India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. விடுமுறை நாள் என்பதால் பொதுமக்கள் பலரும் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வெளியில் செல்ல வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. பெரும்பாலும் வெளியில் செல்பவர்கள் மழைக்கான பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
கோவை வடவள்ளி அடுத்து மருதமலை கோவில் அமைந்துள்ளது. இன்று (அக்.13) ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகளவு பக்தர்கள் வருவர் என எதிர்பார்ப்பதால், நான்கு சக்கர வாகனங்களில் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. அதேநேரம் இரு சக்கர வாகனங்கள் மற்றும் மலை படிகள் வழியாக, கோவில் பஸ் மற்றும் கோவில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பஸ்கள் வாயிலாக கோவிலுக்குச் செல்லலாம் என, கோவில் நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது.
கோவை மாவட்ட சுகாதார துணை இயக்குநராக பணியாற்றி வருபவர் அருணா இவரை ஈரோடு மாவட்ட சுகாதார துணை இயக்குநராக தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இவர் திங்கள்கிழமை ஈரோட்டில் பதவியேற்க உள்ளார் என கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தில் கோரோனா தொற்று காலத்தில் பல்வேறு பணிகளை சிறப்பாக செய்தவர் என்று நற்பெயர் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் அமைந்துள்ள அரங்கில் வருகின்ற (15.10.2024) செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் தொழில் நிறுவனங்களுக்கான கடன் வசதியாக்க முகாம் நடைபெற உள்ளது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் பங்கேற்று பயன்படலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
கோவை வடவள்ளி பகுதியில் தனியார் மழலையர் பள்ளியை திறந்து இன்று(அக்.12) வைத்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எளிய பயணிகளுக்கு கட்டணத்தை உயர்த்தாமல் தரமான சேவையை ரயில்வே துறை அளித்து வருவதாகவும், விபத்துகளைப் பொறுத்தவரை மத்திய அரசு எச்சரிக்கையாக கையாளும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.
விஜயதசமியை முன்னிட்டு தங்களது குழந்தைகளுக்கு முதன் முதலில் கல்வி கற்பித்தலை தொடங்க பெற்றோர் முனைப்பு காட்டுவர். அந்த வகையில் கோவை ராம் நகர் ஸ்ரீஐயப்பன் பூஜா சங்கத்தில் வித்யாரம்பம் எனப்படும் தொடக்க கல்வி கற்பித்தல் நடைபெற்றது. இதை கலெக்டர் கிராந்தி குமார் பாடி தொடங்கிவைத்தார். அப்போது ஒரு குழந்தையின் கையைப் பிடித்து முதல் எழுத்தை துவக்கிவைத்தார்.
கோவை, புலியகுளம் பகுதியில் அதிவேகமாகச் சென்ற செப்டிக் டேங்க் லாரி சாலையோரம் நின்றிருந்த கார் மற்றும் சாலையில் நடந்து சென்றவர்கள் மீதும் மோதியது. இவ்விபத்தில், லாரியின் சக்கரத்தில் சிக்கி மருதாசலம் என்பவர் பரிதாப உயிரிழந்தார். டிரைவர் பிரவீன் என்பவரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்க (சீமா) தலைவர் மிதுன் ராம்தாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், குறு, சிறு நிறுவனங்களின் நடப்பு மூலதன கடனை முன்கூட்டியே கட்டி முடிப்பதற்கான கட்டணத்தின் மீதான தீர்வைக்கு விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய நிதியமைச்சகத்தின் இந்த நடவடிக்கைகளை சீமா வரவேற்கிறது. இது பெரும் ஆறுதலை அளித்துள்ளது என அதில் குறிப்பிட்டுள்ளார்.
சரவணம்பட்டி எல்ஜிபி நகரைச் சேர்ந்த, 23 வயது இளம் பெண்ணை மூன்று மாதங்களுக்கு முன், அப்பகுதியில் சண்டையிட்டுக் கொண்டிருந்த தெரு நாய்களில் ஒன்று கடித்துவிட்டது. அவர், ‘ரேபிஸ்’ நோய்க்கான ஊசி போடாமல் விட்டுவிட்டார். இதனால் அவரை, ‘ரேபிஸ்’ நோய் தாக்கியது. சிகிச்சைக்காக நீலாம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
முன்னாள் அதிமுக அமைச்சரும் கோவை தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ-வுமான எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலும், கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்திலும் ஆயுத பூஜை விழாவை கொண்டாடினார். சாமி படத்தை வைத்து, பழங்கள், பொறி, கடலை ஆகியவை வைத்து ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. இதில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.