Coimbatore

News September 24, 2024

யானையின் எலும்பு துண்டுகள் கண்டெடுப்பு

image

கரடிமடையில் கிராவல் மண் கொள்ளை நடப்பாதக வந்த தகவலையடுத்து அங்கு சென்ற கனிம வளத்துறை உதவி இயக்குனர் விஜயராகவன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வின் போது யானையின் எலும்பு துண்டுகள் சிதறி கிடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து யானை தந்தத்திற்க்காக வேட்டையாடப்பட்டதா? யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழப்பு ஏற்பட்டதா? என்று வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

News September 24, 2024

கோவையில் பி.எ.ப்., குறைகேட்புக் கூட்டம்

image

கோவை உப்பிலிபாளையம் கே.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரியில் வரும் 27ம் தேதி, காலை 10:30 முதல் மதியம் 12:30 மணி வரை பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ.குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது.இதில் பி.எப். ஓய்வூதியம் பெறுவோர், இ.எஸ்.ஐ. உள்ளிட்டோர் தங்களின் குறைகள், பிரச்னைகள் குறித்து தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். கோவை மண்டல பி.எப்., ஆணையாளர் அலுவலர் வைபவ் சிங், தெரிவித்துள்ளார்.

News September 24, 2024

ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் எம்.பி கோரிக்கை

image

எம்.பி.,யின் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிப்பது விசித்திரமாக உள்ளது. தமிழக சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு தமிழக முதல்வர் வரிவிலக்கு அளித்தது போல், மக்கள் நலத்திட்டங்களுக்கு வழங்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என பொள்ளாச்சி எம்.பி ஈஸ்வரசாமி, நேற்று செய்தியாளர் சந்திப்பை தெரிவித்துள்ளார்.

News September 24, 2024

இன்று பாரம்பரிய உணவுத்திருவிழா

image

கோவையில் கிராமப்புறங்களில் வசிக்கும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் (ம) முதியோர் போதிய ஊட்டச்சத்து இல்லாமல் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறார்கள். இதனால், இன்று அனைத்து ஊராட்சி சேவை மையங்களில் பாரம்பரிய உணவுத்திருவிழா போட்டி நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. மேலும், மாவட்ட அளவிலான போட்டி அக்.8ல் நடத்தப்படும்.

News September 24, 2024

நடப்பாண்டில் 50 நபர்கள் மீது குண்டர் சட்டம்

image

கோவை எஸ்.பி கார்த்திகேயன் இன்று மாலை விடுத்துள்ள செய்தி குறிப்பில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ அல்லது பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி நடப்பாண்டில் இதுவரை 15 கஞ்சா வழக்கு குற்றவாளிகள் உட்பட 50 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News September 23, 2024

பரிகாரம் செய்வதாக நடித்து மோதிரம் திருட்டு

image

காரமடை காந்திநகரை சேர்ந்த உமாவதி இன்று வீட்டிலிருந்த போது அங்கு வந்த பொள்ளாச்சியை சேர்ந்த செல்வராஜ், விஜய் உள்ளிட்டோர் ஜோசியம் பார்க்க வந்துள்ளதாகவும், தோஷம் உள்ளது. அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதனை நம்பி பரிகாரம் செய்ய 1.6 கிராம் தங்க மோதிரத்தை கொடுத்துள்ளார். பின், உமாவதி அசந்த நேரத்தில் இருவரும் அங்கிருந்து தப்பியுள்ளனர். இப்புகாரின் பேரில் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

News September 23, 2024

கோவையில் இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤கோவையில் நடப்பாண்டில் இதுவரை 50 பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ➤கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறவுள்ளது. ➤வால்பாறையில் 3 கல்லூரி மாணவர்கள் சென்ற பைக் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ➤கோவை, வால்பாறையில் காலநிலை மாற்றம் காரணமாக காய்ச்சல் பரவும் நிலையில், நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 23, 2024

நாளை மக்கள் குறை தீர்ப்பு கூட்டம்

image

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாயன்று மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும். அதன்படி நாளை (செப்.24) காலை 11 மணிக்கு மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் வெளியிட்ட செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News September 23, 2024

வால்பாறை அருகே விபத்து: ஒருவர் உயிரிழப்பு

image

கோவை, வால்பாறை வடக்கு இல்லம் பகுதியில் ஆம்புலன்ஸ் – பைக் மோதிய விபத்தில் பைக்கில் வந்த கல்லூரி மாணவர் ஸ்ரீகாந்த் (21) என்ற மாணவர் பலியானார். மேலும், பைக்கில் இருந்த மற்றொரு மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 3 பைக்-களில் வால்பாறைக்கு சுற்றுலா வந்த போது இவ்விபத்து நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News September 23, 2024

கோவை அருகே பொதுமக்கள் சாலை மறியல்

image

தோலம்பாளையம் ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் கடந்த 10 தினங்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் இல்லாததை கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று காலை குடங்களுடன் சுமார் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த மேட்டுப்பாளையம் எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ், திமுக ஒன்றிய செயலாளர் சுரேந்திரன் விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமுக முடிவு எட்டியதை அடுத்து கலைந்து சென்றனர்.

error: Content is protected !!