India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில் உக்கடம், ரயில் நிலையம், காந்திபுரம், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. காலையிலிருந்து வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது மழை பெய்தது. இதனால், இப்பகுதி குளிர்ச்சியான சூழல் நிலவியது. மழையால், அப்பகுதியில் மழை நீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
(அக்.2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சிகள் தோறும் கிராம சபை கூட்டங்களை நடத்த கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி நாளை (அக்.2) காலை 11 மணிக்கு கிணத்துக்கடவு ஒன்றியம் வடபுதூர் ஊராட்சியில் நடைபெறும்
கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி சிறப்பு பார்வையாளராக கலந்து கொள்ள உள்ளதாக ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பொள்ளாச்சி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இம்முகாமுக்கு நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் எம்.கணேசன் முன்னிலை வகித்தார். நகராட்சியின் பல்வேறு பிரிவு நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டு முகாமுக்கு வந்த மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
கோவை மாவட்ட ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், காந்தி ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு, நாளை (02.10.2024) தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதற்கும், அதன் இறைச்சிகளை விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, கோவையில் செயல்படும் இறைச்சி கடைகளை மூடும்படி தெரிவிக்கப்படுகிறது. மீறுபவர்கள் மீது அபராதம் மற்றும் உரிமம் ரத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கோவை நெக்ஸ்ட் அமைப்பின் தலைவா் சதீஷ் கூறுகையில், தமிழகத்தின் 2வது பெரிய விமான நிலையமான கோவையிலிருந்து தற்போதுள்ள 27 புறப்பாடுகளில் இருந்து தினமும் 30-க்கும் அதிகமான புறப்பாடுகளாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனம் கோவையில் உள்ள ஒரே ஏடிஆா் விமானத்துடன் அக்.1 முதல் கோவாவுக்கான தினசரி விமான சேவைக்கான முன்பதிவை தொடங்குகிறது. அக்.27ஆம் தேதியிலிருந்து இந்த சேவை தொடங்குகிறது என்றார்.
கோவை மாவட்டத்தில், நாளை (அக்டோபர் 2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இயங்கும் பார்களில் மது விற்பனை ஏதும் நடைபெறாது. மேலும் அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை மாநகராட்சி நிர்வாகம் நேற்று கூறியதாவது. கோவை மாநகராட்சியுடன், மதுக்கரை நகராட்சியை இணைப்பதாகவும், இருகூர், பேரூர், பள்ளபாளையம், வெள்ளளூர் ஆகிய பகுதிகளை, 4 பேருராட்சிகளாகவும், குருடம் பாளையம், சோமையம் பாளையம், பேரூர் செட்டிப்பாளையம், கீரணத்தம், நீலாம்பூர் உள்ளிட்ட 11 ஊராட்சிகளை இணைக்கபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கோவை, ஆலந்துறை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை நேற்று உடைத்த மர்மநபர்கள், 22 சவரன் நகை மற்றும் 5 லட்சத்து 32 ஆயிரம் பணம் கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து ஆலந்துறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, திருடு போன வீட்டில் கைரேகைகளை சேகரித்து, இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம் தர்மராஜா கோவில் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (47). இவர் நேற்று இரவு வீட்டின் முன்பு உள்ள மரத்தடியில் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கே வந்த காட்டு யானை சத்தம் கேட்டு எழுந்து ஓடினார். விடாமல் துரத்திய காட்டு யானை சந்திரனை பின்பகுதியில் தும்பிக்கையால் தாக்கி, காலால் மிதித்து கொன்றது.
கோவை ராமநாதபுரத்தில் உள்ள பாஜக நிர்வாகி வீட்டில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியினை கட்சியினரோடு சேர்ந்து பார்த்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசுகையில், திமுகவில் மூத்த அமைச்சர்கள் பலர் இருக்கும்போதும், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பது வாரிசு அரசியலை காட்டுகிறது என்றார்.
Sorry, no posts matched your criteria.