிராமங்களில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெறவுள்ளது. ➤சூலூரில் பிரபு என்ற வாலிபர் வயிற்று வலிக்கு ஊசி செலுத்திக் கொண்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ➤தொண்டாமுத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய பாருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ➤கோவை, பேரூர், மருதமலை, மதுக்கரை, தடாகம், வடவள்ளி, தொண்டாமுத்தூர் பகுதியில் குட்டிகளுடன் உலா வரும் யானைகள்.

News September 22, 2024

“CM ஆக தமிழ்நாட்டில் டேரா போட்டார் நிர்மலா சீதாராமன்”

image

திமுக எம்.பி தயாநிதி மாறன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஜெயலலிதா இறந்த பிறகு, முதலமைச்சராகும் ஆசையில் 3 மாதங்கள் தமிழகத்தில் டேரா போட்டவர் தான் நிர்மலா சீதாராமன். அடிமைகளின் ஆட்சியை வீழ்த்தலாம் என்று நினைத்தனர். அப்போது அவர், இந்தாண்டு நீட் இருக்காது. அதற்காக நாங்கள் பாடுபடுகிறோம் என்று கூறினார்.

News September 22, 2024

சூலூர்: தவறான சிகிச்சையால் இளைஞர் மரணம்

image

சூலூர் அருகே கிளினிக்கில் வயிற்று வலிக்கு ஊசி செலுத்திக் கொண்ட வாலிபர் உயிரிழந்தார். செஞ்சேரிமலையில் உள்ள கிளினிக்கில் பிரபு (22) என்ற வாலிபர் வயிற்று வலிக்கு ஊசி செலுத்திக் கொண்டுள்ளார். அதன் பிறகு அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News September 22, 2024

சிறுமுகை: 840 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

image

சிறுமுகை வச்சினம் பாளையம் ஜவகர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசருக்கு தகவல் வந்துள்ளது. அதன் பெயரில் அங்கு சென்ற எஸ்ஐக்கள் ரவிச்சந்திரன், ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் அங்கு பதுக்கி வைத்திருந்த 840 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அதனைப் பதுக்கி வைத்திருந்த ஷபிக் அகமது புகாரி என்பவரை தேடி வருகின்றனர்.

News September 22, 2024

கோவையில் உள்ள கிராமங்களில் உணவு திருவிழா

image

கோவை ஆட்சியர் கிராந்தி குமார்பாடி இன்று கூறியதாவது..
கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், தாய்மார்கள், முதியவர்களுக்கு ஊட்டச்சத்துக்களை அதிக படுத்தும் வகையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வரும் 24ம் தேதி, பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் மகளீர் சுய உதவிக் குழுவினர் கலந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

error: Content is protected !!