Coimbatore

News October 6, 2024

கோவையில் இருந்து சிறப்பு பேருந்துகள்

image

அக்.11 ஆம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவை சிங்காநல்லூர், காந்திபுரம் பேருந்து நிலையங்களில் இருந்து மதுரை, திருச்சி, தென்காசி, திண்டுக்கல், தேனி, நெல்லை, நாகர்கோவில், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 140 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

News October 6, 2024

கோவை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

கோவை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பினை ஆணையர் வெளியிட்டுள்ளார். அதன்படி 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் பிறந்தவர்கள் பிறப்புச் சான்றிதழில் தங்களது பெயர்களை பதிவு செய்ய 31.12.2024 தேதி கடைசி நாளாகும். அதன் பின்னர் பிறப்புச் சான்றிதழ் பெயர் பதிவு செய்ய இயலாது. ஆதலால் மாநகராட்சி பிரதான அலுவலகத்தை நேரில் அணுகி விண்ணப்பித்து பெயர் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

News October 6, 2024

பட்டாசு கடை வைக்க உடனே விண்ணப்பிக்கவும்

image

கோவை மாவட்டத்தில் வரும் 31.10.2024 அன்று தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விருப்பம் உள்ளவர்கள், உரிய ஆவணங்களுடன் www.tnesevai.tn.gov.in என்ற இனையதளத்தில் பதிவேற்றம் செய்து பதிவு செய்ததற்கான நகல் பெறவேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி இன்று தெரிவித்துள்ளார்

News October 5, 2024

பில்லூர் மூன்றாம் திட்டத்தில் பராமரிப்பு பணி

image

கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் பெறப்படும் பில்லூர் மூன்றாம் திட்டத்தில் உள்கட்டமைப்புகளில் 09.10.2024 அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் 09.10.2024 மற்றும் 10.10.2024 ஆகிய தினங்களில் குடிநீர் விநியோகம் தடை ஏற்படும். இதன் காரணமாக துடியலூர், வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி, காளப்பட்டி, விளாங்குறிச்சி, கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தடைபடும் என்றனர்.

News October 5, 2024

கோவை: மருமகனுக்கு 10 ஆண்டு சிறை

image

கோவை ரத்தினபுரியை சேர்ந்த தேவராஜ் சொத்து தகராறு காரணமாக 2021ஆம் ஆண்டு தனது மாமனார் கருப்பசாமியை தலையில் தாக்கியதில் உயிரிழந்தார். இதனையடுத்து தேவராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கு கோவை எஸ்சி, எஸ்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட தேவராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி விவேகானந்தன் தீா்ப்பளித்தாா்.

News October 5, 2024

கோவையில் போலி ரேஷன் கார்டுகளா?

image

கோவை மத்வராயபுரம் நியாயவிலைக்கடையில் போலி ரேஷன் கார்டு மூலம் பொருட்கள் வழங்கி வருவதாகவும், அப்பகுதியில் போலி ரேஷன் கார்டுகள் அதிகளவில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், புகார் தொடர்பாக ஆய்வு செய்த அதிகாரிகள் அதில் உண்மை இல்லை என கண்டறிந்துள்ளனர். மேலும், கோவை மாவட்டத்தில் போலி ரேஷன் கார்டு என்பது இல்லை எனவும் திட்டவட்டமாக அவர்கள் தெரிவித்தனர்.

News October 5, 2024

கோவையில் 5% ஊக்கத்தொகை அறிவிப்பு

image

கோவை மாநகராட்சியில், சொத்து வரி 6 சதவீதம் உயர்வு, அக். 1 முதல் அமலுக்கு வந்திருக்கிறது. ஏப். – செப். வரையிலான 6 மாதத்துக்கான முதல் தவணை சொத்து வரியை, செலுத்தாமல் இருந்தால், இனி ஒரு சதவீதம் அபராதம் செலுத்த வேண்டும், 2வது தவணைக்கான சொத்து வரியை அக். 30-க்குள் செலுத்தினால், 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.

News October 4, 2024

கோவையில் இதுவரை 53 நபர்கள் மீது குண்டாஸ்

image

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் இந்த வருடத்தில் இதுவரை 53 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

News October 4, 2024

அதிமுக ஆட்சியில் தான் டெங்குவால் அதிகம் பேர் உயிரிழப்பு

image

சிங்காநல்லூர் பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் தற்போது எங்கும் டெங்கு பாதிப்பு இல்லை. 2017ல் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் 65 பேர் உயிரிழந்தனர். இந்த வருடத்தில் டெங்கு இறப்பு என்பது ஆறு பேர் தான். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்காலத்தில் தான் டெங்குவால் அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர் என்றார்.

News October 4, 2024

கோவை: உதவித்தொகை பெற கலெக்டர் அழைப்பு

image

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் முழு நேர, பகுதி நேர ஆராய்ச்சிப் படிப்பு பயிலும் மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு ரூ.1 லட்சம் முதல்வரின் ஆராய்ச்சி உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து இத்திட்டத்தில் பயன்பெறலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!