India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையில் பூஜை பொருள் கடை நடத்திவரும் தமிழ்பாண்டியனுக்கு வீரகேரளத்தை சேர்ந்த விஜயகுமாருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது, தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என கூறியதையடுத்து ரூ.21.50 லட்சம் முதலீடு செய்தார். இதேபோல் பலரும் ரூ.1.02 கோடி முதலீடு செய்தனர். பணம் திரும்ப கிடைக்கவில்லை. புகாரின்பேரில் விஜயகுமார் மனைவி பிரியதர்ஷினியை குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை மாவட்டத்துக்குட்பட்ட கடைகள் மற்றம் தொழில் நிறுவனங்கள், உணவு நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. அக்.2ல் காந்தி ஜெயந்தி விடுமுறை அன்று விடுமுறை அளிக்காமல் செயல்பட்ட 164 நிறுவனங்களின் உரிமையாளர்கள், பொறுப்பாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களுக்கு தொழிலாளர்கள் எண்ணிக்கைக்கேற்ப, அதிகபட்சம் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என, தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
கோவை, மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு 10,000 கடனுதவி பெற்று முறையாக திரும்ப கட்டி முடித்தவர்கள் அடுத்த தவணை 20,000 கடன் பெறவும் மற்றும் 20,000 கடனுதவி பெற்று முறையாக திரும்ப கட்டி முடித்தவர்கள் அடுத்த தவணை 50,000 கடன் பெறவும் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று முதல் 10ம் தேதி வரை நடைபெறும். முகாமில் கலந்து பயனடையலாம்.
கோவை எஸ்பி அலுவலகம் இன்று மாலை விடுத்த செய்தி குறிப்பில் போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ ஈடுபட்டவர்கள் மீது தொடர்ந்து சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம். புகாரளிக்க 94981 81212, 77081 00100 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மாவட்ட அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாமில் அனைத்து வட்டாரங்களில் வசிப்போர் அதிகளவில் பங்கேற்கும் பொருட்டு, கோவை ஈச்சனாரியில் அமைந்துள்ள கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 05.10.2024 அன்று காலை 9.00 முதல் 3.00 மணிவரை நடைபெறவுள்ளது.
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, ஐந்தாண்டுகள் தொடர்ந்து புதுப்பித்தும், எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காத இளைஞர்களுக்கு, மாதந்தோறும் உதவித்தொகை பெற https://employmentexchange.tn.gov.in/ என்ற இணையதளத்திலிருந்தோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ விண்ணப்பம் வழங்கலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.
கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேற்று (அக்.02) விடுத்துள்ள செய்திக் குறிப்பில், குரூப் 2 தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அக்.10ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. மேலும், விவரங்களுக்கு studvcirclecbe@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 93615-76081 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரதட்சணை கொடுமை வழக்கில், கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசால், ஓராண்டாக தேடப்பட்டு வந்த கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி (30). என்பவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். சென்னையில் இருந்து துபாய்க்கு, விமானத்தில் தப்பிச் செல்ல முயன்ற போது, குடியுரிமை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு, பயணம் ரத்து செய்யப்பட்டு, சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா இன்று கூறியதாவது, கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதியோர் பராமரிப்பு சேவை உதவியாளர் சான்றிதழ் துவங்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். தகுதியானவர்கள் deancmchcbe@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது விண்ணப்பங்களை அனுப்பலாம் என்றார்.
தமிழக அரசின் தமிழ் வளா்ச்சி துறை சாா்பாக தமிழுக்கு சேவையாற்றி வரும் தமிழறிஞா்களுக்கு உதவித்தொகை ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகையும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற தமிழறிஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேற்று விடுத்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.